பிட்காயின்ஸ் மோசடி: ரூ.22.59 லட்சம் சுருட்டிய 7 பேர் மீது வழக்குபதிவு.!
பிட்காயின் என்பது ஒரு டிஜிட்டல் தரத்திலான ஒரு பணம் ஆகும். இதை பணமாக பரிமாற்றம் செய்ய, பாதுகாப்பான மற்றும் தனிப்பட்ட மாற்றுகளைக் கொண்டிருக்க வேண்டும்.
தானே நகரில் பிட்காயின் முதலீடு என்ற பெயரில் ரூ.22.59 லட்சம் மோசடியில் ஈடுபட்ட 7 பேர் மீது குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இன்னும் கைது செய்யப்படவில்லை.

தானே நகரைச் சேர்ந்தவர் ரகுவீர் குல்கர்னி (வயது 45). இவருக்கு தெரிந்த நண்பர் ஒருவர் மூலம் சிறந்த லாபகத்தை அளிக்கும் ஒரு பிட்காயின் முதலீடு திட்டத்தை குறித்து அறிமுகம் செய்யப்பட்டது. இதன்மூலம் அவரிடம் இருந்து ரூ.22.59 லட்சம் பணத்தை மோசடி செய்த 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கந்தாக்பாடா
இந்த மோசடி வழக்கு, கந்தாக்பாடா காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டிருந்தாலும், இது தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

ரூ.22.59 லட்சம்
கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம், இவர் ரூ.22.59 லட்சம் முதலீடு செய்திருந்தார். இந்நிலையில், குல்கர்னி தொடர்பு கொண்டிருந்த நிறுவனத்திடம் இருந்து எந்தவிதமான பணமும் திரும்பக் கிடைக்கவில்லை. மேலும் அவர்கள் வியாபாரத்தை நிறுத்தி விட்டு, தலைமுறைவாகிவிட்டதாக, போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

டிஜிட்டல்
பிட்காயின் என்பது ஒரு டிஜிட்டல் தரத்திலான ஒரு பணம் ஆகும். இதை பணமாக பரிமாற்றம் செய்ய, பாதுகாப்பான மற்றும் தனிப்பட்ட மாற்றுகளைக் கொண்டிருக்க வேண்டும்.

பிட்காயின்
அரசு பொறுத்த வரை, பிட்காயின் அல்லது அது போன்ற கிரிப்டோகரன்ஸிகளின் வர்த்தகத்தில் ஈடுபடுவது, நம் நாட்டில் சட்டவிதிமுறைகளுக்கு உட்பட்டது அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications