அமெரிக்க விசா தடை உத்தரவுக்கு சுந்தர் பிச்சை தெரிவித்த கருத்து இதுதான்.!
கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி அதிகாரி சுந்தர் பிச்சை அவ்வப்போது டிவிட்டரில் சில கருத்துகளை கூறிவருகிறார், அதன்படி தற்போது 2020 இறுதி வரை வேலை விசாக்களை நிறுத்திவைத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் அறிவிப்பில் சற்று வருத்தம் அளிப்பதாக கூறியுள்ளார் சுந்தர் பிச்சை.

குறிப்பாக புலம்பெயர்ந்தோருடன் தொடர்ந்து நின்னு அனைவருக்கும் வாய்ப்பை விரிவுபடுத்தும் வகையில் கூகுள் நிறுவனம் செயல்படும் என்றும் சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியது என்னவென்றால்,

வெளிநாட்டிவர் அமெரிக்காவின் பொருளாதார வெற்றிக்கு மகத்தான பங்களிப்பை வழங்கியுள்ளது. இதனால் தொழில்நுட்பத்தில் உலகளாவிய தலைவனாகவும் அமெரிக்கா உயர்ந்தது, இதனால் இன்று கூகுள் நிறுவனமாகவும் உள்ளது. அமெரிக்க அரசின் இந்த அறிவிப்பு மூலம் ஏமாற்றமடைந்துள்ளோம், ஆனால் தொடர்ந்து புலம்பெயர்ந்தோருடன் நின்று அனைவருக்கும் வாய்ப்பைவிரிவுபடுத்துவதற்காக பணியாற்றுவோம் என்று கூறியுள்ளார்.
2020-ம் ஆண்டின் இறுதி வரை எச் -1 பி, எச் -2 பி, எல் மற்றும் ஜே போன்ற பிரிவுகளில் வழங்கப்பட்ட பணி விசாக்களை நிறுத்தி வைக்கும் உத்தரவை அதிபர் டிரம்ப் அவர்கள் வெளியிட்ட சில மணிநேரங்களுக்கு பிறகு சுந்தர் பிச்சையிடம் இருந்து இப்படி ஒரு ட்வீட்வந்துள்ளது.

அமெரிக்காவின் விசாக்கள் ரத்து செய்யப்பட்டது ஏன் என்பது குறித்து அமெரிக்காவின் வெள்ளை மாளிகை வெளியிட்டஅறிவிப்பில் "எச் -1 பி, எச் -2 பி மூலம் கூடுதல் தொழிலாளர்களின் நுழைவு, ஜே, மற்றும் எல் அல்லாத புலம்பெயர்ந்தோர் விசா திட்டங்கள் கொரோனா பரவலால் ஏற்பட்ட அசாதாரண பொருளாதார இடையூறுகளால் பாதிக்கப்பட்ட அமெரிக்கர்களுக்கு வேலை வாய்ப்புகளுக்கு குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலை முன்வைக்கின்றன, எனவே இந்த ஆண்டு இறுதி வரை ரத்து செய்யப்படுகிறது. ஆனால் இந்த விசாக்களில் ஏற்கனவே அமெரிக்காவில் உள்ளவர்களுக்கு இந்த ரத்து பொருந்தாது என்றும் கூறப்பட்டுள்ளது.

குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், எச்-1 பி விசா எனப்படுவது அமெரிக்காவிற்கு செல்லும் இந்திய தொழில்நுட்ப வல்லுநர்களால் அதிகம் பயன்படுத்தப்படும் வேலைவாயப்பு விசாக்களில் ஒன்றாகும். இந்த விசாக்களில் கூகுள், மைக்ரோசாப்ட் போன்ன உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனங்களும், இந்திய தொழில்நுட்ப நிறுவனங்களான டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோவும் இந்தியாவில் இருந்து
அமெரிக்காவிற்கு பணியாளர்களை அனுப்ப பயன்படுத்தி வந்தன. தற்போது இதற்கு தான் தடை ஏற்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications