சர்கார் திரைப்படம் இன்றே வெளியிடப்படும்-தழிழ் ராக்கர்ஸ் மிரட்டல்.! தலைக்கு எவ்வளவு தில்லு பாத்தியா?
திரைப்படத்தை யாராவது படம்பிடிக்கிறார்களா என்பதை அறிய ஒவ்வொரு திரையரங்கிலும் கண்காணிப்பாளர்களை நியமிக்க வேண்டும் எனவும் தயாரிப்பாளர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
தழிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் புதிய திரைப்படங்கள் தொடர்ந்து வந்து கொண்டே தான் இருக்கிறது, அதன்படி நடிகர் விஜய் நடிப்பில், முருகதாஸ் இயக்கத்தில் தீபாவளியை முன்னிட்டு சர்கர் திரைப்படம் இன்று வெளியாகி இருக்கிறது.

இந்த திரைப் படத்திற்கு மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்புகள் இருக்கும் நிலையில், இந்த படத்தின் எச்டி பிர்ண்ட் இணையதளத்தில் வெளியிடப்படும் என தமிழ் ராக்கர்ஸ் என்ற பெயரி நேற்று பதிவிடப்பட்டது.

தமிழ்ராக்கர்ஸ்
இதை தொடர்ந்து பல்வேறு தரப்பிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது, ஏற்கனவே புதிய திரைப்படங்களை சட்டவிரோதமாக
தமிழ்ராக்கர்ஸ் இணையதளத்தில் வெளியிட்டுவருகிறது. இருந்தபோதிலும் இதனை தடுக்க தயாரிப்பாளர் சங்கம் நடவடிக்கை
எடுத்து வருகிறது.

சர்கார்
இந்நிலையில் சர்கார் படம் தொடர்பாக தமிழ்ராக்கர்ஸ் வெளியிட்டுள்ள சவாலை முறியடிப்போம் என தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அன்மையில் அறிக்கை வெளியிட்டது.

கண்காணிப்பாளர்
திரைப்படத்தை யாராவது படம்பிடிக்கிறார்களா என்பதை அறிய ஒவ்வொரு திரையரங்கிலும் கண்காணிப்பாளர்களை நியமிக்க வேண்டும் எனவும் தயாரிப்பாளர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. சட்டவிரோதமாக படம் பிடிப்பவர்கள் காவல்துறையிடம் ஒப்படைக்கப்படுவார்கள் என்றும் தயாரிப்பாளர் சங்கம் எச்சரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..

மிரட்டல்
தற்போது தமிழ் ராக்கர்ஸ் சர்கார் படத்தின் எச்.டி.பிர்ண்ட் இன்றே வெளியாகும் என்று மிரட்டல் விடுத்துள்ளார்கள். இந்த செய்தி தமிழ் திரையுலகில் அதிக பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications