விரைவில் தமிழக ரேஷன் கடைகளில் நீங்கள் எதிர்பார்த்த "இந்த" சேவை கிடைக்கும்: சூப்பர் தகவல்.!
இப்போது அனைத்து இடங்களிலும் இணைய வசதி தான் முக்கியத் தேவையாக இருக்கிறது. குறிப்பாக தகவல் பரிமாற்றம், தினசரி வேலை, கல்வி மற்றும் பலவற்றிக்கு இணையம் தான் அதிகம் பயன்படுகிறது என்றே கூறலாம்.

ரேஷன் கடைகளில் வைஃபை?
இந்நிலையில் நாட்டில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளில் வைஃபை இணைய வசதியை கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மேலும் இதற்குவேண்டி ஆய்வறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டப்பட்டுள்ளது.

இனி எளிதாக கிடைக்கும்
மேலும் நகரப்புறங்களில் இணைய சேவையை பெறும் அளவுக்கு கிராமப்புறங்களிலும், மலைப்பிரதேங்களிலும் வசிப்பவர்களுக்கு கிடைப்பதில்லை என்றுதான் கூறவேண்டும். எனவே இந்த குறைபாட்டை தீர்க்க கிராமப்புறங்களிலும், மலைப்பிரதேங்களிலும் எளிதாக இணைய சேவையை வைஃபை மூலம் கொண்டு வருவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள ரேசன் கடைகள்
அதேபோல் இந்த திட்டத்தின் கீழ் தமிழகத்தில் உள்ள ரேசன் கடைகள் மூலம் இணைப்பு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதாவது தமிழகத்தில் 35,323 நியாய விலைக்கடைகள் உள்ளன. பின்பு இதில் 10,279 கடைகள் பகுதி நேர கடைகளாக உள்ளன.

கடைகள் அமைந்திருக்கும் சூழல்
குறிப்பாக சில கடைகள் வாடகை கட்டிடங்களில் செயல்படுகிறது. மேலும் 2 முதல் 3 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு ஒவ்வொரு கடையும் செயல்படுகிறது. எனவே கடைகள் இருக்கும் இட வசதிகள், வாடகை கட்டிடம் என்றால் உரிமையாளரின் ஒப்புதலை பெறுவது,கடைகள் அமைந்திருக்கும் இடங்களின் சூழல் போன்றவற்றை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.

இணையத்தின் வேகம்
இப்போது கிராம்புறங்களில் இணைய தளங்களின் வேகம் வேகம் 50 முதல் 90 கிலோ பைட்சாகத்தான் உள்ளது. எனவே அரசின் வைஃபை வசதி கிடைத்தால் இந்த வேகம் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. அதேபோல் இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால் மக்கள் ரேசன் கடைகளை இணைய தள மையங்களாக பயன்படுத்தக் கொள்ள முடியும்.

அதேபோல் அரசு சேவை என்பதால் கட்டணமும் குறைவாக இருக்கும். பின்பு ரேஷன் கடைகளுக்கும் வருமானம் ஈட்டுவதாக அமையும் என்பதுகுறிப்பிடத்தக்கது. மேலும் இந்த வைஃபை வசதியை விட 5ஜி சேவை அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

5ஜி சேவை
அதாவது 5ஜி சேவை உலகின் பல நாடுகளில் பயன்பாட்டில் உள்ளது. இருந்தபோதிலும் இந்தியாவில் 4ஜி அலைக்கற்றை மூலம் தான் இணைய சேவை மற்றும் தொலைதொடர்பு சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
குறிப்பாக இந்தியாவில் 5ஜி சேவை எப்போது தொடங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில் அதற்கு ஒரு பதில் கிடைத்துள்ளது.5ஜி அலைக்கற்றை ஏலம் ஆனதுஇந்த ஜூலை மாதம் இறுதிக்குள் நிறைவடையும்.
பின்பு வரும் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்திற்குள் 5ஜி சேவைகள் அறிமுகப்படுத்தப்படும் என மத்திய தகவல் தொடர்பு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

ஆடியோ மற்றும் வீடியோ கால்
கடந்த மே மாதம் மத்திய தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் சென்னை ஐஐடி வளாகத்தில் 5ஜி அலைவரிசையை வெற்றிகரமாக பரிசோதித்துப் பார்த்தார். குறிப்பாக அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், தனது போனில் ஆடியோ மற்றும் வீடியோ கால் செய்து பரிசோதித்தார் என்பதுகுறிப்பிடத்தக்கது.

பிரதமரின் கனவு
முழுக்க முழுக்க இந்தியாவின் தொழில்நுட்பத்தில் 5ஜி தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது எனக் கூறினார் அஷ்வினி வைஷ்ணவ்.
மேலும் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், இது பிரதமரின் கனவு. அவர் நம் நாட்டிலேயே உருவாக்கப்பட்ட 4ஜி, 5ஜி தொழில்நுட்பம்புழக்கத்துக்கு வரவேண்டும் என்று விரும்பினார். பின்பு இந்த தொழில்நுட்ப புரட்சிகளைக் கொண்டு நாம் உலகை வெல்ல வேண்டும் என்று கூறினார் அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ்.


Click it and Unblock the Notifications