சர்வதேச விண்வெளி ஆராய்சி மையத்திலிருந்து பூமிக்கு வந்த வீரர்கள்.! கடலில் இறங்கி கரை சேர்ந்தனர்.!
கொரோனா பாதிப்பு அதிகளவு உள்ளதால் பல்வேறு இடங்களில் கட்டுப்பாடுகளுடன் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது, குறிப்பாக மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல கூட இ-பாஸ் தேவைப்படுகிறது. குறிப்பாக பல்வேறு மக்கள் வீட்டிக்குள்ளேய முடங்கி இருக்கும் நிலை உள்ளது. இந்நிலையில் இரண்டு மாதங்களை விண்வெளியில் கழித்துவிட்டு திரும்பியுள்ளனர் இரண்டு வீரர்கள்.

அன்மையில் ஸ்பேஸ் எக்ஸ் தனியார் நிறவனத்தின் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு நாசாஅனுப்பிய விண்வெளி வீரர்கள் இன்று பூமிக்கு திரும்பினர்.

அதாவது கடந்த மே மாதம் 31-ம் தேதி ப்ளோரிடாவிலுள்ள கென்னடி ராக்கெட் ஏவுகளத்தில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் க்ரூ டிராகன் விண்கலம் மூலம் இரு விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்பப்பட்டனர்.

குறிப்பாக ராபர்ட் எல்.பென்கென், டக்ளஸ் ஜி ஹர்லி ஆகிய இரண்டு விண்வெளி வீரர்கள் தான் ஆராய்ச்சி மையத்தில் இருமாதங்களாக ஆராய்ச்சி செய்தனர். அதாவது கார்ப்பரேட் ஆய்வு, பார்வையிடல், செயற்கைகோள் பழுதுபார்ப்பு ஆகியபணிகளை மேற்கொண்டர்.
பின்பு வருங்காலத்தில் பலர் விண்வெளிக்கு செல்வதற்கான முதல் பயணமாக இது அமைந்துள்ளது. ஆராய்ச்சியை முடித்துக்
கொண்டு அவர்கள் கடந்த 1-ஆம் தேதி பூமியை நோக்கி புறப்பட்டனர்.

சுருக்கமாக கூறவேண்டும் என்றால்,விண்வெளிக்கு இதுநாள் வரை எந்த தனியார் நிறுவனமும் மனிதர்களை அனுப்பியதில்லை. வரலாற்றிலேயே முதல்முறையாக மனிதர்களை அனுப்பும் முதல் தனியார் நிறுவனம் என்றும் பெருமையை எலான் மஸ்க்கிற்கு சொந்தமான ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் நிறுவனம் பெற்றது.

இதற்கு முன் மனிதர்களை விண்ணுக்கு அமெரி்க்கா, ரஷ்யா, சீனா அரசுள் மட்டுமே அனுப்பி இருந்தன.முதல்முறையாக தனியார் நிறுவனம் மனிதர்களை அனுப்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications