விண்வெளி பட்டாம்பூச்சி: விஞ்ஞானிகள் பதிவு செய்த அருமையான காட்சி.!
இப்போது உள்ள தொழில்நுட்ப வசதிகள் மூலம் நாம் வானில் நிகழும் மிகப் பெரிய அதிசயங்களை கூட எளிதாக தெரிந்துகொள்ள முடிகிறது, அதன்படி ESO-வின் மிகப்பெரிய தொலைநோக்கி மூலம் விண்வெளியில் தோன்றிய ஒளிரும் வாயுவின் பட்டாம்பூச்சிப் போன்ற வடிவத்தை வானியாளர்கள் பார்த்துள்ளனர்.

வெளிவந்த தகவலின் அடிப்படையில் பூமியிலிருந்து 3000 முதல் 6500 ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கும் விண்வெளியில் இந்த
காட்சி நடந்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது வானத்தில் தோன்றிய இந்த பட்டாம்பூச்சியின் இறக்கைகள் கிட்டத்தட்ட
19ட்ரில்லியன் உருவாக்கிய கிலோமிட்டர் என்றும், அதாவது இரண்டு ஒளி ஆண்டுகள் செல்லும் தூரம் என்றும் கூறப்படுகிறது.

இதன் உடற்பகுதியை உருவாக்கிய ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜன் சுமார் 10,000டிகிரி செல்ஷியஸ் அதாவது சூரியனைவிட இரண்டு மடங்கு வெப்பம் அதிகமாகவதால் இதுபோன்ற நிகழ்வு உருவாக்கியுள்ளது என்று கூறப்படுகிறது.

மேலும் இதன் மையத்தில் இரண்டு நட்சத்திரங்கள் அருகருகே அமைந்து சமச்சீர் தோற்றத்தை உருவாக்கியதால்தான் இந்த ஒரே அளவிலான இறக்கைகள் தோன்றியதுஎன வானியலர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக என்ஜிசி 2899-ஐ பூமியின் தெற்கு அரைக்கோளத்திலிருந்து மட்டுமே பார்க்கமுடியும். மேலும் சக்திவாய்ந்த தொலைநோக்கியால்
மட்டுமே இதுபோன்ற காட்சிகளை மிகவும் துல்லியமாக பார்க்கமுடியும் என வானியலர்கள் கூறியுள்ளனர்.

இந்த அட்டகாசமான தொலைநோக்கி சிலியில் அமைக்கப்பட்டுள்ளது, இங்குள்ள நான்கு 8.2மீட்டர் தொலைநோக்கிகள் விண்வெளியில் இருக்கும் பல விண்கற்கள், சிறுகோள்கள் மற்றும் ஈரப்பு அலையிலிருந்து உருவாகும் வெளிச்சம் போன்ற எண்ணற்ற உருவகங்களைகண்டறிந்துள்ளது.

இது 1835-ம் ஆண்டு பிரிட்டிஷ் வானியலாளர் ஜான் ஹெர்ஷல் என்பவரால் நெபுலா கண்டுபிடிக்கப்பட்டது என்றாலும் கூட இதுபோன்ற துல்லியமான காட்சியை இதற்கு முன்பு பார்த்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications