ஆஸ்திரேலியர்களும் தமிழர்களே அடித்த கூறும் அறிவியல் ஆதாரங்கள்!
ஆஸ்திரேலியாவில் பூர்வ பழங்குடியினர்களாக இருப்போர்கள் தமிழர்கள் தான் என்ற ஆய்வு முடிவுகள் அதிர வைக்கும் ஆதாரமாக இருக்கின்றது. டிஎன்ஏ சோதனை, பூமராங், கலாச்சாரம் போன்றவை ஆதராமாக நிருபணமாகியுள்ளது.

ஆஸ்திரேலியா
என்றால் நமக்கு நாபகம் வருது அது அழகிய தீவு என்று தான். கங்காரு, பழங்குடியினர். இனி மேல் அதுபோன்று இருக்க போவது கிடையாது. ஏன் என்றால். அந்த நாட்டின் பூர்வ குடிகள் தமிழர்கள். 30 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே குடியேற்றத்தில் துவங்கியுள்ளனர் தமிழர்கள் என ஆய்வுகள் கூறுகிறது. ஆஸ்திரேலியா 29,67,909 சதுர அடி உள்ள தீவு (நாடு). 18ம் நூற்றாண்டிற்கு பிறகு ஐரோப்பியர்கள் குடியேறினர்.

பிறகு குடியேறிய தமிழர்கள்
1788ல் துவங்கி, 1837-38 களில் விவசாயக் கூலிகளாக தமிழர்களை ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி நிர்வாகம் அழைத்து வந்தது. நியூசவுத்வேல்ஸ், விக்டோரியா, தலைநகரான கேன்பாரோ ஆகிய பகுதிகளில் தமிழர்கள் அதிகம் வசிக்கின்றனர். மலேசியா , சிங்கப்பூர், பிஜி, மொரிசியஸ், தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளிலிருந்தும் தமிழர்கள் குடியேறியிருக்கின்றனர்.

40,000 பேர் இலங்கை தமிழர்
ஆஸ்திரேலியாவில் சுமார் 45,000க்கும் வசிப்போர்களில் இலங்கை தமிழர்களும் அவர்களின் வசம்சாவளியினருமே அதிகம். இன்றைய அரசியல் பங்களிப்பு, தொலைக்காட்சி, வானொலி, தமிழ் இதழ்கள் என இன்றைய நவீன காலத்திற்குகேற்ப வாழ்த்து வருகின்றனர்.

வெங்கல மணி
ஆஸ்திரேலிய அருங்காட்சியகத்தில் ஒரு மணி உள்ளது. 19 ம் நூற்றாண்டில் நியூசிலாந்து கடற்கரை பகுதியில் கண்டெடுக்கப்பட்ட வெங்கலமணி. அது 15ம் நூற்றாண்டை சேர்ந்ததாக இருக்கலாம் அல்லது அதற்கு முன்தாக இருக்கலாம் என்பது ஆய்வாளர்களின் கருத்து. அந்த மணியின் வெளிப்புறத்தில் "முகைதீன் வக்குசு உடைய கப்பல் உடைய மணி " என்று எழுதப்பட்டுள்ளது. இந்த வெங்கலமணி ஐரோப்பியர்களின் குடியேற்றத்திற்கு பல நூற்றாண்டுக்கு முன்பே தமிழர்கள் ஆஸ்திரேலியாவில் குடியேறினர் என்பதற்கு ஆதரமாக இருக்கின்றது.

தமிழ் சொற்கள் ஒற்றுமை
ஆஸ்திரேலியா பழங்குடியினத்தவர்களில் பண்டைய திராவிட மக்களின் மொழி, இனம் ,பண்பாட்டு ஒற்றுமைகள் உள்ளன. டிராக்மிலா சபோன்ஸ்கோவா பழங்குடிகளின் பேச்சில் தமிழ் சொற்கள் அதிமாக வழக்கத்தில் உள்ளன. பக்லோவியர் " - பழங்குடிகளின் பேச்சு மொழியில் தமிழ் இலக்கண அமைப்போடு உள்ளது. ஏற்றத, முட்டி, மின்னல், பாம்பு, மகவு, நீறு போன்ற பல தமிழ் சொற்கள் இருக்கின்றன.

பூமாராங்கு வளரி :
வளரி , வலைத்தடி தாக்க வேண்டிய இலக்கை தாக்கிவிட்டு யார் வீசினாரோ அவரிடம் திரும்பி வரும். இதை நாம் சீமை ராஜா படத்தில் நடிகர் சிவகார்த்தியேகன் நடித்த போது, இதை கையாண்டு இருப்பார். சிவகங்கையில் மன்னர்களாக இருந்த சின்ன மருது, பெரிய மருதுவும் இந்த வலைத்தடியை ஆங்கிலேயர்களுக்கு எதிரான போரில் பயன்படுத்தியதாக ஜெனரல் வெல்ஸ் என்ற ஆங்கிலேய ராணுவ தளபதி தனது ராணுவ குறிப்புகளில் தெரிவித்துள்ளார். இன்றும் ஆஸ்திரேலிய பழங்குடியினர் பயன்படுத்தி வருகின்றனர்.

