Just In
- 3 hrs ago எக்கச்சக்கமா குவியுது ஆர்டர்.. 200MP கேமரா.. 66W சார்ஜிங்.. ஹானர் போனுக்கு ரூ.5000 விலைகுறைப்பு.. எந்த மாடல்?
- 11 hrs ago பட்ஜெட்ல பக்குவமா வாங்கலாம்.. ரூ.15000 விலைக்குள்.. பெஸ்ட் கேமரா.. பெர்ஃபார்மென்ஸ் Mobile.. எந்த மாடல்கள்?
- 13 hrs ago மலிவு விலை.. மல்டிஃபங்க்ஷன் Smartwatch.. இன்பில்ட் நேவிகேஷன், ப்ளூடூத் கால்லிங்.. இன்னும் ஏராளம்.. எந்த மாடல்?
- 15 hrs ago ஒரே ரீசார்ஜ்.. 84 நாட்களுக்கு நோ டென்ஷன்.. தினமும் 3ஜிபி டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. அசத்தும் BSNL..
Don't Miss
- Lifestyle அனுமன் ஜெயந்தியன்று உருவாகும் அரிய யோகங்கள்: இன்று இந்த 3 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப் போகுது..
- News சென்னைக்கு நிகராக.. ஓசூர், பெருந்துறை, கோவை, தூத்துக்குடியில் நடக்கும் சம்பவம்.. மாஸ் தொழிற்புரட்சி
- Finance குழந்தைகளின் பாதுகாப்பு முக்கியம்.. டிக்டாக்-ஐ தடை செய்த அடுத்த முக்கிய நாடு..!
- Movies பிளாஸ்டிக் சர்ஜரி செய்தாரா யாஷிகா ஆனந்த்?.. அவரே கொடுத்த தரமான பதிலடி
- Sports IPL 2024 : ஐபிஎல் வரலாற்றிலேயே வேறு எந்த வீரரும் செய்யாத செஞ்சுரி சாதனை படைத்த ஜெய்ஸ்வால்
- Automobiles இந்த கிளட்ச் இல்லாத கியர் பைக் ஏன் இப்பொழுது விற்பனையில் இல்லை தெரியுமா? இதுக்கு பின்னாடி இவ்வளவு நடந்துச்சா?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
அம்பலம் : அமெரிக்காவின் குருட்டுத்தனம்; பலியான அப்பாவி மக்கள்..!
இரத்ததிலும், யுத்தத்திலும் 'அரசியல்' செய்யும் உலக நாடுகளுக்கெல்லாம் சிம்ம சொப்பனமாய் விளங்கும் நாடான அமெரிக்காவின் கைகள் முழுக்க முழுக்க இரத்த கறை படிந்த ஒன்றுதான் என்பதை மறுபடியும் நிரூபிக்கும் ஆதாரங்கள் வெளியாகி உள்ளன.
பாகம் 1 : அமெரிக்கா செய்த 'வரலாற்று துரோகம்'..!
பாகம் 2 : அமெரிக்கா செய்த 'வரலாற்று துரோகம்'..!
ஆளில்லா ட்ரோன் விமானம் என்ற அதிநவீன தொழில்நுட்பக் கருவிகளை கொலை மிருகமாய் பயன்படுத்தி, அப்பாவி மக்களை கொன்று அமெரிக்கா கொன்று குவித்துள்ளதை அம்பலப்படுத்தியுள்ளது, 'தி இன்டார்செப்ட்' (The Intercept) அறிக்கை ஒன்று..!
பலமுறை தாக்குதல் :
அமெரிக்கா, ஆளில்லா ட்ரோன் விமானங்கள் மூலம் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், ஏமன் மற்றும் சோமாலியா ஆகிய நாடுகளில் பலமுறை தாக்குதல் நடத்தி உள்ளது.
இலக்கு :
அது போன்ற தாக்குதல்களில் பெரும்பாலும் தீவிரவாதிகள் தான் அமெரிக்காவின் இலக்கு என்றும், மிகவும் அரிதாக தான் பொதுமக்கள் காயப்படுகிறார்கள் என்றும் அமெரிக்கா கூறி வந்தது.
அறிக்கை :
அப்படியாக சமீபத்தில் ஆப்கானிஸ்தானில் நடத்தப்பட்ட ட்ரோன் விமான தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் 90% பேர் அப்பாவி மக்கள் என்ற அறிக்கை அம்பலாமாகி உள்ளது.
அதிர்ச்சி :
இந்த அதிர்ச்சியான அறிக்கையை தி இன்டார்செப்ட் (The Intercept), தி ட்ரோன் பேப்பர் (The Drone Paper) என்ற தலைப்பில் வெளியிட்டு உள்ளது.
இலக்கு இல்லை :
அதாவது, அமெரிக்காவின் 'இலக்கு எங்கு இல்லையே அங்கு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது' என்கிறது அந்த அறிக்கை.
