Just In
- 10 hrs ago
Samsung Galaxy A32 5G விரைவில் இந்தியாவில்.. விலை இதுவாக தான் இருக்கக்கூடும்..
- 10 hrs ago
OnePlus 9E | OnePlus 9R பற்றி உங்களுக்கு தெரியுமா? இது என்ன புது மாடலா இருக்கு?
- 10 hrs ago
முதல்முறை இதில்தான் இருக்கு இந்த அம்சம்: நாய்ஸ் பட்ஸ் சோலோ இயர்போன்கள்- விலை குறைவுதான்!
- 11 hrs ago
108 எம்பி கேமராவுடன் வெளிவர தயாராகும் ரியல்மி 8 ஸ்மார்ட்போன்.. சுவாரசியமான டீசர் தகவல்..
Don't Miss
- News
தொழிலாளர் உரிமை ஆர்வலர் நோதீப் கவுர் கைது.. 'சொல்வது அத்தனையும் பொய்' - ஹரியானா போலீஸ்
- Movies
48வது பிறந்தநாள் காணும் கௌதம் மேனன்..குவியும் வாழ்த்து !
- Finance
Mphasis நிறுவன பங்குகள் விற்பனை.. தனி ஆளாக களத்தில் இறங்கும் கார்லைல்..!
- Automobiles
2021 ஸ்விஃப்ட் ஃபேஸ்லிஃப்ட் காரை விளம்பரப்படுத்த துவங்கியுள்ள மாருதி!! புதிய விளம்பர வீடியோ வெளியீடு
- Sports
2 நாளில் முடிவிற்கு வந்த டெஸ்ட்.. இங்கிலாந்தை தூசி தட்டிய இந்திய அணி.. அசர வைக்கும் "ஸ்பின்" வெற்றி!
- Lifestyle
இந்த அறிகுறிகள் உங்க கணவன் அல்லது காதலனிடம் இருந்தால் அவர் உங்களுடன் வாழும் ஆர்வத்தை இழந்துட்டாராம்!
- Education
ரூ.67 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
வாட்ஸ்அப் பிரைவசி பாலிசி: களத்தில் இறங்கிய இந்திய அரசு.!
அண்மையில் வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தப்பட்ட வாட்ஸ்அப்-ன் புதிய தனியுரிமைக் கொள்கையை (பிரைவசி பாலிசி) மாற்றியமைக்குமாறு வாட்ஸ்அப் நிறுவனத்தை இந்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. மேலும் இது குறித்து இந்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப
அமைச்சகமானது வாட்ஸ்அப் தலைமை நிர்வாக அதிகாரி வில் காட்கார்டுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது.

குறிப்பாக அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது என்னவென்றால், வாட்ஸ்அப்பின் மிகப்பெரிய பயனர் தளமாக இந்தியா உள்ளது என்றும், பின்பு அதன் சேவைகளுக்கான மிகப்பெரிய சந்தைகளில் இந்தியாவும் ஒன்றாகும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல் வாட்ஸ்அப் சேவை விதிமுறைகள் மற்றும் தனியுரிமைக் கொள்கையில் முன்மொழியப்பட்ட மாற்றங்கள் ஆனது இந்திய மக்களின் தேர்வு மற்றும் சுயாட்சிக்கான தாக்கங்கள் குறித்து கடுமையான கவலைகளை எழுப்புகின்றன என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இப்போது லேப்டாப்பிலும் கம்ப்யூட்டரிலும் Jio Tv பார்க்கலாம்.. எப்படித் தெரியுமா?

மேலும் முன்மொழியப்பட்ட மாற்றங்களை திரும்ப பெறவும், தகவல் தனியுரிமை, தேர்வு செய்வதற்கான சுதந்திரம் மற்றும் தரவு பாதுகாப்பு தொடர்பான அதன் அணுகுமுறையை மறுபரிசீலனை செய்யவும் இந்திய அமைச்சகம் வாட்ஸ்அப்பைக் கேட்டுக் கொண்டுள்ளது.

குறிப்பாக அந்த கடிதத்தில், இந்தியர்கள் முறையாக மதிக்கப்பட வேண்டும் என்றும், வாட்ஸ்அப் சேவை விதிமுறைகள் மற்றும் தனியுரிமைகளில் உள்ள ஒருதலைப்பட்சமான மாற்றங்கள் மற்றும் நியாயங்களும் ஏற்றுக்கொள்ளப்படாது என்றும் கூறப்பட்டுள்ளது.

ஆனால் பிப்ரவரி 8-ம் தேதி கட்டவிழ்த்துவிடப்படவிருந்த புதிய தனியுரிமைக் கொள்கையை மே 15 ஆம் தேதி வரை ஒத்திவைப்பதாக வாட்ஸ்அப் ஏற்கனவே அறிவித்துள்ளது. பின்பு எங்களது சமீபத்திய அப்டேட்டில் எவ்வளவு குழப்பம் உள்ளது என்பதை நாங்கள் பலரிடமிருந்து கேள்விப்பட்டிருக்கிறோம். ஏராளமான தவறான தகவல்கள் பயனர்களிடம் கவலையை ஏற்படுத்தியுள்ளன, எங்கள்
கொள்கைகளையும் உண்மைகளையும் புரிந்துகொள்ள அனைவருக்கும் உதவ நாங்கள் விரும்புகிறோம்." என்றும் வாட்ஸ்அப் நிறுவனம் மற்றொரு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

அதேபோல் வாட்ஸ்அப் நிறுவனம் எண்ட் டூ எண்ட் என்க்ரிப்ஷனில் உறுதியுடன் இருப்பதாகவும், இந்த புதுப்பிப்பு பேஸ்புக்கோடு தரவைப் பகிரும் திறனை விரிவாக்குவதில்லை என்றும் வாட்ஸ்அப் கூறியுள்ளது.
-
92,999
-
17,999
-
39,999
-
29,400
-
38,990
-
29,999
-
16,999
-
23,999
-
18,170
-
21,900
-
14,999
-
17,999
-
42,099
-
16,999
-
23,999
-
29,495
-
18,580
-
64,900
-
34,980
-
45,900
-
17,999
-
54,153
-
7,000
-
13,999
-
38,999
-
29,999
-
20,599
-
43,250
-
32,440
-
16,190