வெளி மாநிலங்களிலிருந்து வருவோருக்கு நற்செய்தி: உடனடி இ பாஸ்.! முழுவிவரம்.
இந்த கொரோனா வைரஸ் முதலில் ஜலதோஷம், உடல் வலி, இருமல், தும்மல், காய்ச்சல், நெஞ்சுவலி கடைசியில் மரணம் வரை ஏற்பட வாய்ப்பு உள்ளது. குறிப்பாக இது லேசான காய்ச்சலில்தான் இது துவங்கும் எனக் கூறப்படுகிறது.

கொரோனா வைரஸ் தொற்று இருப்பவர்களுடன் நேரடி தொடர்பு வைத்திருந்தால் வைரஸ் தொற்று வேகமாக பரவும் அபாயம் இருக்கிறது. இருப்பினும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளை நேரடியாக சோதித்து பார்க்க வேண்டிய கட்டாயத்தில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

சமீபத்தில் தமிழக முதலமைச்சர் பழனிச்சாமி இ-பாஸ் விதிமுறைகளில் சில தளர்வுகளை அறிவித்தார். தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த நிலையில் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் கட்டாயம் என்ற பழைய நிலை இல்லாமல் இருக்கிறது. இது ஆபத்தை ஏற்படுத்தக் கூடும் என்று மருத்துவர்கள் ஒரு புறம் எச்சரித்துள்ளனர்.

இந்த நிலையயில் வணிக நோக்கில் வெளி மாநிலங்களில் இருந்து தமிழகம் வரும் தொழிற்துறையினருக்கு, பாஸ் வழங்கப்படும்
என்று தமிழகம் அரசு தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்து.

மேலும் இது குறித்து தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா வெளியிட்ட உத்தரவில் வெளி மாநிலங்களில் இருந்து வணிக நோக்கில் வருபவர்கள் 72மணி நேரம் மட்டும் தங்குவதாக இருந்தால் இ பாஸ் வழங்கப்படும் என்றும் அவர்களுக்கு தனிமைப்படுத்தலில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தொழிற் துறையினர் தவிர விருந்தோம்பல், தகவல் தொழில்நுட்பம், பொழுதுபோக்கு, சட்டம் சார்ந்த துறையினருக்கும் இந்த சலுகை வழங்கப்படும் என்று தனது உத்தரவில் அதுல்ய மிஸ்ரா தெரிவித்துள்ளார். பின்பு தொழிற்துறை வளர்ச்சியை கருதி இந்த புதிய உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

முன்பு திருமணம், இறப்பு, மருத்துவ காரணங்கள் ஆகியவற்றுக்கு மட்டுமே இ-பாஸ் வழங்கப்பட்டு வந்தது. கடந்த வாரம் முதல் இ-பாஸ் நடைமுறையில் சில தளர்வுகள் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, யார் விண்ணப்பித்தாலும் அடுத்த சில மணி நேரங்களில் அவர்களுக்கு இ-பாஸ் கிடைக்க வழி செய்யப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications