ஸ்மார்ட் ஸ்டெத்தோஸ்கோப் கண்டுபிடித்த ஐஐடி மும்பையை சேர்ந்த குழு .! என்ன சிறப்பு தெரியுமா?
உலகையே உலுதூக்கி வரும் கொரோனா தற்போது 210 நாடுகளுக்கு பரவி பெரும் மனித உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், தடுப்பு மருந்து தற்போது வரை கண்டுபிடிக்கப்படாத நிலையில் வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.

குறிப்பாக சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் ஐரோப்பிய நாடுகளை கடந்து தற்போது அமெரிக்காவில்நிலைகொண்டுள்ளது. உலக அளவில் வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கையிலும், உயிரிழப்புகளை சந்தித்த நாடுகளின் பட்டியலிலும் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.

இந்நிலையில் மும்பையை சேர்ந்த குழு ஒன்று ஸ்மார்ட் ஸ்டெத்தோஸ்கோப் சாதனத்தை கண்டுபிடித்துள்ளது, மேலும் இந்தசாதனத்தை கொண்டு தூரத்தில் இருந்து கொண்டே இதய துடிப்பை கேட்க முடியும்.

இதன்மூலம் கொரோனாவைரஸ் பாதிப்பு கொண்ட நோயாளிகளிடம் இருந்து நோய் தொற்று ஏற்படும் அபயாம் வெகுவாக குறையும் என்று கூறப்படுகிறது. மேலும் நோயாளிகளின் இதய துடிப்பு சத்தம் வயர்லெஸ் முறையில் மருத்துவருக்கு ப்ளூடூத் மூலம் அனுப்பப்படுகிறது.

குறிப்பாக மருத்துவர் நோயாளியின் அருகில் செல்ல வேண்டிய அவசியம் ஏற்படாது. பின்பு ஐஐடி குழு உருவாக்கிஇருக்கும் சாதனத்திற்கு காப்பரிமை பெறப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஸ்மார்ட் ஸ்டெத்தோஸ்கோப் சாதனம் மூலம் நோயாளியின் மருத்துவ குறிப்பு சேகரிக்கப்படுகிறது, மேலும் இதனை மற்ற மருத்துவர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் முடியும் என்று கூறப்படுகிறது.

ஐஐடி தொழில்நுட்ப வியாபார தளம் சார்பில் உருவவாக்கப்பட்டு இருக்கும் ஆயுடிவைஸ் எனும் ஸ்டார்ட்அப் துவங்கப்பட்டுள்ளது. மேலும இந்த குழு சாரபில் இதுவரை 1000 ஸ்டெத்தோஸ்கோப்புகள் நாடுமுழுக்க வெவ்வேறு மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சாதனம் ரிலையன்ஸ் மருத்துமனை மற்றும் பிடி இந்துஜா மருத்துமனையை சேர்ந்த மருத்துவர்கள் வழங்கியதகவல்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.


Click it and Unblock the Notifications