ஏலியனை கண்டதாக மோடி ஆபீஸ்க்கு இ-மெயில்.!
இந்நிலையில் பிரதமர் மோடியின் அலுவலகத்திற்கு ஒருவர் ஏலியன்களை கண்டதாக இ- மெயில் அனுப்பி உள்ளார். இதுகுறித்து, பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் புனே நகரில் ஏலியன்கள் நடமாட்டம் உள்ளதாக என்று பலரைய
ஏலியன்கள் எனப்படும் வேற்றுகிரக வாசிகள் குறித்து அவ்வப்போது, பல்வேறு தகவல்கள் உலா வந்து கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் பிரதமர் மோடியின் அலுவலகத்திற்கு ஒருவர் ஏலியன்களை கண்டதாக இ- மெயில் அனுப்பி உள்ளார்.

இதுகுறித்து, பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் புனே நகரில் ஏலியன்கள் நடமாட்டம் உள்ளதாக என்று பலரையும் இந்த விஷயம் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

ஏலியன்கள்:
மனிதர்களை போல உடல் மற்றும் உருவ அமைப்பில் இருப்பவர்கள் ஏலியன். இவர்கள் விஞ்ஞான ரீதியாகவும், தொழில் நுட்ப ரீதியாகவும் மனிதர்களை காட்டிலும் சிறப்பானவர்களாக இருப்பார்கள் என்று கூறப்படுகின்றது.
இது வரை யாரும் ஏலியன்களை சந்திக்கவில்லை. வேற்று கிரக வாசிகள் பூமிக்கு வந்து சென்றதாக கூறப்படுகின்றது.

ஸ்டீப்பன் ஹாங்கிங்ஸ்:
இங்கிலாந்தில் பிறந்தவரும், அமெரிக்காவில் வசித்தவருமான மாற்று திறனுடைய விண்வெளி ஆராய்ச்சியாளர் ஸ்டீப்பன் ஹாங்கிங்ஸ். இவர் தற்போது மறைந்து இருந்தாலும், வேற்றுகிரக வாசிகள் குறித்து பல்வேறு ஆராய்ச்சி கட்டுரைகளை எழுதியுள்ளார்.
வேற்றுகிரக வாசிகள் இருப்பது உண்மை என்றும். அவர்கள் இந்த பிரபஞ்சம் முழுவதும் நிறைந்து இருக்கின்றார்கள். அவர்கள் மனிதர்களை விட சக்தி படைத்து இருப்பார்கள். மனிதர்களை தொடர்பு கொள்வார்கள். அவர்களுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம் என்றும் எழுதியுள்ளார்.

ஏலியன்கள் குறித்து ஆராய்ச்சி:
ஸ்டீப்பன் ஹாங்கிங்ஸ் மாற்று திறனாளியாக இருந்த போதும், கற்பனைக்கு எட்டாத வகையில் ஏலியன்கள் குறித்து ஆராய்ச்சி கட்டுரைகளை எழுதியுள்ளார்.
இதுகுறித்து உலகத்தில் உள்ள பல்வேறு விஞ்ஞானிகளையும் ஆச்சரியப்படுத்தியது.
அவர்களால், எழுந்தும், பேசவும், முடியாமல் வீல் சேரில் இருந்த போது, அவர் பேச நினைப்பதை ஒரு கருவியில் பொருத்தி எழுத்து வடிவமாகவும், பேச்சு வடிவமாகம் காட்டும் கருவி பொருத்தப்பட்டது.

ரஷ்யாவில் உடல்:
வட அமெரிக்காவின் பெரு நாட்டில் இருந்து பதப்படுத்தப்பட்ட நிலையில் ஏலியன் உடல் கண்டெடுக்கப்பட்டது. இதை ரஷ்யாவுக்கு கொண்டு வரப்பட்டு, ஆராய்ச்சி நடத்திய போது, அது மனித உடல் இல்லை. இது 5ம் நூற்றாண்டை சேர்ந்தது என்றும். தெரியவந்தது. மேலும், கால், கைகளில் 3 விரல் நீண்டும் இருந்தன

ஏலியன் ஸ்பேஸ் கிராப்ட்:
ஏலியன் ஸ்பேஸ் கிராப்ட் எனப்படும் வேற்றுகிரக வாசிகளின் வாகனம் ரஷ்யாவின் பனிப்பாறைகளுக்கிடையே கண்டுபிடிக்கப்பட்டது. இதை உலகின் பல்வேறு நாடுகளை சேந்த விஞ்ஞாகளும் ஆராய்ச்சி செய்து உறுதிப்படுத்தினர்.

புனேவில் ஏலியன்:
இந்தியாவில் புனே நகரின் கோத்ரூட் பகுதியில் ஏலியன்களை கண்டதாக ஒருவர் பிரதமர் மோடியின் அலுவலத்திற்கு இ-மெயில் அனுப்பினார். இந்த செய்தி அனைத்து ஊடங்களிலும் வந்து அதிர வைத்தது.

விசாரணை:
இதுகுறித்து பிரதமர் அலுவலகம் கூறியபடி, புனே காவல்துறை விசாரணை நடத்த, மகாராஷ்டிரா உத்தரவிட்டது. இதையடுத்து, விசாரணை நடத்திய புனே நகரின் சிங்காடு சாலை காவல்நிலைய போலீசார், கடந்த சில ஆண்டுகளாக, அந்த நபர் மனநலம் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தது.

ஏலியன் உருவம் எப்படி தெரிந்தது:
வீட்டை ஒட்டி இருந்த மரத்தின் நிழலை ஜன்னலில் கண்டு, ஏலியன்களை பார்த்ததாக கூறியிருப்பதாகவும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து விசாரணையும் நடக்கின்றது.

அதிரவிட்டுள்ளது:
பிரதமரின் அலுவலகத்திற்கே ஏலியன்களை கண்டதாக இ-மெயில் அனுப்பி இருப்பது அனைவரையும் சற்று வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்த செய்தி அனைத்து ஊடகங்களிலும் செய்தியாகி வந்து கொண்டிருக்கின்றது.


Click it and Unblock the Notifications