செல்பீ மோகம் : சிறுவன் பலி..!!
ஸ்மார்ட்போன் மூலம் செல்பீ எடுத்து கொள்ளும் மோகம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இதன் மூலம் பல உயிர்களும் பறி போகின்றன என்று தான் கூற வேண்டும். அந்த வகையில் செல்பீ எடுக்கும் போது உயிரை விட்டோர் பட்டியலில் இணைந்திருக்கின்றார் ரஷ்யாவை சேர்ந்த பள்ளி மாணவர்.
அதிர்ச்சி : கொலைகார சுறாவை மிஞ்சியது செல்பீ..!

வோலோக்டா நகரை சேர்ந்த 17 வயதான பள்ளி மாணவர் அந்நகரில் இருக்கும் ஒன்பது அடுக்கு கட்டிடத்தில் ஏறி செல்பீ எடுக்க முயன்றிருக்கின்றார். எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி கீழே விழுந்தவர் உடனடியாக மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டார், தீவிர சிகிச்சை பெற்று வந்தவர் சில மணி நேரங்களில் மரணித்தார்.
கொடுமை : பணத்திற்காக இறந்து போனவர்களுடன் செல்பீ..!
செல்பீ மீது அதிக ஆர்வம் கொண்ட இவர் இன்ஸ்டாகிராம் அக்கவுன்டில் மிகவும் ஆபத்தான செல்பீக்களை பதிவு செய்வதை வாடிக்கையாக கொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இன்ஸ்டாகிராமில் இறுதியாக இவர் பதிவு செய்த புகைப்படத்தில் சுவரில் ஒற்றை கையை பிடித்து தொங்கி கொண்டிருந்தார்.
ஜாக்கிரதை : கேவலமான செல்பீக்களின் அணிவகுப்பு..!


Click it and Unblock the Notifications