சாதனை : தொழில்நுட்ப புரட்சிக்கு, மேலும் ஒரு எடுத்துக்காட்டு..!
உணர்ச்சிகளை உணரக்கூடிய, புரட்சிகாரமான பிளாஸ்டிக் தோலை கண்டுப்பிடித்து விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர். இதன்மூலம் விரைவில் செயற்கை உடல் பாகங்கள் உணர்ச்சிகளை உணர இருக்கிறது என்று கூறலாம்.

ஸ்டான்ஃபோர்ட் பல்கலைகழகத்தை (Stanford University) சேர்ந்த ஸ்டான்ஃபோர்ட் ஆராய்ச்சியாளர்கள் குழு மூலம், பல ஆண்டுகள் நடத்தப்பட்ட ஆய்வில் இருந்து உணர்ச்சி, வலி மற்றும் வெப்பம் ஆகியவற்றை உணரும்படியான தோல் உருவாக்கம் பெற்றுள்ளது.

உருவாக்கம் பெற்ற பிளாஸ்டிக் தோல் ஆனது இரண்டு அடுக்குகளால் உருவாக்கப்பட்டுள்ளதாம், அதில் மேல் அடுக்கானது உணர்வு இயந்திரநுட்பம் (Sensing mechanism) என்றும், கீழ் அடுக்கானது எலெக்ட்டிரிக் சிக்னல்களை (Electric Signal) உயிர்வேதியியல் தூண்டுதலாக (biochemical stimuli) மாற்றக்கூடியவை என்றும் விஞ்ஞானிகள் விளக்கமளித்துள்ளனர்.

மெதுவாக தொடுவதில் இருந்து கைகுலுக்கல் வரை, சாதாரண மனித தோல் உணரும் உணர்ச்சிகளையெல்லாம் இந்த பிளாஸ்டிக் தோலும் உணரும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க :
3டி பிரிண்ட்டிங் - பாப்பா ஹாப்பி அண்ணாச்சி !
3டி பிரிண்ட்டிங் மூலம் தன் குழந்தையை 'பார்த்த' பார்வையற்ற கர்பிணி..!
"வாவ்... 1000 லைக்ஸ்ப்பா.." என்று சொல்ல வைக்கும் 3டி படைப்புகள்..!


Click it and Unblock the Notifications