சுஷாந்த் சிங் தீராத கனவுகள்., இதுதான்!
சுஷாந்த் சிங் மரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவருடைய தீராத கனவுகள் குறித்து தெரியவந்துள்ளது.

சுஷாந்த் சிங் தூக்கிட்டு தற்கொலை
மும்பை பாந்த்ரா பகுதியில் தான் தங்கியிருந்த வீட்டில் நேற்று அதிகாலை சுஷாந்த் சிங் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் அறிந்த அனைத்து தரப்பினரிடமும் மனக்கவலையை ஏற்படுத்தியது.

அனைத்து தரப்பினரின் மனதிலும் பாரத்தை ஏற்படுத்திய மரணம்
பாலிவுட் நடிகரான சுஷாந்த் சிங், மும்பை பாந்த்ரா பகுதியில் தூக்கிட்டு தற்கொலை நேற்று அதிகாலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த தகவல் அறிந்த அனைத்து தரப்பினரின் மனதிலும் பாரத்தை ஏற்படுத்தியது.

காவல்துறையினர் விசாரணை
சுஷாந்த் சிங் இறந்தபோது அவரது வீட்டில் நண்பர்களும் இருந்ததால் அவர்களிடமும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சுஷாந்த் சிங் இறப்பு திரையுலகினர் மட்டுமல்லாமல் பிரதமர் மோடி முதல் நாட்டு மக்கள் ஏராளமானோர் அவரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இருவீட்டார் மத்தியில் திருமணம் நடத்த திட்டம்
சுஷாந்த் சிங் ராஜ்புட்டுக்கு வருகிற நவம்பர் மாதம் திருமணம் நடைபெற இருந்ததாகவும் குடும்ப உறுப்பினர்கள் பாட்னாவில் இருந்து லாக்டவுன் முடிந்தவுடன் மும்பைக்கு வந்து இருவீட்டார் மத்தியில் திருமணம் நடத்த திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. இருப்பினும் மணப்பெண்ணின் பெயரை குடும்பத்தார் தெரிவிக்கவில்லை.

சுஷாந்த் சிங் காதல்
அதேபோல் சுஷாந்த் சிங் பாலிவுட் நடிகை ரியா சக்ரபர்த்தியை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த காதல் குறித்து இருவரும் வெளிப்படையாக ஒப்புக் கொள்ளவில்லை என்றாலும் பாலிவுட் வட்டாரங்கள் இருவரையும் காதல் ஜோடிகள் என தெரிவிக்கின்றனர்.

சுஷாந்த் சிங் பகிர்ந்து கொண்ட இன்ஸ்டாகிராம் பதிவு
இந்த நிலையில் சுஷாந்த் சிங் பகிர்ந்து கொண்ட இன்ஸ்டாகிராம் பதிவின்படி அவருக்கு நடிப்பைத் தவிர்த்து இன்னொரு துறை மீதும் அதீத ஆர்வம் இருந்துள்ளது. அது கேமிங் தொடர்பான துறை. அவர் கணினி கேமிங் மீது அதீத ஆர்வம் இருந்துள்ளது. இது அவரது இன்ஸ்டாகிராம் பதிவின் மூலம் தெரியவந்துள்ளது.
சொந்த கேம்களை உருவாக்க திட்டம்
சுஷாந்த் சிங் பொறியியலாராக விளையாட்டில் இருக்கும் குறியீட்டைக் கற்றுக் கொள்ள விரும்பியுள்ளார். அதேபோல் இதன்மூலம் அவர் சொந்த கேம்களையும் உருவாக்க வேண்டும் என்ற ஆர்வமும் காதலும் இருந்துள்ளது.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் இருந்த அதிக ஆர்வம்
சுஷாந்த் சிங் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் இருந்த அதிக ஆர்வம் காரணமாக 2003 ஆம் ஆண்டில் டிசிஇ நுழைவுத் தேர்வில் 7-வது இடத்தை பிடித்து டெல்லி பொறியியல் கல்லூரியில் சேர்க்கை பெற்றார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

தொழில்நுட்பத்துறையிலும் நிறைவேறாத கனவுகள்
சுஷாந்த் சிங் மரணம் திரையுலகிற்கு என்பது மட்டுமல்லாது அவரது கனவு தொழில்நுட்பத்துறையிலும் நிறைவேறாமல் இருந்துள்ளது. சுஷாந்த் சிங் மரணம் குறித்து பல்வேறு கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications