இன்டர்நெட்டில் ஹேக்கர்களை கண்டறிவது எப்படி
இன்டர்நெட் நம் அன்றாட வாழ்க்கையில் இன்றியமையாத ஒன்றாகிவிட்டது. தகவல்களை பறிமாறுவதில் துவங்கி பண பறிமாற்றம் செய்வது வரை பல விஷயங்களுக்கு இன்டர்நெட் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
தினந்தோரும் பல்லாயிர கணக்கானோர் இன்டர்நெட் பயன்படுத்தி வரும் நிலையில் அதில் பல ஏமாற்று பேர்வழிகளும் அதிகமாக இருக்க தான் செய்கின்றன.
இங்கு இன்டர்நெட் பயன்படுத்தும் போது ஹேக்கர்களை கண்டறிந்து பாதுகாப்பாக இருப்பது எப்படி என்பதை தான் பார்க்க இருக்கின்றீர்கள்..

ஸ்பூஃப் ஈமெயில்
பல நெட்டிசன்களும் மின்னஞ்சல்களை அலுவலக ரீதியாகவும் சிலர் தனிப்பட்ட காரியங்களுக்கும் பயன்படுத்துவர். இவர்களை குறி வைத்து ஏமாற்ற குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக கூறி தனிப்பட்ட தகவல்களை பெற நினைப்பர்.

போலி இணையதளங்கள்
சில சமயங்களில் போலி இணையதளங்கள் மற்றும் செயலிகளின் மூலம் ஏமாற்றப்பட அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. பல இடங்களில் வங்கிகளின் இணையங்கள் போலியாக தயாரிக்கப்படுகின்றன, இவைகளை கண்டறிய இணையத்தின் துவக்கத்தில் 'https:' என துவங்குகின்றதா என்பதை பார்க்க வேண்டும், இவ்வாறு 'https:' என இணைய முகவரி துவங்கினால் பெரும்பாலும் அது போலி இணையதளமாக இருக்காது.

விளம்பரம்
இணையங்களில் அதிக சலுகை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பொருட்களை வாங்க நினைப்பது தவறில்லை, ஆனால் 80 முதல் 90 % வரை தள்ளுபடி வழங்கப்பட்டிருந்தால் அங்கு சற்று கவனமாக இருப்பது அவசியம் ஆகும்.

கீ லாஃகர்
இந்த மென்பொருள் மூலம் கம்ப்யூட்டர் கீபோர்டில் டைப் செய்யும் தகவல்களை துள்ளியமாக மீண்டும் எடுக்க முடியும். வெளி இடங்களில் இருக்கும் இன்டர்நெட் மையங்களில் இந்த மென்பொருள் இருந்தால் உங்களது தகவல்களுக்கு பாதுகாப்பு கிடையாது, அதனால் முடிந்த வரை வெளி இடங்களில் வெர்ச்சுவல் கீபோர்டினை பயன்படுத்துவது நல்லது.

க்ரெட்ட் கார்டு தகவல்கள்
இந்த முறை வங்கியில் இருந்து யாரும் க்ரெடிட் மற்றும் டெபிட் கார்டு தகவல்களை அழைப்புகளில் கேட்க மாட்டார்கள் என பல வங்கிகளும் விளம்பரம் செய்து வருகின்றன. இந்நிலையில் வங்கி சார்ந்த அழைப்புகளில் அதிக கவனம் செலுத்துவது நல்லது.


Click it and Unblock the Notifications