விபரீதம் : ஆரம்பமாகும் முடிவு..!
மனித இனத்தால் உருவாக்கம் பெற்றாலும் மனிதனை விட சக்தி வாய்ந்தது - ரோபோட்கள். முக்கியமாக ரோபோட்கள் கட்டுபாட்டை இழக்கும் போது தான் அதை 'உருவாக்கியதின்' விபரீதம் புரியும்.
நிலை இப்படி இருக்க..! ரோபோட்களுக்கு செயற்கை நுண்ணறிவு கொடுத்து அதை மேலும் ஆபத்தானதாக உருவாக்கிவிட்ட மனித இனம், தற்போது சூப்பர் இன்டெல்லிஜன்ட்ஸ் என்ற அதிநவீனம் மூலம் வருங்காலத்தை இழக்க போகிறது என்று தான் சொல்ல வேண்டும்..!
வேலை இல்லாத நிலை, அழியாநிலை, சுற்றுச்சூழல் அழிவு என வருங்காலத்தை சூப்பர் இன்டெல்லிஜன்ட்ஸ் என்பது எவ்வாறான முறையில் பாதிக்கும் 7 விளக்கங்களை கீழ்வரும் ஸ்லைடர்களில் தொகுத்துள்ளோம்.

07. ரோபோட் யுத்தம் :
யுத்த களத்தில் பயன் படுத்தப்படும் நோக்ககத்தில் உருவாக்கப்பட்ட சண்டையிடும் உயிர் கொல்லி ரோபோட்கள்.

தீவிரவாதிகள் :
இவைகள் கிட்டத்தட்ட தீவிரவாதிகள் போல் இயங்கும் அதாவது கண்மூடித்தனமாக இயங்கும்.

06.அழியாநிலை :
மனிதனின் மூளையானது கம்யூட்டர்களுக்குள் செலுத்தப்பட்டு விட்டால் அவர்கள் மெஷின்களுக்குள் வாழ ஆரம்பித்து விடுவார்கள்.

இயந்திரத்தனம் :
மேலும் சில மனித உடல் பாகங்களை இயந்திரத்தனமாக மாற்றி விட்டால் அது அழியா நிலையை பெற்று விடும்.

05.செயற்கை அறிவு :
மனித அறிவோடு இயந்திர மூளை ஒரே ஒரு முறை ஒற்றுப்போனால் கூட போதும் அதை அப்படியே 'காப்பி' செய்து ஒரு சாப்ட்வேர் போல் உருவாக்கி விடலாம்.

நிதி :
இது சாத்தியமான பின் வளர்ச்சி, விவசாயம், தொழிற்சாலை என்பதற்கு நிதி ஒதுக்குவதை விட பல ஆயிரம் மடங்கு அதிக பணத்தை செயற்கை நுண்ணறிவிற்காக உலக நாடுகள் ஒதுக்கும்.

04. சுற்றுச்சூழல் அழிவு :
இயந்திரங்கள் மிகவும் பெருகி போனப்பின் சுற்றுசூழல் அசாதாரணமாக அழியும், ஏனெனில் இயந்திரங்களுக்கு சுவாசம், நீர், உணவு என்று எதுவும் தேவையில்லை.

இயற்கை :
எது தேவையில்லையோ அது இயற்கையாகவே அழிந்து போகும் என்பது தான் இயந்திர நியதி.

03. சூப்பர் பவர் மனிதர்கள் :
இயந்திர காலம் முழுமை அடைந்த பின் தன்னை விட அதிக சக்தி வாய்ந்த ரோபோட்களை மீறி செயல்பட மனித இனம் நினைக்கும் நிலை வரும். அப்போது தான் சூப்பர் பவர் மனிதர்கள் உருவாவார்கள்.

திறமை :
அவர்கள் செயற்கை மனிதர்களாக மட்டுமின்றி மிகவும் சக்தி வாய்ந்த, திறமையான தெளிவாக இருப்பார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

02. மாபெரும் வேலை இல்லாத நிலை :
மனிதனுக்கு மனிதன் மீதான நம்பிக்கையின்மையே இயந்திர வளர்ச்சியின் ஆதி காரணமாகும் அப்படியாகத்தான் மனிதனுக்கு பதில் ரோபோட்கள் வேலைக்கு சேர்க்கப்படுகின்றன.

வேலைகள் :
இந்த நிலை நீடித்து எல்லா வேலைகளிலும், எல்லா வேலைகளையும் இயந்திரங்களே செய்தால் உலகில் மாபெரும் வேலையின்மை நிலை ஏற்படும்.

01. அழிந்தன்சுவடு உறுப்புகள் :
ஒரு கட்டத்தில் கிட்டத்தட்ட அனைத்து பணிகளையும் இயந்திரங்கள் செய்ய மனிதர்கள் படிப்படியாக திறன்களை இழக்க நேரிடும் கூடவே அவர்களது உறுப்புகளும் தான்.

பயனற்ற நிலை :
பின்பு மனித உடலில் இருக்கும் பல உறுப்புகள் செயல்பட மறந்து போகும் அதாவது பயனற்ற உடல் உறுப்புகளாக மாறிவிடும், மனித இனத்தின் அழிவு சாத்தியமாகும்.

மேலும் இது சார்ந்த செய்திகளை படிக்க :

தமிழ் கிஸ்பாட் :
மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!


Click it and Unblock the Notifications