"கடுமையான விலை கொடுப்பீர்கள்" - வட கொரியாவை மிரட்டும் தென் கொரியா...!
வடகொரியா ஆனது, 2006-ஆம் ஆண்டில் இருந்து கடந்த 2015-ஆம் ஆண்டு மே மாதம் வரையிலாக நீர்மூழ்கி கப்பல் ஏவுகணை, பலமுறை மூன்று கட்ட ராக்கெட்களை விண்ணுக்குள் செலுத்த முயற்சி, நீண்ட தூர தெப்போடோங்- 2 ஏவுகணை என பலவகையான அதிநவீன ஆயுத சோதனைகளை நடத்திக் கொண்டே வருகிறது.
இப்படியாக, அண்டை நாடுகள் தொடங்கி பெரும்பாலான உலக நாடுகளின் எதிர்ப்பை சம்பாதித்துக் கொண்டிருக்கும் வடகொரியாவிற்கு தற்போது நேரடியாக மிரட்டல் விடுத்துள்ளது - தென் கொரியா..!

'வெளியீட்டு ஏவுதல்' சோதனை :
பிப்ரவரி 8 முதல் 25 ஆகிய இடைப்பட்ட தேதிகளுக்குள் 'வெளியீட்டு ஏவுதல்' சோதனை ஒன்றை நடத்த உள்ளதாக வட கொரியா நேற்று செய்தி வெளியிட்டு இருந்தது.

பாலிஸ்டிக் தொழில்நுட்ப ஏவுகணை :
வட கொரியாவின் இந்த சோதனையானது கண்டம் விட்டு கண்டம் தாண்டி தாக்கும் பாலிஸ்டிக் தொழில்நுட்பம் சார்ந்த ஏவுகணை சோதனையாக இருக்கலாம் என்று விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கவும் கிளம்பியது சர்ச்சை.

ஜப்பான் :
இதனை தொடர்ந்து ஜப்பான் நாட்டு பாதுகாப்பு மந்திரி, ஜப்பான் பிராந்தியத்தை நெருங்கும் எந்த விதமான ஏவுகணையையும் சூட்டு வீழ்த்துமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

வாஷிங்டன் அரசு :
மேலும், ஏவுகணை செலுத்துதல் மீதான ஐ.நா தடையை மீறும் வட கொரியாவின் இந்த செயல் ஆனது "அதிர்ச்சியான மீறல்" என்று வாஷிங்டன் அரசும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

எச்சரிக்கை :
அண்டை நாடான தென் கொரியா, இந்த ஏவுதல் சோதனையை வட கொரியா நடத்தக்கூடாது என்று வெளிப்படையாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

மிரட்டல் :
அதுமட்டுமின்றி மீறி இந்த சோதனை நடத்தப்பட்டால் "கடுமையான விலை கொடுப்பீர்கள்" என்று தென் கொரியா, வட கொரியாவிற்கு எதிராக மிரட்டல் ஒன்றும் விடுத்துள்ளது.

அமைதி - வளர்ச்சி :
ஆனால் வடகொரியாவோ தங்கள் விண்வெளி திட்டங்கள் அனைத்தும் மிகவும் அமைதியான முறையிலும், கண்டம் விட்டு கண்டம் தாண்டும் ஏவுகணைகள் வளர்ச்சி நோக்ககத்திலும் நடைபெறுகின்றன என்று தெரிவித்துள்ளது.

சர்வதேச கண்டனம் :
இந்த ஆண்டு ஜனவரி 6 ஆம் தேதி தனது நான்காவது அணுகுண்டு சோதனையை நிகழ்த்தி சர்வதேச கண்டனத்தை பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications