வெறலெவல்: மணல் கொள்ளையர்களை காட்டிக் கொடுக்கும் கூகுள் மேப்.!
பின்பு அதில் 4.23 ஹெக்டேர் ஆற்றுப்படுகை பகுதியும் மற்றவை தனியார் பட்டா நிலங்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளன.
கூகுள் நிறுவனம் உலகம் முழுவதும் சிறந்த தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது, மேலும் இந்நிறுவனத்தில் இருந்து வரும் அனைத்து தயாரிப்புகளும் அதிக வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தற்சமயம் கூகுள் நிறுவனம் தமிழ்நாட்டுக்கு வேண்டி ஒரு சிறந்த உதவியை செய்துள்ளது என்று தான் கூறவேண்டும்.
அதன்படி தமிழ்நாட்டில் ரூ.505.30 கோடி மதிப்பிலான மணல் கொள்ளையைக் கண்டுபிடிக்க கூகுள் மேப் உதவியுள்ளது. மேலும் அண்மையில் கரூர் மற்றும் கடலூர் மாவட்ங்களில் மிகப்பெரிய அளவில் மணல் கொள்ளை கண்டுப்பிடித்து தடுப்பதற்கு கூகுள் நிறுவனத்தின் மேப் மிகப் பெரிதும் உறுதுணையாள இருக்கிறது.

கடலூர்
குறிப்பாக கடலூர் அருகில் இருக்கும் நெய்வாசல் எனும் பகுதியில் உள்ள குவாரியில் மணல் அள்ளுவது வரும்பு மீறி நடைபெற்றது,
மேலும் பொதுப்பணித்துறையின் மணல் கொள்ளை தடுப்புப் பிரிவில் உள்ள சில அதிகாரிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

ஆகஸ்ட் மாதம்:
அதற்குபின்பு இதற்கான ஆய்வை மணல் கொள்ளை தடுப்புப் பிரவு அதிகாரிகளும் மற்றும் சில வருவாய்துறை அதிகாரிகளும் இணைந்து கடந்த 2017-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நெய்வாசல்:
இதுவரை கடலூர் அருகில் இருக்கும் நெய்வாசல் எனும் பகுதியில் 19ஹெக்டேரில் மணல் குவாரி அனுமதிக்கப்பட்டுள்ளது, ஆனால் கூகுள்
மேப் கொண்டு அட்ச ரேகை மற்றும் தீர்க்க ரேகையை கொண்டு பார்த்தபோது வரம்பு மீறி மணல் கொள்ளை விரிவடைந்துள்ளதை
அறிந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

4.23 ஹெக்டேர்:
பின்பு அதில் 4.23 ஹெக்டேர் ஆற்றுப்படுகை பகுதியும் மற்றவை தனியார் பட்டா நிலங்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளன. இதுவரை
13,34 லட்சம் கன மீட்டர் மணல் அள்ளப்பட்டுள்ளது. மேலும் அங்கு அனுமதிக்கப்பட்ட அளவு 1.9 லட்சம் கன மீட்டர் மட்டுமே.

கடத்தல் முயற்சிகள்
குறிப்பாக கடத்தப்பட்ட மணலின் மதிப்பு ரூ.505.30 கோடி இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பின்பு இதுவரை 3.11 லட்சம்
மதிப்பிலான மணல் கடத்தல் முயற்சிகளை தடுக்கப்பட்டுளன என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கூகுள் மேப் :
மேலும் கூகுள் மேப் உதவியால் இதுவரை 11.44 லட்சம் கன மீட்டர் மணல் கடத்தல் தடுக்க முடியமால் கொள்ளை போயிருப்பது, தற்போது
தான் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். குறிப்பாக அனுமதி பெறாமல் கடத்தப்பட்ட மணிலன் மதிப்பு ரூ.505.30 கோடி இருக்கும் என்று
தெரியவந்துள்ளது.

கார் பொம்மைகள்:
இப்போது கூகுள் மேப்ஸ் செயிலியில் வழங்கப்பட்டுள்ள புதிய கார் பொம்மைகள் நீங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு உங்களை அழைத்து
செல்லும், பின்பு பயனர்களின் வசதிக்கு தகுந்தபடி அதிவேக எஸ்யுவி அல்லது பிக்கப் டிரக் என எதை வேண்டுமானாலும் தேர்வு செய்து
பயன்படுத்த முடியும்.

டிரைவிங் நேவிகேஷன்:
வாடிக்கையாளர்கள் ஸ்வாப் செய்ய பயனத்தின் போது டிரைவிங் நேவிகேஷன் மோடில் உள்ள அம்பு குறியை தட்டி, உங்களுக்கு விருப்பமான
வாகனத்தை தேர்வு செய்ய செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவற்றை உபயோம் செய்ய சற்று வித்தியசமாக இருக்கும் என
கூகுள் நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐஒஎஸ்:
கூகுள் மேப்ஸ் செயிலியில் வழங்கப்பட்டுள்ள இந்த புதிய அம்சம் ஐஒஎஸ் இயங்குதளங்களில் மட்டுமே பயன்படும், விரைவில் ஆண்ட்ராய்டு
இயங்குளத்தில் இந்த புதிய அம்சம் சேர்க்கப்படும் என கூகுள் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளம்பர பலகைகள்:
குறிப்பாக இந்த அம்சம் தெருக்களில் இருக்கும் கடைகளின் விளம்பர பலகைகளை கேமரா மூலம் அறிந்து கொண்டு நீங்கள் செல்ல வேண்டிய
வழியை காண்பிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின்பு பல்வேறு புதிய அம்சங்கள் விரைவில் கூகுள் மேப்ஸ் செயலியில் சேர்க்கப்படும்


Click it and Unblock the Notifications