ஆப்ரேஷன் ஹேமேக்கர் :
ஆப்கானிஸ்தானின் வடகிழக்கு பகுதியில் அமெரிக்கவால் நடத்தப்பட்ட ட்ரோன் விமான தாக்குதல் தான் - ஆப்ரேஷன் ஹேமேக்கர் (Operation Haymaker).
200 பேர் :
2012 ஜனவரி முதல் 2013 பிப்ரவரி வரை நடத்தப்பட்ட அந்த தாக்குதலில் சுமார் 200 பேர் கொல்லப்பட்டனர்.
உளவுத்துறை :
அந்த 200 பேரில் வெறும் 35 பேர் மட்டும் தான் அமெரிக்க உளவுத்துறையால் கொல்ல வேண்டும் என்று குறி வைக்கப்பட்டவர்கள் ஆவார்கள்.
விளக்கம் :
அவர்களை தவிர்த்து கொல்லப்பட்ட 165 பேர்கள் அனைவருமே அப்பாவி மக்கள் என்று தி இன்டர்செப்ட் அறிக்கை விளக்கம் அளிக்கிறது.
மோசம் :
மிகவும் பலவீனமான தொழில்நுட்ப வசதிகளை கொண்ட ஏமன் மற்றும் சோமாலியாவில் நடத்தப்பட்ட ட்ரோன் விமான தாக்குதல்களில் கூட இந்த அளவு மோசமாக அப்பாவி மக்கள் கொல்லப்படவில்லை என்கிறது அந்த அறிக்கை.
உளவுத்துறை அமைப்புகள் :
அமெரிக்கவை சேர்ந்த உளவுத்துறை அமைப்புகள் வழங்கிய தகவல்களில் இருந்து தான் தி இன்டர்செப்ட் அறிக்கையானது உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆளில்லா ட்ரோன் விமான தாக்குதல் :
மேலும் கடந்த 2009-ஆம் ஆண்டில் இருந்து, இது போன்ற ஆளில்லா ட்ரோன் விமான தாக்குதல் மூலம் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், ஏமன் மற்றும் சோமாலியா போன்ற நாடுகளில் உள்ள அப்பாவி மக்களை, அமெரிக்கா கொலை செய்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
திருமண நிகழ்ச்சி :
ஏமன் நாட்டில், டிசம்பர் 2013-ஆம் ஆண்டு அமெரிக்க ட்ரோன் ஒன்றால் தவறாக நடத்தப்பட்ட தாக்குதலில் ஒன்றில் திருமண நிகழ்ச்சியை முடித்து விட்டு திரும்பிய கார் ஒன்று குண்டு வீசி அழிக்கப்பட்டது.
தீவிரவாதிகள் :
அல் காயிதா (al Qaeda) மற்றும் தாலிபான் (Taliban) இயக்கத்தை சேர்ந்த தீவிரவாதிகள் என்று தவறான அந்த தாக்குதலுக்கு ஆளாகி 14 அப்பாவி மக்கள் உயிர் இழந்தனர்.
குருட்டுத்தனம் :
பாகிஸ்தானை சேர்ந்த பெற்றோர்கள் பலர், அமெரிக்காவின் குருட்டுத்தனமான ட்ரோன் தாக்குதலுக்கு அஞ்சி, தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாமல் வீடுகளுக்குள் பாதுகாப்பாக வைத்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சிறுமி :
அப்படியாக பாகிஸ்தானில் நடத்தப்பட்ட தாக்குதலில் சிறுமி ஒருவள், தன் குடும்பத்தினர் அனைவரையும் இழந்தாள்.
எதிர்ப்பு :
அதை அமெரிக்காவின் ஆளில்லா ட்ரோன் விமானங்களுக்கு காட்சிப்படுத்தும் வகையில் அந்த சிறுமியின் புகைப்படத்தை பெரிய அளவில் பாகிஸ்தான் மக்கள் காட்சிப்படுத்தி எதிர்ப்பு தெரிவித்தனர்.
பாகிஸ்தான் :
அமெரிக்காவின் இந்த ட்ரோன் விமான தாக்குதலை எதிர்த்து பாகிஸ்தானில் போராட்டங்களும், எதிர்ப்புகழும் கிளம்பின.
பழிக்கு பழி :
செப்டம்பர் 11, இரட்டை கோபுர தகர்ப்புக்கு பின்தான் ஆளில்லா ட்ரோன் விமானங்கள் மூலம், தீவிரவாதிகளுக்கு எதிராக இது போன்ற தாக்குதலில் அமெரிக்கா ஈடுபட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
தமிழ் கிஸ்பாட் :
மேலும் பல தொழில்நுட்ப செய்திகளுக்கு, தொடருங்கள் - தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470