ரத்த மாதிரிகள்
இத்தாலியைச் சேர்ந்த லூகாகவாலி சக்போர்ஸா ஆஸ்திரேலியா போன ஆய்வாளர் அங்குள்ள ஆதிவாசிகளிடமும் எம் 130 ஒய் மரபணு இருப்பதை தனது ஆய்வுகள் முலம் கண்டறிந்தார்.
பிறகு, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக பேராசிரியர் ஸ்பென்ஸர் வெல்ஸ் அவரது பாணியிலே தொடர்கிறார். ஸ்பென்ஸர் வெல்ஸின் ஆய்வில் மதுரை காமராசர் பல்கலைக் கழக நோய் தடுப்பாற்றல் துறை தலைவர் பிச்சையப்பன் இணைந்து கொண்டார். பிறகு, எம்130ஒய் மரபணு மதுரை மாவட்டத்தில் பலரிடம் காணப்பட்டாலும் உசிலம்பட்டி அருகேயுள்ள ஜோதிமாணிக்கம் கிராமத்தில் வசிக்கும் விருமாண்டி என்பவருக்கு மிகச்சரியாக பொருந்தியது.

கல்திட்டை
பழநி அருகே ஆயக்குடியில் நடந்த தொல்லியல் ஆய்வில் 30 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கல்திட்டை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய பழங்குடிகள் தமிழர்களே என்பதற்கான ஆதாரம் இந்த கல்திட்டை என்று தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், பழநி அருகே உள்ளது ஆயக்குடி. இந்த ஊரின் தென்புறம் உள்ள பொன்னிமலையின் அடிவாரத்தில் சுமார் 30 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கல்திட்டை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கல்மேடை தமிழின் ஆயுத எழுத்தான ‘ஃ' வடிவில் அமைக்கப்பட்டுள்ளது.

அமைப்பு
தமிழகத்தில் பெரிய பாறாங்கற்களைக் கொண்டு சின்னங்கள் அமைக்கப்பட்டதால் அக்காலத்தை பெருங்கற்காலம் என்று அழைக்கிறார்கள். இறந்து போன ஒருவரின் நினைவாக இந்த ஆயக்குடி சின்னம் எழுப்பப்பட்டுள்ளது. இயற்கையான ஒரு பாறையின் மீது 2 உருண்டையான பாறாங்கற்களை சுமார் 5 டன் எடையுள்ள இந்த பாறாங்கற்களை அமைத்த விதம் வியப்பையும், இதன் பிரமாண்டம் திகைப்பையும் ஏற்படுத்துகிறது.

ஆஸ்திரேலியாவில் சின்னம்
இதுபோல, சின்னம், ஆஸ்திரேலியாவில் ‘ஊரு' என்ற இடத்திலும் கண்டறியப்பட்டுள்ளது. ஊர் என்பது தமிழ்ச்சொல். அங்கு வாழும் ஆஸ்திரேலிய பழங்குடிகள் பேசும் மொழியும், தமிழை ஒத்துள்ளது. அந்த பழங்குடிகளின் நிறம், உருவ அமைப்பு, பழக்கவழக்கங்கள் அனைத்தும் தமிழர்களையே ஒத்துள்ளன. குமரிக்கண்டம் எனப்படும் லெமூரியாவின் கிழக்குப்பகுதியே ஆஸ்திரேலியா என்பது பல்வேறு ஆய்வுகளின் மூலம் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

டிஎன்ஏ பரிசோதனை ஒற்றுமை
ஆஸ்திரேலிய பழங்குடிகள் நெற்றியில் இட்டுக்கொள்ளும் குறிகள், தமிழக சங்ககால இரவிமங்கலப் புதை குழிகளில் கிடைத்த முதுமக்கள் தாழிகளில் அமைக்கப்பட்டிருந்த குறியீடுகளுடன் 100 சதவீதம் பொருந்துகின்றன.
அண்மையில் ஆஸ்திரேலிய பழங்குடியினரிடமும், தமிழர்களிடமும் மேற்கொள்ளப்பட்ட எம் 130 வகையிலான டிஎன்ஏ பரிசோதனைகள், இருவருக்குமிடையே ரத்த உறவுகளை உறுதி செய்துள்ளன. ஆஸ்திரேலிய நினைவுச்சின்னத்தை அந்நாட்டு தொல்லியல் ஆய்வாளர்கள் 30 ஆயிரம் வருடங்கள் முதல் 50 ஆயிரம் வருடங்கள் வரை பழமையானதாக கணக்கிட்டுள்ளனர்.

இந்தி திணிப்பு
இப்படி இருக்கையில், தமிழர்கள் மீதும் கலாச்சாரம் மீதும் அவர்களின் அடையாளங்களை அழிக்கும் வகையில், இந்தியாவில் இந்தி மொழி புகுத்தப்படுவதாக பல்வேறு வரலாற்று ஆய்வாளர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால் இந்திக்கு தமிழை போல சிறப்புகள் கிடையாது.


Click it and Unblock the Notifications