விரைவில்: மெட்ரோ ரயலில் பயனம் செய்ய முன்பதிவு வசதி அறிமுகம்.!
இதற்குவேண்டி தற்போது உள்ள அனைத்து நுழைவு அனுமதி இயந்திரங்களில் மென்பொருள் மாற்றம் செய்யப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்சமயம் வந்த அறிவிப்பு என்னவென்றால் பெங்களூரு மெட்ரோ ரயில் சேவையில் டிக்கெட் முன்பதிவு செய்யும் சேவை விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு இந்த வசதி பல்வேறு மக்களுக்கும் பயனுள்ள
வகையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக மொபைல் செயலி மூலம் பெங்களூரு மெட்ரோ ரயிலில் பயணிப்பதற்கான டிக்கெட்டை பெறும் வசதி அறிமுகம் செய்யப்படும் என்று அறிவிப்ப வெளிவந்துள்ளது. மேலும் இந்த வசதி பணிகளுக்கு செல்லும் மக்களுக்கு அருமையாக பயன்படும்.

நம்ம மெட்ரோ
பின்பு விரைவில் வெளிவரும் நம்ம மெட்ரோ என்ற செயலியில் உள்ளே நுழைந்ததும், ஏறும் இடம், இறங்கும் இடம், பின்பு பயணிகள் எண்ணிக்கையைக் குறிப்பிட்டு, அதற்குரிய கட்டணத்தை ஆன்லைன் மூலமே செலுத்தலாம்.

அனுமதி
மேலும் பணம் செலுத்தியதும் அந்த மொபைல் செயலியில் டிக்கெட்க்கு சமமான க்யு.ஆர் குறீயடு (QR) வழங்கப்படும். இதை மெட்ரோ ரயில் நிலையத்தில் உள்ள நுழைவு அனுமதி வழங்கும் இடத்தில் இயந்திரத்தில் வைத்து அனுமதி பெற்று உள்ளே செல்ல முடியும்.

பிளாஸ்டிக் டிக்கெட்
மேலே குறிப்பிட்ட இந்த செயல்பாடு மூலம் பிளாஸ்டிக் டிக்கெட் பயன்பாடு தவிர்க்கப்படும், பின்பு ஓராண்டுன்டுக்குள் இதனை
செயல்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக மெட்ரோ நிலையம் சார்பாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மெட்ரோ ஸ்மார்ட் கார்டு
இதற்குவேண்டி தற்போது உள்ள அனைத்து நுழைவு அனுமதி இயந்திரங்களில் மென்பொருள் மாற்றம் செய்யப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு பெங்களூரில் பேருந்து மற்றும் மெட்ரோ ரயிலில் பயணிக்க பயன்படும் ஒரே ஸ்மார்ட்கார்டு அறிமுகம் செய்யும் திட்டமும் பரிசீலனையில் உள்ளது. தற்சமயம் வரை டெல்லி, கொச்சி, மும்பை போன்ற நகரங்களில் மெட்ரோ ரயில்
நிர்வாகம் ஈ-வாலட் நிறுவனங்களுடன் இணைந்து மெட்ரோ ஸ்மார்ட் கார்டு ரீசார்ஜ் வசதியை அளிக்கிறது என்பது குறிப்பிடத்தக்து.


Click it and Unblock the Notifications