மம்மிக்கு குரல் கொடுத்து சாதனை: 3000 ஆண்டுக்கு முன் வாழ்ந்தவர் சொல்லும் வார்த்தை...
கிமு 11 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆட்சி செய்த பாரோ ரமேசஸ் XI இன் கீழ் நெஸ்யமன் வாழ்ந்தார். இந்த நிலையில் எகிப்தில், கி.மு., 1099 - 1069 காலகட்டத்தில் வாழ்ந்த நெஸ்யமன் என்ற மதகுருவின் மம்மியை, தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டறிந்தனர்.

நெஸ்யமன் என்ற மதகுரு
நெஸ்யமன் மதகுரு என்பதால், பாடல்கள் பாடுதல் உள்ளிட்ட மதச்சடங்குகளை அவர் செய்திருப்பார் என்று கருதப்படுகிறது. அவர் இறக்கும் போது அவருக்கு 50 வயது இருக்கும் என்றும் அவர் கழுத்தை நெறித்து கொலை செய்யப்பட்டிருக்க வாய்ப்பிருப்பதாகவும் கூறப்பட்டது பின் அந்த கருத்து மாற்றிக் கூறப்பட்டது.

குண்டுவெடிப்புக்கு முன் நகர்த்தப்பட்ட மம்மி
நெஸ்யமன் மரணம் துரதிர்ஷ்டவசமாக இருந்திருக்கலாம் எனவும் ஆனால் அதிர்ஷ்டவசமாக 1941-ல் லீட்ஸ் மீது குண்டுவெடிப்புத் தாக்குதலுக்கு முன்பு அவரது மம்மி நகர்த்தப்பட்டது.

சயின்டிஃபிக் ரிப்போர்ட்ஸ்
சயின்டிஃபிக் ரிப்போர்ட்ஸ் இதழில், அவர்கள் நெஸ்யமன் மம்மியை லீட்ஸ் பொது மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று தொடர்ச்சியாக சி.டி ஸ்கேன்கள் மேற்கொண்ட நடவடிக்கையை வெளிப்படுத்தினர்.

பாடல்கள் பாடுதல் போன்ற மதச்சடங்குகளை செய்திருக்கலாம்
நெஸ்யமன் மதகுரு என்பதால், பாடல்கள் பாடுதல் உள்ளிட்ட மதச்சடங்குகளை அவர் செய்திருப்பார் என்றும் அவரது குரல் வலிமையானதாக இருந்திருக்கும் என மானுடவியல் ஆய்வாளர்கள் கருதினர். இதையடுத்து அவரின் குரலை, செயற்கைக் குரல் வளையங்களைக் கொண்டு உருவாக்க மருத்துவர்கள் குழு முயற்சி மேற்கொண்டது.

3D அமைப்பில் செயற்கை முறையாக கண்காணிப்பு
இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, நெஸ்யமன்னின் பேச்சுக்குழல் ஸ்கேன் செய்யப்பட்டு, 3டி அமைப்பில் செயற்கையாக உருவாக்கப்பட்டது. செயற்கை பேச்சுக்குழல் மற்றும் குரல்வளை அமைப்பைக் கொண்டு, மருத்துவர்கள் நெஸ்யமன்னின் குரலை தற்போது உருவாக்கியுள்ளனர். இந்த தகவல் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

eeuuughhh என்ற சத்தம் கேட்பதக தகவல்
இதன் மூலம் நெஸ்யமன் குரலை கண்டறியும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. பூச்சி-ஸ்டிங் கோட்பாடு சரியாக இருந்தால், நெஸ்யமனின் கடைசி வாயு "ow!" அல்லது "argh!" என்று இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தயாரிக்கப்பட்ட குரல் "eeuuughhh" போல ஒலிப்பதை குழு கண்டறிந்தது. நெஸ்யமனின் குரல்வளை மற்றும் குரல்வழியின் பரிமாணங்கள் அவரது குரல் இன்றைய சராசரி மனிதனை விட சற்றே உயர்ந்ததாக இருக்கும் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications