அரசுகேபிள் டிவி கட்டணம் அதிரடியாக குறைப்பு:ரூ.130க்கு ஷாக்கொடுத்த முதல்வர்.!
இந்நிலையில், தற்போது, கேபிள் டிவி மற்றும் டிடிஹெச் துறையில் பல்வேறு போட்டிகள் இருப்பதால், உடனடியாக கட்டணத்தை குறைத்து அதிரவிட்டுள்ளது. நாம் ஹெச்டியில் பயன்பதினாலும் கட்டணம் ரூ.130 தான். இதை நேற்று
தமிழ்நாடு அரசு கேபிள் டிவி தற்போது டிஜிட்டல் மயமாகியுள்ளது. இதில் தற்போது 600க்கும் மேற்பட்ட சேனல்கள் பொது மக்களுக்கு கிடைக்கின்றது.

கடந்த ஆண்டு முதல் பொது மக்களுக்கு ஹெச்டி செட்டாப் பாக்ஸ் வழங்கப்பட்டது. இதில் ஹெச்டி தரத்தில் பொது மக்களுக்கு சேனல்கள் வழங்கப்படுகின்றன. இதில் உள்ளூர் சேனல்களும் கிடைக்கின்றன.
இந்நிலையில், தற்போது, கேபிள் டிவி மற்றும் டிடிஹெச் துறையில் பல்வேறு போட்டிகள் இருப்பதால், உடனடியாக கட்டணத்தை குறைத்து அதிரவிட்டுள்ளது. நாம் ஹெச்டியில் பயன்பதினாலும் கட்டணம் ரூ.130 தான். இதை நேற்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கட்டணத்தை குறைத்து அதிரவிட்டார்.

அனலாக் கேபிள் டிவி:
கடந்த திமுக ஆட்சி காலத்தில் அரசு கேபிள் டிவி நிறுவனம் உருவாக்கப்பட்டது. இது குறைந்த விலையில் பொது மக்களுக்கு சேவையை வழங்க துவங்கியது. இது அனலாக் முறையில் பொது மக்களுக்கு சேவைகளை வழங்கியது. முன்னாள் முதல்வர் கருணாநிதி இந்த திட்டத்தை துவங்கி வைத்தார்.
இந்நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டு முதல்வராக ஜெயலலிதா வந்தாலும், அரசு கேபிள் டிவி நிறுவனத்தையும் அதே கட்டணத்தில் இயங்கி வந்தார்.

ஹெச்டியாக மாற்ற திட்டம்:
இதன் பிறகு அனலாக் கேபிளை டிஜிட்டல் முறைக்கு மாற்றவும் முதல்வர் ஜெயலலிதா திட்டமிட்டார். இதைத்தொடர்ந்து, டிஜிட்டல் முறைக்கு அரசு கேபிள் மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஜெயலலிதா மறைந்தாலும், முதல்வராக பொறுப்பேற்ற எடப்பாடி பழனிச்சாமியும். இந்த திட்டத்தை கைவிடாமல் செயல்படுத்தினார்.
இந்நிலையில் தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளிலும் ஹெச்டி செட்டாப் பாக்ஸ், வழங்கப்பட்டது. இதையடுத்து, கட்டணமாக ரூ.200 வசூலிக்கப்பட்டது.

சுமார் 600 டிவி சேனல்கள்:
அரசு கேபிள் டிவி நிறுவனத்தால் வழங்கப்பட்டுள்ளது ஹெச்டி செட்டாப் பாக்ஸ்களில் சுமார் 600 டிவி சேனல்கள் கிடைக்கின்றன. இதற்கு கட்டணமாக ரூ.200 வசூலிக்கப்படுகின்றது.
தற்போது, தனியார் டிவிகளுக்கு போட்டியாகவும் அரசு ஹெச்டி சேனல்களை வழங்கி வருகின்றது குறிப்பிட தக்கது.

குறி வைக்கும் தனியார் நிறுவனங்கள்:
இதுவரை 36 லட்சம் செட்டாப் பாக்ஸ்கள் கொள்முதல் செய்து, சுமார் 35. 12 லட்சம் செட்டாப் பாக்ஸ்களை சந்தாதாரர்களுக்கு இலவசமாக வழங்கியுள்ளது. தற்போது தமிழக அரசு கேபிள் டிவி நிறுவனம், பொதுமக்கள் அதிகம் விரும்பும் சேனல்களை வழங்கி வருகிறது.
அனலாக் மற்றும் அரசு கேபிள் டிவிகளை குறி வைத்து தனியார் நிறுவனங்கள் கட்டணங்களையும் குறைத்து வழங்குதவாக அறிவித்தன. இதைடுத்து வாடிக்கையாளர்களை காக்க அரசு கேபிபள் டிவி நிறுவனம் பல்வேறு முயற்சிகளை எடுத்துள்ளது.

பழைய கட்டணம் ரூ.70 :
முந்தைய ஆட்சி காலத்தில் பழைய கட்டணம் ரூ70 தான் என்று திமுகவும் சட்டசபையில், ஆட்சேபனை தெரிவித்தது. இதையடுத்து கட்டணம் குறைக்க பொது மக்களிடம் இருந்தும் கோரிக்கை எழுந்தது. பல்வேறு கட்டண பரீசனைக்கு பிறகு அதிரடியாக கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.

கட்டணத்தை குறைத்தார் முதல்வர்:
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிரடியாக கட்டணத்தை குறைத்து அதிரவிட்டார். தற்போது ஜிஎஸ்டியுடன் சேர்த்து கட்டணம் ரூ.130 தான் என்று அறிவித்தார். தற்போது, சுமார் 600 சேனல்கள் ஹெச்டியில் உள்ளூர் சேனல் முதல் கிடைக்கின்றன.
தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் தலைவராக, கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் கடந்த ஜூலை 26-ம் தேதி பொறுப்பு ஏற்றார். விரைவில் இந்த கட்டணம் அலுக்கு வருகின்றது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications