Home
News

இறந்த மனிதனின் கண்களை இயங்க வைத்த விஞ்ஞானிகள்.. முதல் முறையாக இது எப்படி சாத்தியமானது?

முதல் முறையாக, இறந்த கண் நன்கொடையாளரின் கண்கள் விஞ்ஞானிகளால் மீண்டும் எழுப்பப்பட்டு இயங்கவைக்கப்பட்டுள்ள அதிசய நிகழ்வு சமீபத்தில் நடந்தேறியுள்ளது. ஆம், நீங்கள் சரியாகத் தான் படித்தீர்கள். இறந்த மனிதனின் கண்கள் மீண்டும் இயக்கப்பட்டுள்ளது. இப்படியான நிகழ்வு இதற்கு முன் நடந்ததே இல்லை. உலகளவில் இதுவே முதல் முறை, எப்படி அறிவியலின் உதவியோடு, இந்த வியக்கத்தகு அதிசய நிகழ்வை விஞ்ஞானிகள் செய்து முடித்தார்கள் என்று தெரிந்துகொள்ளலாம் வாருங்கள்.

இறந்த நபரின் கண்கள் எவ்வளவு நேரம் செயல்பாட்டில் இருக்கும் தெரியுமா?

இறந்த நபரின் கண்கள் எவ்வளவு நேரம் செயல்பாட்டில் இருக்கும் தெரியுமா?

முதல் முறையாக ஒரு இறந்த மனிதனின் கண்களை ஆராய்ச்சியாளர்களால் எழுப்ப முடிந்தது என்று சொன்னால் யாராவது நம்புவார்களா? பெரும்பாலானோர், இதற்குச் சாத்தியமே இல்லை என்று பதில் அளிப்பார்கள். ஆனால், மனிதன் நினைத்தால் முடியாதது என்று எந்த விஷயமுமே இல்லை. சரியான, முயற்சி மற்றும் அறிவு இருந்தால் எல்லாம் சாத்தியமே என்று நிரூபிக்கும் வகையில் இந்த நிகழ்வு இப்போது நடந்துள்ளது. இறந்த நபரின் கண்கள் எவ்வளவு நேரம் செயல்பாட்டில் இருக்கும் என்று உங்களுக்குத் தெரியுமா?

5 மணிநேரத்திற்கு பிறகும் விஞ்ஞானிகளால் இறந்த கண்களை எழுப்ப முடிந்ததா?

5 மணிநேரத்திற்கு பிறகும் விஞ்ஞானிகளால் இறந்த கண்களை எழுப்ப முடிந்ததா?

ஒரு நபரின் மறைவுக்குப் பிறகு, அவரின் இரண்டு கண்களும் சுமார் ஐந்து மணிநேரம் வரை ஒளிக்குப் பதிலளிக்கும் திறன் கொண்டவை. அதவது, அந்த நபரின் உடலில் உயிர் இல்லை என்றாலும் கூட அவரின் கண்கள் அடுத்த 5 நேரத்திற்கு ஒளிக்குப் பிரதிபலிக்கும் செயல்பாட்டில் இருக்கும். இருப்பினும், ஒளியை உணரும் இந்த ஃபோட்டோரிசெப்டர் செல்கள் மற்ற விழித்திரை செல்களுடன் தொடர்பு கொள்ள முடியாமல், அவை செயலிழந்து விடுகின்றன. ஆனால், இதை இப்போது விஞ்ஞானிகள் செயல்பட வைத்துள்ளனர்.

இறந்த நபரின் கண்கள் எப்படி மீண்டும் எழுப்பப்பட்டன?

இறந்த நபரின் கண்கள் எப்படி மீண்டும் எழுப்பப்பட்டன?

பிரேதப் பரிசோதனைக்கு உறுப்பு தானம் செய்பவரின் விழித்திரையில் உள்ள ஒளி உணர்திறன் நியூரான்களில் உள்ள தீப்பொறியை மீண்டும் தூண்டுவதற்கான வழியை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். சமீபத்தில் உடல் உறுப்பு தானம் செய்து வந்த ஒருவரிடமிருந்து விஞ்ஞானிகள் குழு கண்களைப் பிரித்தெடுத்து. அவர்கள் அந்த கண்களை ஒரு கேரியரில் வைத்து, அதன் இடமாற்ற போக்குவரத்தின் போது ஆக்ஸிஜனுடன் இருக்கும் படி செய்துள்ளனர். இறுதியில் செயல் இழந்த கண்களை, குழு மின்சாரம் மூலம் கண் விழித்திரையைத் தூண்டியது.

