Just In
- 21 min ago பொளந்து கட்டுது சேல்.. ரூ.20499 பட்ஜெட்ல 108MP கேமரா.. 3D டிஸ்பிளே.. 5800mAh பேட்டரி.. எந்த மாடல்?
- 1 hr ago புது ரூல்ஸ்.. தேர்தல் முடிந்ததும் அமல்.. இனி 24 மணி நேரம் தான்.. ரயில் டிக்கெட் சேவையில் 2 பெரிய மாற்றங்கள்!
- 2 hrs ago இப்படியொரு புரொஜெக்டர் யாரும் பார்த்ததில்லை.. 32GB மெமரி.. 1080P ரெசல்யூஷன்.. எந்த மாடல்? என்ன விலை?
- 2 hrs ago மிரட்டும் 3 கண் கேமரா.. இதில் 1" இன்ச் ரிட்ராக்டபிள் கேமராவும் இருக்கு.. தூள் பறக்குது HUAWEI Pura 70 Ultra..
Don't Miss
- News கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு.. வைகையில் இன்று முதல் தண்ணீர் திறப்பு
- Movies கார்த்திக்கை கொண்டாடும் தொழிலாளர்கள்.. மீண்டும் தோற்கும் ஆனந்த்.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!
- Finance தங்கம் விலை உயர்வை சமாளிக்க, நகை கடைகள் புதிய ஐடியா.. உஷாரா இருங்க மக்களே..!
- Sports "பிரேக் அப் பண்ணப் போறாங்க" அழகான பெண்ணை பார்த்து வாயை பிளந்த சுப்மன் கில்.. வெளியான வீடியோ
- Lifestyle கர்ப்ப காலத்தில் பதட்டப்படும் பெண்களுக்கான டிப்ஸ்..!
- Automobiles போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
காதல் மனைவியை மகிழ்விக்க: ரிமோட் கண்ட்ரோல் படுக்கை: தேசிய விருது வென்ற தமிழக தொழிலாளி..
அவரது இந்த கண்டுபிடிப்பிற்காக தேசிய புதுமைபடைப்பு நிறுவனம் இரண்டாவது பரிசு வழங்கி கவுரவித்துள்ளது.
தமிழகத்தின் நாகர்கோவிலைச் சேர்ந்த வெல்டிங் தொழிலாளி ஒருவர், இரண்டு மாதங்களாக படுத்தபடுக்கையாக இருக்கும் தனது மனைவிக்கு ரிமோட் கண்ட்ரோல் பெட்டை செய்து கொடுத்த நெகிழ்வான சம்பவம் அரங்கேறியுள்ளது. 42 வயதான சரவண முத்து என்ற அந்த தொழிலாளி, தனது மனைவி சவுகரியமாக இருக்கவேண்டும் என்பதற்காக இந்த படுக்கைக்கு உருவாக்கியுள்ளார். அவரது இந்த கண்டுபிடிப்பிற்காக தேசிய புதுமைபடைப்பு நிறுவனம் இரண்டாவது பரிசு வழங்கி கவுரவித்துள்ளது.
முத்துவின் மனைவி அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் படுத்தபடுக்கையானார். தனது மனைவியின் கஷ்டத்தை பார்த்த பிறகு, அவருக்கு உதவ ஏதாவது செய்ய முடிவெடுத்த முத்து, தொலைதூர கட்டுப்பாட்டின் படி இயங்கும் கழிப்பறையுடன் கூடிய படுக்கை (ரிமோட் கண்ட்ரோல் டாய்லெட் பெட்) என்ற யோசனைக்கு வந்தார்.
வெறுப்பின் அடையாளங்களை காட்டுகிறார்கள்
"படுக்கையிலிருக்கும் நோயாளிகளின் துயரங்களையும், அவர்கள் எல்லாவற்றிக்கும் மற்றவர்களை எப்படி சார்ந்துள்ளனர் என்பதை நான் புரிந்து கொண்டேன். உடனிருந்து கவனிப்பவர்கள் கூட அவர்களை கவனிக்கும் போது ஒருவித வெறுப்பின் அடையாளங்களை காட்டுகிறார்கள்.
வடிவமைக்க முடிவு செய்தேன்
அதுமட்டுமின்றி இதுபோன்ற சந்தர்ப்பங்களில் நோயாளிகளின் தனியுரிமையும் பாதிக்கப்படுகின்றது.நோயாளிகளின் கண்ணியத்தையும் சுதந்திரத்தையும் தக்கவைக்கவே நான் இந்த படுக்கையை வடிவமைக்க முடிவு செய்தேன்"என்கிறார் முத்து.
செப்டிக் தொட்டிக்கு ஒரு இணைப்பு
இவர் வடிவமைத்துள்ள இந்த படுக்கையில் ஒரு ஃப்ளஷ் டேங்க், மூடியுடன் கூடிய குழாய், செப்டிக் தொட்டிக்கு ஒரு இணைப்பு மற்றும் நடுவில் ஒரு இடைவெளி ஆகியவை உள்ளன.அதன் ரிமோட் கண்ட்ரோல் மூன்று பொத்தான்களைக் கொண்டுள்ளது. ஒரு பொத்தான் படுக்கையின் அடித்தளத்தை திறக்கவும், இரண்டாவது குழாயின் மூடியை திறக்கவும், மூன்றாவது பொத்தான் கழிப்பறையை ஃப்ளஷ் செய்யவும் பயன்படுத்தப்படுகிறது.
புதுமைகண்டுபிடிப்பு
முன்னாள் ஜனாதிபதி ஏபிஜே அப்துல் கலாம் அவர்களது மரணத்திற்கு சில மாதங்களுக்கு முன்பு முத்து அவருடன் கலந்துரையாடியுள்ளார். கலாம் அவரை வழிநடத்தியதுடன், தேசிய புதுமைகண்டுபிடிப்பு அறக்கட்டளையின் விருதுக்கு விண்ணப்பிக்கும்படியும் அறிவுறுத்தியுள்ளார்.
ரூ. 2 லட்சம் பரிசு
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்களிடம் இருந்து, விருது மற்றும் ரூ. 2 லட்சம் பரிசு தொகையுடன், முதல் படுக்கையின் தயாரிப்பு செலவான 35,000 ரூபாயையும் திரும்ப பெற்றுள்ளார் முத்து. இந்தியா முழுவதும் இருந்து 350 க்கும் மேற்பட்ட ஆர்டர்களை பெற்றுள்ள முத்து, இதுவரை ஒரு படுக்கையை டெலிவரியும் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470