இ-பாஸ் நடைமுறையை ரத்தா? எச்சரிக்கும் மருத்துவர்கள்! அரசு என்ன முடிவு எடுக்கும்?
இ-பாஸ் நடைமுறையைத் தொடர்வதா இல்லை ரத்து செய்வதா என்பது குறித்து ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆலோசனைக்காக மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் சண்முகம் தலைமையிலான ஆலோசனை கூட்டம் தொடங்கியது. மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் கட்டாயம் என்ற நிலையால் பலரும் பாதிக்கப்பட்டனர்.

இ-பாஸ் கட்டாயம் என்ற பழைய விதி
சமீபத்தில் தமிழக முதலமைச்சர் பழனிச்சாமி இ-பாஸ் விதிமுறைகளில் சில தளர்வுகளை அறிவித்தார். தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த நிலையில் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் கட்டாயம் என்ற பழைய நிலை இல்லாமல் இருக்கிறது. இது ஆபத்தை ஏற்படுத்தக் கூடும் என்று மருத்துவர்கள் ஒரு புறம் எச்சரித்துள்ளனர்.

ரத்து செய்ய கூறி வலியுறுத்தி வரும் மக்கள்
மறுபுறம் மத்திய அரசு நடைமுறையில் உள்ள இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்ய கூறி வலியுறுத்தி வருகிறது. முன்பு திருமணம், இறப்பு, மருத்துவ காரணங்கள் ஆகியவற்றுக்கு மட்டுமே இ-பாஸ் வழங்கப்பட்டு வந்தது. கடந்த வாரம் முதல் இ-பாஸ் நடைமுறையில் சில தளர்வுகள் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, யார் விண்ணப்பித்தாலும் அடுத்த சில மணி நேரங்களில் அவர்களுக்கு இ-பாஸ் கிடைக்க வழி செய்யப்பட்டுள்ளது.

பண்டிகைகள் வருவது காரணமா?
இந்த நிலையில் இ-பாஸ் நடைமுறையை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. அடுத்தடுத்து தீபாவளி, கிறிஸ்துமஸ், ஆங்கிலப் புத்தாண்டு என பண்டிகைகள் வருவதால் தமிழகத்திலும் இ-பாஸ் நடைமுறை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இதுகுறித்து முடிவு செய்யத் தலைமைச் செயலாளர் சண்முகம் தலைமையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் கலந்து கொள்ளும் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது.

இ-பாஸ் முறை ரத்து செய்யப்படுமா?
இந்த கூட்டத்தில் இ பாஸ் நடைமுறையை ரத்து செய்வதா, இல்லை தொடர்வதா என்பது குறித்து முடிவு செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கூட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், மக்களின் பாதுகாப்பு குறித்தும் ஆலோசிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இ-பாஸ் முறை ரத்து செய்யப்பட்டால் மக்களின் புழக்கம் அதிகமாகும் இதனால் கொரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications