டிரைவர் குடிபோதையில் இருந்தால் கார் ஸ்டார்ட் ஆகாது..!
இந்தியாவில், வருடத்திற்கு 1.34 லட்சம் பேர் சாலை விபத்துகளில் இறக்கின்றனர். அதில் 70 % விபத்துகள், குடிபோதையில் வாகனம் ஓட்டுவதால் ஏற்படுகின்றன.

ராத்திரி பகலா போலீஸ்காரங்க ரோடுல நின்னு, ஒருத்தன் ஒருத்தனைய மடக்கி பிடிச்சி, ஊத சொல்லி விசாரிச்சி பிடிப்பட்டா, டரன்க் அண்ட் ட்ரைவ் கேஸ்லயோ இல்ல லஞ்சத்துலயோ முடியும், பிடிபடாதவங்க தப்பிச்சு வீட்டுக்குப் போவாங்க, இல்லனா வழியிலயே எங்காயாச்சும் முட்டி ஆஸ்பத்திரி போவாங்க, இல்லனா மொத்தமா மேல போவாங்க. இவ்ளோ சிக்கல் இனிமே தேவையே இல்ல, குடி போதையில் இருப்பவர்கள் டிரைவர் சீட்டில் அம்ரந்தால் கார் ஸ்டார்ட் ஆகாது, அவ்வளவுதான்ங்க மேட்டர் ஓவர்..!
2015-ன் தலை சிறந்த 10 தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள்..!
காரை ஸ்டார்ட் செய்யும் புஷ் ஆன் பட்டனிலோ அல்லது ஸ்டீரிங் வீலிலோ பொருத்தப்பட்டு இருக்கும் ஒரு ஸ்பெஷல் டச் பேட், இன்ப்ரா ரெட் ஒளி மூலம் ஆல்கஹாலை கண்டுபிடிக்க கூடும். அது 0.08% அல்லது அதைவிட அதிகமான ஆல்கஹால் காண்சென்ட்ரேஷன், டிரைவரின் ரத்தத்தில் இருப்பதை கண்டுபிடித்து விட்டால் காரை ஸ்டார்ட் செய்ய அனுமதிக்காது.

இது மட்டுமின்றி மற்றுமொரு சோதனையும் டிரைவருக்கு உண்டு. அது சீட்டில் அமரந்து டிரைவர் சுவாசிக்கும் போது அவர் வெளிக்கிடும் சுவாசத்தில் எந்த அளவு ஆல்கஹால் கலந்து உள்ளது என்பதை கண்டுபிடிக்கும் கருவி ஒன்றும், டிரைவர் சீட்டின் அருகே பொருத்தப்பட்டு இருக்கும். சோதனையில் ஆல்கஹாலின் வரையறை தாண்டினால் வண்டி ஸ்டார்ட் ஆகாது..!
அழுக்கு ஸ்மார்ட் போன்களை சுத்தம் செய்ய எளிய வழிமுறைகள்..!
இந்தியாவை ஒப்பிடுகையில் 39 % குறைவான - குடிபோதையால் ஏற்படும் - சாலை விபத்துகளால் மரணங்களை சந்திக்கும் அமெரிக்கா, இந்த இரண்டு தொழில்நுட்ப கருவிகளில் ஒன்றையோ அல்லது இரண்டையுமே, 2020-க்குள் நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளது..!


Click it and Unblock the Notifications