சரியான நேரத்தில் தனித்துவமான கருவியை உருவாக்கிய கும்பகோணம் கல்லூரி மாணவிகள்.!
இப்போது வரும் புதிய தொழில்நுட்பங்கள் நமக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக புதிய தொழில்நுட்பங்கள் மூலம் பல்வேறு வேலைகள் மிகச் சுலபமாக முடிகிறது என்றே கூறலாம். அதன்படி கும்பகோணம் பொறியியல் கல்வி மாணவிகள் தனித்துவமான ஒரு கருவியை வடிமைத்து அசத்தியுள்ளனர் என்று தான் கூறவேண்டும்.

அதாவது தமிழ்நாடு உள்ளிட்ட 16 மாநிலங்களில் கொரோனா பாதிப்புகள் வேகமாக உயர்ந்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதுவும் கடந்த சில நாட்களாக 4 லட்சத்துக்கும் அதிகமான எண்ணிக்கைகள் பதிவாகின. குறிப்பாக கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்தி வருகின்றன.

எனவே ஆபத்தை உண்டாக்கும் இந்த நோய் கட்டுப்பாட்டு பகுதிகளுக்குள் சென்றுமின்பயனீட்டு அளவு கணக்கிட முடியாத சூழ்நிலையில் மின்வாரிய ஊழியர்கள் உள்ளனர். எனவே மின்வாரிய ஊழியர்களுக்கு உதவியாக புதிய கருவி ஒன்றை கும்பகோணம் பொறியியல் கல்வி மாணவிகள் உருவாக்கியுள்ளனர்.

அதாவது கொரோனா பாதித்த பகுதிகளில் மின் கணக்கீட்டாளர் வீடு வீடாக செல்லாமல், ஒவ்வொரு வீடுகளிலும் எவ்வளவு யூனிட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளது, பின்பு அதற்கான கட்டண விவரம் போன்ற அனைத்தும் மின் நுகர்வோரின் செல்போனுக்கு குறுஞ்செய்தியாக வரும் புதிய கருவியை கும்பகோணம் தனியார் பொறியியல் கல்லூரி மாணவிகள் வடிவமைத்துள்ளனர்.

குறிப்பாக மாணவிகள் கண்டுபிடித்துள்ள இந்த கருவியின் முக்கிய சிறப்பு என்னவென்றால், உரிய காலத்தில் பணம் கட்டாத பயனீட்டாளரின் மின் இணைப்பை துண்டிக்கலாம், அதன்பின்பு துண்டிக்கப்பட்ட இணைப்பை மீண்டும் வழங்கலாம் என்று கூறப்படுகிறது.

கும்பகோணத்தைச் சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவிகளான சுபத்ரா, சப்ரின் மற்றும் பிரபா ஆகியோர் தான் இந்த புதிய கருவியை அறிமுகப்படுத்தியுள்ளனர்.. மேலும் இந்த கருவியின் பெயர் ஸ்மார்ட் பவர் டிஸ்ட்ரிபியூஷன் (Smart Power Distribution)என்று கூறப்படுகிறது.
News Source: news18.com


Click it and Unblock the Notifications