ஸ்வைப் ஜூனியர் இது குழந்தைகளுக்கு மட்டும் தானாம்..!!
ஸ்மார்ட்போன் சந்தையில் அடுத்த புரட்சியை ஏற்படுத்தும் நோக்கில் அட்டகாசமாக களம் இறங்கியிருக்கின்றது ஸ்வைப் டெலிகாம் நிறுவனம். வழக்கமான ஸ்மார்ட்போன் மாடல்களை தவிர்த்து சந்தையில் அனைவரயும் வாய் பிளக்க வைத்திருக்கும் விதமாக அந்நிறுவனம் வெளியிட்டிருக்கும் கருவி குறித்த தகவல்களை அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..

ஜூனியர்
ஸ்வைப் நிறுவனம் ஜூனியர் எனும் புதிய மாடல் ஸ்மார்ட்போனினை சந்தையில் அறிமுகம் செய்திருக்கின்றது.

குழந்தை
குழந்தைகள் மட்டும் பயன்படுத்தும் அளவு இந்த கருவி வடிவமகைப்பட்டிருக்கின்றது இந்த கருவியின் சிறப்பு.

வயது
சுமார் 5 முதல் 15 வயதுடைய குழந்தைகள் மட்டும் இந்த கருவியை பயன்படுத்தலாம் என அந்நிறுவனம் தெரிவித்திருப்பதோடு விரைவில் ஆன்லைன் மூலம் விற்பனை துவங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

யூஸர் இன்டர்ஃபேஸ்
குழந்தைகளை கவரும் யூஸர் இன்டர்ஃபேஸ், ஜியோ டிராக்கிங், ஜியோ ஃபென்சிங் என குழந்தைகளின் நடவடிக்கைகளை ட்ராக் செய்யும் அம்சங்களும் வழங்கப்பட்டுள்ளது.

ஆப்ஸ்
மேலும் ஆப் மேனேஜ்மென்ட் சிஸ்டம் மூலம் செயலிகளை ப்ளாக் மற்றும் அனுமதிக்கும் ஆப்ஷன்கள் இந்த கருவியில் வழங்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

சிறப்பம்சங்கள்
ஸ்வைப் ஜூனியர் கருவியில் 4.5 இன்ச் ஐபிஎஸ் டிஸ்ப்ளே, 1.3 ஜிகாஹெர்ட்ஸ் டூயல் கோர் பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது.

மெமரி
இதோடு 512 எம்பி ரேம், 4 ஜிபி இன்டர்னல் மெமரியும், ஆண்ட்ராய்டு 4.4 கிட்காட் இயங்குதளம் மற்றும் 3ஜி சேவைகள் வழங்கப்பட்டுள்ளது.

கேமரா
2 எம்பி ப்ரைமரி கேமரா, 0.3 எம்பி முன்பக்க கேமரா வழங்கப்பட்டுள்ளதோடு 1900 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றது.

விலை
தற்சமயம் இந்த கருவியின் விலை ரூ.5,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

முகநூல்
மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.


Click it and Unblock the Notifications