Home
News

Tata நிறுவனம் இந்தியாவில் செயற்கைக்கோள் பிராட்பேண்ட் செயல்பாடுகளை திட்டமிடுகிறதா? இதோ முழு விவரம்.!

டாடா குழுமம் உலகெங்கிலும் உள்ள நிறுவனங்களில் ஒரு மிக முக்கியமான இந்திய வணிக நிறுவனங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. இக்குழுவில் பொருளாதாரத்தின் பல்வேறு துறைகளில் பல நிறுவனங்கள் மற்றும் துணை நிறுவனங்களாகச் செயல்பட்டு வருகிறது. இப்போது, ​​டாடா குழுமம் டெலிசாட் நிறுவனத்துடன் இணைந்து இந்திய செயற்கைக்கோள் பிராட்பேண்ட் சந்தையின் ஒரு பகுதியை எடுக்க கவனம் செலுத்துவது போல் செய்திகள் வெளியாகியுள்ளது.

Tata நிறுவனத்தின் செயற்கைக்கோள் பிராட்பேண்ட் சேவை இந்தியாவில்லா?

பிசினஸ்லைனின் அறிக்கையின்படி, டாடா குழுமம் மற்றும் டெலிசாட் இரண்டும் இந்தியாவில் செயற்கைக்கோள் பிராட்பேண்ட் சேவைகளை வழங்குவதற்கான தங்கள் மூலோபாயத்தை இறுதி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரியாதவர்களுக்கு, டெலிசாட் ஒரு கனேடிய செயற்கைக்கோள் தகவல் தொடர்பு சேவை நிறுவனம்.

டாடா குழுமம் மற்றும் டெலிசாட் ஆகியவை இந்தியாவில் செயற்கைக்கோள் பிராட்பேண்ட் சேவைகளை வழங்கும் திட்டங்கள் குறித்து விரைவில் உறுதியான அறிக்கை ஒன்றைக் கொண்டு வர உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்டார்லிங்க் மற்றும் ஒன்வெப் போன்ற நிறுவனங்கள் இந்திய சந்தைக்கு வருவதற்கான தங்கள் விருப்பத்தை அறிவித்த நிலையில், சாட்காம் துறையைச் சுற்றியுள்ள உற்சாகம் தற்பொழுது அதிகரித்துள்ளது.

தனியார் வீரர்களை சாட்காம் துறையில் செல்ல அரசாங்கம் அனுமதித்த காலத்திலிருந்து, பல நிறுவனங்கள் இந்தியச் சந்தையில் தங்கள் வருகையைத் திட்டமிட்டு வருகின்றன. டாடா குழுமத்தின் துணை நிறுவனமான நெல்கோ செப்டம்பர் 2020 முதல் டெலிசாட்டுடன் கூட்டு சேர்ந்துள்ளது என்பது கவனிக்கத்தக்கது. இதனால், இரு நிறுவனங்கள் சேர்ந்து தங்கள் செயற்கைக்கோள் பிராட்பேண்ட் சேவைகளை டெலிசாட்டின் லோ எர்த் ஆர்பிட் (லியோ) செயற்கைக்கோள்களை மேம்படுத்துகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

தொழில்துறையில் நடந்து வரும் மிகப்பெரிய விவாதங்களில் ஒன்று செயற்கைக்கோள் ஸ்பெக்ட்ரம் ஏலம் விடப்பட வேண்டுமா? அல்லது வேண்டாமா? என்பதுதான். வழக்கமான ஏலங்களில் செயற்கைக்கோள் ஸ்பெக்ட்ரம் ஏலம் விடப்பட வேண்டும் என்று சிலர் நம்புகிறார்கள். மேலும் சிலர் செயற்கைக்கோள் சேவைகளுக்கு மைக்ரோவேவ் ஸ்பெக்ட்ரம் ஏலம் எடுப்பதில் எந்த அர்த்தமும் இல்லை என்று நம்புகிறார்கள்.

அது எதுவாக இருந்தாலும், தேவையான கொள்கைகளை இந்திய அரசு கொண்டு வரும் வரை காத்திருப்பு இன்னும் நடந்து கொண்டிருக்கிறது. அமேசானைச் சேர்ந்த ஒன்வெப், ஸ்டார்லிங்க், மற்றும் ப்ராஜெக்ட் ஜூனிபர் உள்ளிட்ட நிறுவனங்கள் அரசாங்கம் கொள்கைகளைக் கொண்டு வந்தவுடன் இந்தியாவில் செயற்கைக்கோள் பிராட்பேண்ட் சேவைகளை வழங்கும் திட்டங்களை உருவாக்கி வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. முன்னேற்றங்களிலிருந்து, சாட்காம் துறை இந்தியாவில் ஆரோக்கியமான போட்டியைக் காணும் என்று நம்பப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Tata Group and Telesat Are Planning To Launch Satellite Broadband Operations in India : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X