Home
News

பலாத்காரம் செய்ய வந்த திருடன்: பெண் சொன்ன ஒரே வார்த்தையில் தெரித்து ஓட்டம்- என்ன சொன்னார் தெரியுமா!

சீனாவில் வூகான் நகரில் இருந்து 3 மணி நேர பயண தூரத்தில் உள்ள நகரம் ஜிங்ஷான். ஜிங்ஷான் நகரில் ஒரு வீட்டுக்குள் கொள்ளையடிக்கும் நோக்கத்துடன் கொள்ளையன் ஒருவன் வீட்டுக்குள் புகுந்துள்ளான். அப்போது அதே வீட்டில் இளம்பெண் ஒருவர் அவரது அறையில் தூங்கியுள்ளார்.

கொள்ளையடிக்க வந்த திருடன்

கொள்ளையடிக்க வந்த திருடன்

கொள்ளையடிக்க வந்த 25 வயது மதிக்கத்தக்க திருடன் அறையில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணை பார்த்து அவரை நோக்கி நெருங்கியுள்ளான். அந்த பெண்ணிடம் பாலியல் வன்புணர்வு நோக்கத்தோடு நெருங்கியுள்ளான்.

சுதாரித்துக் கொண்ட பெண்

சுதாரித்துக் கொண்ட பெண்

சுதாரித்துக் கொண்ட அந்த பெண் திடீரென தனது அறையில் மர்மநபர்கள் நுழைவதை பார்த்து அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டுள்ளார். இதையடுத்து அந்த இளைஞன் அந்த பெண்ணின் கழுத்தை நெரித்து வாயை மூடி உள்ளான்.

கன நேரத்தில் சிந்தித்த பெண்

கன நேரத்தில் சிந்தித்த பெண்

கொள்ளையனின் தவறான நோக்கத்தில் இருந்து எப்படி தப்பிப்பது என கன நேரத்தில் சிந்தித்து ஒரு முடிவெடுத்தார் அந்த பெண். திடீரென பயங்கரமாக இருமியுள்ளார். உடனே அந்த கொள்ளையன் என்ன ஆயிற்று என்று சிந்தித்துக் கொண்டிருந்த நேரத்தில், அந்த பெண் மெதுவாக பேச ஆரம்பித்தார்.

கொரானோ வைரஸ் பாதிப்பு

கொரானோ வைரஸ் பாதிப்பு

தான் வூகான் நகரில் இருந்து வந்துள்ளேன், தனக்கு கொரானோ வைரஸ் பாதிப்பு உள்ளது. கொரானோவால் பாதிப்பால் தன்னை அனைவரும் தனிப்படுத்தி வைத்திருக்கின்றனர் என கூறியபடியே இன்னும் பயங்கரமாக இருமியுள்ளார்.

 தலைதெறிக்க தப்பித்து ஓட்டம்

தலைதெறிக்க தப்பித்து ஓட்டம்

கொரோனோ என்ற வார்த்தையை கேட்டதுமே கொள்ளையன், பெண்ணை பலாத்காரம் செய்யும் முயற்சியில் இருந்து பின்வாங்கி தலைதெறிக்க தப்பித்து ஓடியுள்ளான். அதன்பின் அந்த அந்த பெண் போலீசாருக்கு இதுகுறித்து தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்த விசாரணையில் அனைவரும் கொரோனாவிடமிருந்து பாதுகாக்க மாஸ்க் அணிந்திருப்பதால் விசாரணையில் தாமதம் நேரந்தது.

இளைஞனை கைது செய்த போலீஸ்., இணையத்தில் குவியும் பாராட்டு

இளைஞனை கைது செய்த போலீஸ்., இணையத்தில் குவியும் பாராட்டு

இறுதியாக கொள்ளயடிக்க வந்து பாலியல் பலாத்கார முயற்சியில் ஈடுபட்ட 25 வயதுடைய அந்த வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் உயிர் கொல்லியான கொரோனா வைரஸ், சீனாவில் இளம்பெண் ஒருவரை காப்பாற்றியுள்ளது.

500க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு என தகவல்

500க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு என தகவல்

பெயரை கேட்டாலே நடுங்க வைக்கும் அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள கொரோனா, சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும் 28 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கப்படுகிறது. இதனால் உலக நாடுகள் அனைத்துமே சீனர்களை தங்கள் நாட்டிற்குள் நுழைய தடை விதித்துள்ளன.

இந்திய அரசும் தடை

இந்திய அரசும் தடை

இந்நிலையில் இந்திய அரசும் தடை விதித்துள்ளது. பிப்ரவரி 5ம் தேதிக்கு முன்பு விசா பெற்ற சீனர்கள் இந்த உலகில் எந்த மூளையில் இருந்து வந்தாலும் இந்தியாவில் நுழைய அனுமதி இல்லை என குடியுரிமை துறை அதிகாரிகள் கூறியது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Sexual harrasment: The thief who ran away with the only word the woman said
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X