பழைய ரூ.500-ஐ தள்ளு, ரூ.500, ரூ.494, ரூ.496, ரூ.495/-க்கு ஆபர்களை அள்ளு.!
ரூ.500/- நோட்டுக்கு தடையின் விளைவுவாக டாடா டோகோமோ நிறுவனம் ரூ.500, ரூ.494, ரூ.496 மற்றும் ரூ.495/- என பல புதிய திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது.
இந்திய அரசு செல்லாது என்று கூறி தடை செய்யப்பட்ட தாள்களின் விலையில் ரீசார்ஜ் செய்ய அனுமதிக்க முடிவு செய்துள்ளது. அதனை தொடர்ந்து தனியார் தொலைத் தொடர்பு நிறுவனமான டாடா டொகோமோ தெலுங்கானா மற்றும் ஆந்திர பிரதேசம் பகுதியில் உள்ள தன பயனர்களுக்கு ஒரு புதிய திட்டத்தை கொண்டு வர உள்ளது.
இந்த புதிய திட்டத்தின் கீழ் நீங்கள்ரூ.500/-க்கு ரீசார்ஜ் செய்ய உங்களுக்கு ரூ.600/க்கான பேச்சு நேரம் கிடைக்கும் அதாவது விலையை விட 20 சதவீதம் கூடுதல் டால்க் டைம். மேலும் டோகோமோ நிறுவனம் இதே போல் மற்ற சில திட்டங்களையும் முன்னெடுத்துள்ளது.

ரூ.494/-
மற்றொரு பேக் ஆக ரூ.494/- அறிமுகமாகியுள்ளது. இது 30 நாட்கள் வரம்பற்ற அழைப்புகளை வழங்குகிறது. எனினும், வரம்பற்ற அழைப்புகளானது உள்ளூர் இலக்கங்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும், அதாவது ஒரே ஹோம் சர்கிலில் இருக்கும் உள்ளூர் இலக்கங்களுக்கு மட்டும்.

ரூ.496/-
மற்றொரு புதிய பேக் ரூ.496/-க்கு கிடக்கிறது. இது ரூ.250/- மதிப்புள்ள பேச்சு நேரம் மற்றும் 5ஜிபி அளவிலான 3ஜி டேட்டா ஆகியவைகளை60 நாள்கள் வழங்கும் ஒரு காம்போ பேக் ஆகும்.
புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

ரூ.495/-
அதிக அளவிலான தரவு பயன்பாடு கொள்ளும் பயனர்கள் ரூ.495/- ரீசார்ஜ் செய்வதின் மூலம் 90 நாட்கள் செல்லுபடியாகும் 10ஜிபி அளவிலான 3ஜி டேட்டவை அனுபவிக்க முடியும்.

டிசம்பர் 15 வரை மட்டுமே
இந்திய அரசு பழைய தாள்களை கொண்டு ரீசார்ஜ் செய்ய டிசம்பர் 15 வரை மட்டுமே பயனர்களை அனுமதிக்கிறது மதிப்பு.அப்படியாக இந்த புதிய திட்டங்கள் டிசம்பர் 15 அன்றோடு காலாவதியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க
ஜியோ பயனாளியாக இல்லாமலேயே ஜியோ ஆப்ஸ்களை இலவசமாக அணுகலாம், எப்படி?


Click it and Unblock the Notifications