சிறுமி பரிதாபமான மரணம்: ஹெட்போன் பயன்படுத்தும் நமக்கெல்லாம் ஒரு பாடம்.!
இரவில் சார்ஜிங்கில் போனை போட்டு விட்டு, பிறகு அதில் இயர் போனை மாட்டி பாட்டு கொண்டிருந்த சிறுமி, மறுநாள் காலையில் போன் சார்ஜர் வெடித்த நிலையில், பரிதாபமாக இறந்து கிடந்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கஜகஸ்தான் சிறுமி
கஜகஸ்தானை சேர்ந்த சிறுமிக்கு 14வயதாகிறது. ஆல்வா அசெட்கிஸி அப்சல்பெக். இவர் நேற்று முன்தினம் இரவு போனில் பாட்டுக் கேட்டுக் கொண்டே தூங்க சென்றார்.

காலையில் சடலம்
நேற்று காலை சடமாக கிடந்துள்ளார். இதை க்ணட பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். பிறகு இதற்கு காரணம் அவர் தூங்கும் போது தனது தலையணைக்கு அருகில் சார்ஜ் போடுக் கொண்டடே தூங்கியது தெரியவந்தது.

எப்படி இறந்தார் தெரியுமா ?
போன் நீண்ட நேரமாக சார்ஜிலேயே இருந்தது. இதனால் போன் சூடாகி வெடித்தது. அப்போது அந்த சிறுமியின் தலை அருகே இருந்தால் படுகாயம் ஏற்பட்டு, உயிர் பிரிந்துள்ளது.

போலீஸ் விசாரணை
போன் வெடித்து சிறும உயிரிழந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ள. அவரின் தலையைணைக்கு அருகே சார்ஜர் பிளக் போர்ட்டில் இருப்பது தெரியவந்துள்ளது. போன் எந்த கம்பெனியை சேர்ந்தது என்று தெரியவில்லலை. இதுகுறித்து போலீசார் மேலும் விசாரித்து வருகின்றனர்.

சோகம் தாளாத தோழி:
இந்நிலையில், ஆல்வா இறப்பால், அவரது உயிர் தோழி அயாசன் டோலாகேவா சோகம் தாளமல் தவித்து வருகின்றார். சிறு வயது முதல் ஒன்றாக இருந்தோம். நீ சிறந்தவள். நீ இல்லாமல் என்னால் இயங்க முடியாது என்னை ஒரேயடிகாக விட்டுசென்றுவிட்டாய் என உருக்கமாப் பேசியுள்ளார்.


Click it and Unblock the Notifications