Pubgயே கதி: ரூ.16 லட்சத்தை காலி செய்த மகன்- மெக்கானிக் ஷாப்பில் வேலைக்கு சேர்த்த தந்தை!
ஆன்லைன் வகுப்பு படிப்பதாக கூறி மொபைல் போனில் முழு நேரமும் பப்ஜி விளையாடி மொத்தம் ரூ.16 லட்சத்தை மகன் காலி செய்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது தந்தை மகனை மெக்கானிக் கடையில் வேலைக்கு சேர்த்துவிட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.

கொரோனா தொற்று பரவல்
கொரோனா தொற்று பரவலை தடுக்க நாடு முழுவதும் தொடர்ந்து தளர்வுகளோடு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து பொதுமக்கள் வீட்டிலேயே தங்கும் நிலை ஏற்பட்டு வருகிறது. இதில் பெரும்பாலானோர் தங்களது நேரத்தை டிவியிலும், மொபைல்போனிலும் செலவிட்டு வருகின்றனர்.

பிரதானமாக இருந்த PUBG விளையாட்டு
ஸ்மார்ட்போன்களில் PUBG விளையாட்டு பிரதானமாக இருந்துள்ளது. பப்ஜி விளையாடுவதில் ஏணையோர் தங்களது நேரத்தை செலவிட்டு வருகின்றனர். வீட்டுக்குள் அமர்ந்துக் கொண்டோ அல்லது நண்பர்களோடு அமர்ந்து கொண்டோ திடீரென ஒருவர் அவனை சுடு மெடிகிட் கொண்டுவா அப்படி இப்படி என காதில் ஹெட்போன் மாட்டிக் கொண்டு கத்தும் நிகழ்வையும் நாம் பார்த்திருப்போம்.

தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை
பப்ஜி விளையாட்டில் பலரும் தங்களை அடிமைப்படுத்தி கொள்கிறார்கள். இதையடுத்து அந்த விளையாட்டு தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை பல்வேறு தரப்பினராலும் முன் வைக்கப்பட்டது. இதில் நேரத்தை செலவிட்டு வந்த சிலர் நாட்டுக்குள் மாரடைப்பு ஏற்பட்டு உயரிழந்த சம்பவங்களும் அரங்கேறியுள்ளது.

பப்ஜி விளையாட்டில் 17 வயது சிறுவன்
இந்த நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள 17 வயது சிறுவன் பப்ஜி விளையாட்டில் ஆர்வமாக தன்னை ஈடுபடுத்தியுள்ளார். தனது தாயின் செல்போனை எடுத்து ஆன்லைன் வகுப்பு படிக்கப்போவதாக கூறி முழு நேரமும் பப்ஜி ஆடி நேரத்தை செலவிட்டு இருக்கிறார்.

ரூ.16 லட்சத்தை செலவு செய்த சிறுவன்
பப்ஜி விளையாட்டில் அடுத்த கட்டத்திற்கு செல்லவும், புதிய அப்ரேடுகள் பெறுவதற்கும் தனது தந்தை சேர்த்து வைத்திருந்த மூன்று வங்கி கணக்குகளில் இருந்து சுமார் ரூ.16 லட்சத்தை செலவிட்டுள்ளார். அவர் பணத்தை பப்ஜி விளையாட்டுக்கு செலவிடும் போதெல்லாம் வங்கியில் இருந்து வரும் எஸ்எம்எஸ்களை யாருக்கும் தெரியாமல் அளித்திருக்கிறார்.

மருத்துவ பரிசோதனைக்காக வைத்திருந்த பணம்
சிறுவனின் தந்தை மூன்று வங்கிக் கணக்கில் பணம் சேர்த்ததன் காரணம் அவர்களது குடும்பத்தின் எதிர்காலம் மற்றும் மருத்துவ பரிசோதனைக்காக சேகரித்து வைத்துள்ளார்.

போலீஸில் புகார் அளித்த தந்தை
இந்த நிகழ்வு குறித்து அறிந்த சிறுவனின் தந்தை இதுகுறித்து போலீஸில் புகார் அளித்துள்ளார். ஆனால் இதை திரும்பப் பெற முடியாது என காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செயலால் ஆத்திரமடைந்த அவர் தனது மகனை மெக்கானிக் கடையில் பணிக்கு சேர்த்திருக்கிறார். மேலும் தனது மகன் பப்ஜியில் அடிமையாகிவிடக் கூடாது என இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிகிறது.

பப்ஜியை தடை செய்ய வேண்டும்
சில தினங்களுக்கு முன்பு இந்திய அரசு 59 சீன செயலிகளை தடை செய்து அறிவித்தது. அதேபோல் சிறுவர்கள் முதல் இளைஞர்கள் பெரியவர்கள் என பல்வேறு தரப்பினரின் மூளையை சிதைத்து அடிமையாக்கி வரும் பப்ஜி விளையாட்டுக்கும் தடை விதிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications