தெலுங்கானா டி-வால்லெட்டை அறிமுகப்படுத்துகிறது : கே.டி. ராமா ராவ்.!
தெலுங்கானா அதிகாரப்பூர்வ மின்-வலையை துவங்கியது.!
இந்த தளத்தை பயன்படுத்தி, குடிமக்கள் பல்வேறு சேவைகளை நோக்கி அரசாங்க மற்றும் தனியார் அமைப்புகளுக்கு பணம் செலுத்த முடியும். ஓய்வூதியங்கள், புலமைப்பரிசில் மற்றும் சிறப்பு ஊதியங்கள் போன்ற அரசாங்கத்தின் பல நன்மைகளை பெற முடியும்.

இந்தியாவின் தனி அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) தலைவர் ஜே. சத்தியநாராயண மற்றும் தெலுங்கானா தகவல் தொழில்நுட்ப அமைச்சர் கே.டி. ராமா ராவ் வியாழக்கிழமை ஹைதராபாத்தில் டி-வால்ட் முறையாக அறிமுகப்படுத்தினார், இது பல்வேறு வரவேற்ப்பை பெற்றுள்ளது.
டிஜிட்டல் கட்டண விருப்பம் ஆன்லைன் இணைய உலாவி, ஸ்மார்ட்போன், போன்ற அனைத்தையும் பயன்படுத்தி மிக எளிமையாக பயன்படுத்தலாம், இவற்றில் மிக எளிமையான செயல்முறை உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆதார் +பயோமெட்ரிக் மற்றும் ஆதார் + ஒடிபி மூலம் டி-வால்லெட்டை செயல்படுத்தமுடியும் என மைக்ரோசாப்ட் அமைப்பு தெரிவித்துள்ளது, இவற்றில் பல நண்மைகள் உள்ளது.
ஹைதராபாத் அடிப்படையிலான பரிவர்த்தனை ஆய்வாளர்கள், டிஜிட்டல் கட்டண சேவை துவக்கம் செய்து, நிதி சேர்ப்பை அடைய மற்றும் வங்கி கணக்கை ஆதார் அடிப்படையாகக் கொண்டு பயனர் பரிவர்த்தனைகளை அதிகரிக்க முயற்ச்சிசெய்துவருகிறது.
தெலுங்கானா மாநிலம் தனது மின்-சேவா, தளங்கள் மூலம் சேவைகளின் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வு அளிப்பதில் ஏற்கனவே வெற்றிகொண்டது. என தெலுங்கானா மாநிலத்தின் நிதி செயலாளர், தலைவர் கே. ராமகிருஷ்ணா தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications