உடையாத ஸ்மார்ட்போன்களுக்கு வழிவகுக்கும் அற்புத விஷயங்களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.!
சில ஸ்மார்ட்போன்களின் சில பகுதிகள் சிலிகான் மற்றும் இதர கலவைகள் போன்றவற்றை பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது.!
விஞ்ஞானிகள் மேம்பட்ட இரசாயன நிலைத்தன்மை மற்றும் ஈரப்பதம் மற்றும் நெகிழ்வுத்தன்மையுடன் ஒரு புதிய அதிசய பொருளை கண்டுபிடித்துள்ளனர். இது ஸ்மார்ட்போன்களிலும் பிற சாதனங்களிலும் பயன்படுத்தப்படக்கூடியதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது, சில ஸ்மார்ட்போன்களின் சில பகுதிகள் சிலிகான் மற்றும் இதர கலவைகள் போன்றவற்றை பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது. இவை விலையுயர்ந்தவை மற்றும் எளிதில் உடையப்படும் தன்மைகொண்டவையாக இருக்கிறது. கடந்த ஆண்டு கிட்டத்தட்ட 1.5 பில்லியன் ஸ்மார்ட்போன்கள் எளிதில் உடைக்கப்பட்டுள்ளன.
இங்கிலாந்தில் உள்ள குயின்ஸ் பல்கலைக்கழக பெல்ஃபாஸ்ட்டில் உள்ளவர்கள் உட்பட ஆராய்ச்சியாளர்கள், கிராபெனே மற்றும் ஹேபிஎன் சி60 போன்ற அடுக்கடுக்கான மூலக்கூறுகளை கண்டுபிடித்துள்ளனர், இவை ஒரு தனித்துவமான பொருள் தொழில்நுட்பத்தை உருவாக்க முடியும் மேலும் ஸ்மார்ட்போன் சாதனங்களுக்கு இவை பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கலவையிலிருந்து தயாரிக்கப்பட்ட ஸ்மார்ட் சாதனம் தனித்துவமான பொருட்களின் கலவையிலிருந்து பயன் பெறும்இ வான் டெர் வால்ஸ் திடப்பொருள்கள் என்று அழைக்கப்படும் இந்த செயல்முறை, பயன்படுத்தி இவை உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் வேதியியல் நிலைத்தன்மை, ஈரப்பதம் மற்றும் நெகிழ்வுத்தன்மை ஆகியவற்றை மேம்படுத்தியுள்ளது, இந்த கண்டுபிடிப்பு என்று குயின்ஸ் பல்கலைக்கழகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications