இணையதள ஊழல்கள், தெரிந்தும் ஏமாராதீர்கள் மக்களே
இன்டெர்நெட் உங்களுக்கு தெரியாத பல நல்ல விஷயங்கள் மற்றும் கெட்ட விஷயங்கள் என அனைத்தும் கிடைக்கும் இடம் என்று சொல்லலாம். இன்று பலரக்கும் வேலைவாய்ப்பை வழங்கும் இடமாகவும் இதை சொல்லாம்.
அதிகளவு பலன்கள் இருந்தாலும் அதே அளவு கேடு நிறைந்த இடமாகவும் இன்டெர்நெட் இருக்கின்றது. இன்று பலரும் இன்டெர்நெட் ஊழல்களில் சிக்கி ஏமாறுவது வாடிக்கையாகிவிட்டது. அந்த வகையில் உங்களுக்கு தெரிய வேண்டிய சில இன்டெர்நெட் ஊழல்களை அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..

டிக்கெட்
பயனச்சீட்டு முன்பதிவு செய்வது இன்டெர்நெட் ஊழல்களில் முதன்மையாக இருக்கின்றது. இணையத்தில் டிக்கெட்களை வாங்கும் போது பிரபலமான பணம் செலுத்தும் முறையை பயன்படுத்தலாம்.

லின்க்
முகநூல் பயன்படுத்தும் போது இதை நிச்சயம் உணர்ந்திருப்பீர்கள், வேடிக்கையான தலைப்பு கொடுக்கப்பட்ட செய்தி உங்கள் பக்கத்தில் தோன்றும் அதை முழுமையாக படிக்க அந்த லின்க்கை க்ளிக் செய்ய நேரிடும் அவ்வாறு க்ளிக் செய்யும் போது வேறு இணைய பக்கம் திற்க்கும் அவை முழுதும் வைரஸ் நிரைந்திருக்கும்.

அழைப்பு
தெரியாத தொலைபேசி எண்களில் இருந்து அழைப்புகள் வரும் அவைகளில் காவல் துறையில் இருந்து யாரும் பேசுவதாக கூறி உங்கள் தகவல்களை கேட்பார்கள் அவ்வாரு அழைக்கும் போது நம்பரை சரியானதா என்பதை பாருங்கள், மேலும் அரசு தரப்பில் இருந்து இவ்வாறு அழைப்புகள் வருவதற்கு சாத்தியமே இல்லை

மின்னஞ்சல்
உங்கள் வங்கி கனக்கு விவரங்கள் மாற்றப்பட்டுள்ளன, அவற்றை மீண்டும் மாற்றியமைக்க இந்த லின்க்கை க்ளிக் செய்யவும் என்று உங்களுக்கு வரும், அவ்வாறு க்ளிக் செய்தால் எதுவும் நடக்காது, ஏன் என்றால் அது வங்கி மூலம் அனுப்பப்பட்ட மின்னஞ்சல் கிடையாது.
எந்த வங்கியும் இவ்வாரான மின்னஞ்சல்களை அனுப்பாது. வங்கியில் இருந்து வரும் மின்னஞ்சல்களில் எவ்வாறு பாஸ்வேர்டை மாற்ற வேண்டும் என்றும் தான் குறிப்பிடப்பட்டிருக்கும்.

பெண்
சில தளங்களில் அழகான பெண்களின் புகைப்படங்கள் கொடுக்கப்பட்டு அவர்களுடன் நீங்கள் எந்நேரமும் பேச முடியும், ஆனால் அவர்களை நேரில் சந்திக்க பயனச்சீட்டிற்கும் நீங்களே பணம் செலுத்த வேண்டியிருக்கும். உண்மையில் அவ்வாறு யாரும் இருக்க மாட்டார்கள் நீங்கள் செலவு செய்த பணம் திரும்ப கிடைக்காது.

கடத்தல்
இந்தியாவில் இது எந்தளவு சாத்தியம் என்றாலும் இப்படியும் நடக்கத்தான் செய்கின்றது பாஸ்,
உங்கள் குசும்பத்தார் அல்லது நண்பர்கள் யாரேனும் கடத்துப்பட்டு விட்டதாக கூறி மின்னஞ்சல் அனுப்பப்படும். அவர்களை மீட்க உடனடியாக பணம் அனுப்ப வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டிருக்கும் .

தொண்டு நிறுவன ஊழல்
சிலர் தொண்டு நிறுவனங்களின் பெயரில் பணம் வசூலித்து மக்களை ஏமாற்றி வருகின்றனர்.

பிரபலம்
சில மின்னஞ்சல்களில் உண்மையில் இல்லாத பிரபலத்துடன் பயனிக்க சிறிய தொகை செலுத்தினால் போதும் என்று குறிப்பிடப்பட்டிருக்கும்.


Click it and Unblock the Notifications








