ராவணன் பெயரில் முதல் செயற்கைகோள் ஏவிய இலங்கை: தமிழனுக்கு பெருமை.!
இலங்கை முதல் முறையாக விண்வெளிக்கு ராவணா-1 என்ற செயற்கைகோளை வெற்றிகரமாக விண்வெளிக்கு செலுத்தியுள்ளது. மேலும், வரலாற்றிலும் முக்கிய இடம் பிடித்துள்ளது. இலங்கையை ஆண்ட தமிழ் மன்னன் பெயரிலேயே அந்நாட்டு
இலங்கை முதல் முறையாக விண்வெளிக்கு ராவணா-1 என்ற செயற்கைகோளை வெற்றிகரமாக விண்வெளிக்கு செலுத்தியுள்ளது.
மேலும், வரலாற்றிலும் முக்கிய இடம் பிடித்துள்ளது.

இலங்கையை ஆண்ட தமிழ் மன்னன் பெயரிலேயே அந்நாட்டு அரசால் செயற்கைகோள் ஏவப்பட்டிருப்பது தமிழருக்கு பெருமையை சேர்க்கும் விதமாக அமைந்துள்ளது.

ராவணன் யார்:
ராவணன் என்ற தமிழன் மன்னன் முன்பு இலங்கையை திறம்பட ஆண்டு வந்தார். அவரின் ஆட்சிகாலத்தில் இலங்கை சொர்க் பூமியாக விளங்கியுள்ளது.
மேலும், ராவணன் 10 துறைகளில் சிறந்த ஆளுமையை வைத்து இருந்தார். இதனால் அவருக்கு புராணங்களில் 10 தலையுடன் கற்பனை ஓவியம் வரைப்பட்டது.

தொழில் நுட்பத்தில் முன்னோடி:
இலங்கையை ஆண்ட ராவணன் தொழில் நுட்பத்திலும் முன்னோடியாக இருந்துள்ளார். அவர் புஸ்பகர ரக விமானம் உட்பட சுமார் 24 நவீன விமானங்களையும் பயன்படுத்தியுள்ளார் என்று ஆந்திர பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் ஜி.நாகேஷ்வர் ராவ் தெரிவித்துள்ளார்.

சிகிரியா மலையே ஆதாரம்:
இலங்கையில் ராவணன் ஆட்சி செய்த போது, அவர் நவீன ரக விமானம் உள்ளிட்டவைகளையும் அவர் பயன்படுத்தி இருந்தார். இலங்கையில் உள்ள சிகிரியா மலைத்தொடரில் விமான தளங்கள் இருந்த அடையாளங்கள் காணப்படுகின்றன.

வெற்றிகரமாக ஏவப்பட்டது:
இலங்கையின் இளம் பொறியாளர் இருவரினால் வடிவமைக்கப்பட்ட ராவணா-1 என்ற முதலாவது செயற்கைகோள் விண்வெளிக்கு வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.
நாசா விண்வெளி மையத்தில் இருந்து வியாழக்கிழமை வெற்றிகரமாக விண்வெளிக்கு செலுத்தப்பட்டது.

1.1 கிலோ கிராம் எடை:
இதன் இந்த செயற்கைகோள் எடை 1.1 ஆகும். ஜப்பான் க்யூஷூ இன்ஸ்டியூட் என்ற நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது.

இரண்டு பொறியாளர்கள்:
இலங்கையை சேர்ந்த திரிந்து தயாரத்ன மற்றும் துலனி சாமிகா என்ற இரண்டு பொறியாளர்கள் இந்த செயற்கைகோளை வடிவமைத்தனர்.
ஜப்பான் விண்வெளி நிலையத்தினால் அமெரிக்காவிலுள்ள நாசா நிறுவனத்திற்கு அனுப்பட்டது.

இணைந்த இலங்கை:
ராவணா-1 என்ற இந்த செயற்கைகோளை வெற்றிகரமாக தற்போது விண்ணுக்கு அனுப்பியுள்ளது. இதன் மூலம் செயற்கைகோள் வைத்திருக்கும் பட்டியில்ல இலங்கையும் இணைந்துள்ளது.


Click it and Unblock the Notifications