மின்சாரம் மூலம் கண் விழித்திரையைத் தூண்டியது ஏன்?

மின்சாரம் மூலம் கண் விழித்திரையைத் தூண்டியது ஏன்?

இப்படி மின்சாரம் மூலம் கண் விழித்திரையைத் தூண்டியதும், கண்களின் ​​ஒளி உணர்திறன் கலங்களின் இயற்கையான மின் துடிப்புகள் மீண்டும் மீட்டெடுக்கப்பட்டன. இந்த செல்கள் மனித விழித்திரையில் உள்ள ஒரு பகுதியான மாகுலாவில் அமைந்துள்ளது. இது தான் மனிதனின் மையப் பார்வையைப் பராமரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. மனித பார்வைக்கு மத்தியஸ்தம் செய்ய உயிருள்ள கண்ணில் செய்யும் விதத்தில் விழித்திரை செல்களை ஒன்றோடு ஒன்று பேச வைக்க முடிந்தது" என்று ஆய்வின் ஆசிரியரும் உட்டா பல்கலைக்கழகத்தின் கண் மருத்துவ உதவி பேராசிரியருமான ஃபிரான்ஸ் வின்பெர்க் கூறியுள்ளார்.

இதற்கு முன் இந்த ஆராய்ச்சிக்குச் சிக்கலாக இருந்தது என்ன தெரியுமா?

இதற்கு முன் இந்த ஆராய்ச்சிக்குச் சிக்கலாக இருந்தது என்ன தெரியுமா?

இதேபோல், முந்தைய விசாரணைகளின் மூலம் எப்படி நன்கொடையாளர்களின் பார்வையில் மிகக் குறைந்த மின் செயல்பாட்டை மட்டுமே மீட்டெடுக்க முடிந்தது என்பதைப் பற்றியும் வின்பெர்க் விளக்கமளித்துள்ளார். அப்போதும் கூட, "இது மாகுலாவில் ஒருபோதும் அடையப்படவில்லை என்று அவர் கூறியுள்ளார். சமீபத்திய அறிக்கையின்படி, பெரும்பாலான பார்வை இழப்பு ஆராய்ச்சி எலிகள் அல்லது பிற விலங்குகளில் செய்யப்படுகிறது. பிரச்சனை என்னவென்றால், எலிகள் மனிதன் போன்ற ஒரு மாக்குலாவைக் கொண்டிருக்கவில்லை. இது மனித கண்களின் ஆய்வுக்குப் பொருந்தாத பெரும் சிக்கலாக இருந்துள்ளது.

இந்த கண்டுபிடிப்பின் மூலம் என்ன நன்மை கிடைத்துள்ளது?

இந்த கண்டுபிடிப்பின் மூலம் என்ன நன்மை கிடைத்துள்ளது?

இந்த சாதனையின் மூலம், மாகுலர் டிஜெனரேஷன் மற்றும் பிற நரம்பியக்கடத்தல் நிலைகளால் ஏற்படும் பார்வை இழப்பு தலைகீழாக மாறக்கூடும் என்று விஞ்ஞானிகள் நினைக்கிறார்கள். இறுதியில், வயது தொடர்பான மாகுலர் சிதைவு (AMD) உலகம் முழுவதும் பார்வை இழப்புக்கான முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது. 2017 இன் நேச்சர் மதிப்பீட்டின்படி, இந்தியாவில் 60 வயதுக்கு மேற்பட்ட 77 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் AMD ஆபத்தில் உள்ளனர். இந்தியாவில் AMD இன் பாதிப்பு 39.5% முதல் 0.3% வரை உள்ளது" என்று நேச்சர் எழுதினார். இந்த கண்டுபிடிப்பின் மூலம் நிலைமை மாற வாய்ப்புள்ளது என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Scientists Awaken A Dead Donor Eyes For The First Time In New Study : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X