ஆன்லைன் வகுப்பு எடுக்க ஆசிரியர் செய்த காரியம்.! குவியும் பாராட்டுக்கள்.!
இப்போது வரும் புதிய புதிய தொழில்நுட்பங்கள் நமக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்று தான் கூறவேண்டும். இந்த நிலையில் வீட்டினுள் சிக்னல் இல்லாத காரணத்தால் மரத்தையே வகுப்பறையாக மாற்றி ஆன்லைன் வகுப்பு எடுத்து வரும் ஒரு அரசு பள்ளி ஆசிரியருக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

குறிப்பாக இந்தியாவில் கொரோனா தொற்றின் 2-வது அலை அதிகமான பாதிப்புகளை ஏற்படுத்தியது என்றுதான் கூறவேண்டும். குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், கொரோனா பாதிப்பு பல நாட்கள் சுமார் 4 லட்சத்தை தாண்டியது. ஆனால் தற்போது ஊரடங்கு, பொதுமுடக்கம், கட்டுப்பாடுகளால் 2-வது அலை தொடர்ந்து குறைந்து வருகிறது.

மேலும் மத்திய சுகாதார அமைச்சகம் இன்று வெளியிட்ட தகவலின்படி, இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலை தொடர்ந்து வீழ்ச்சிப்பாதையில் சென்று கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளது. ஆனாலும் இந்த கொரோனா பாதிப்பின் காரணமாக சிலர் வீட்டில் இருந்தே வேலை செய்து வருகின்றனர், பின்பு மாணவர்களுக்கும் ஆன்லைன் வகுப்பு நடத்தப்படுகிறது.

அதாவது வைரஸ் பரவல் காரணமாக கடந்த 2019-ம் ஆண்டிலிருந்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமே வகுப்புகள் நடத்தப்படுகிறது. ஆனால் சில கிராமப்புற மாணவர்களுக்கு இன்டர்நெட் சிக்னல் குறைபாடு இருப்பதால் படிப்பும் தடைபட்டு வருகிறது.

அதேபோல் சில ஆசிரியர்கள் வசிக்கும் வீடுகளில் மோசமான நெட்வொர்க் இருப்பதால் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் அரசு பள்ளி ஆசிரியர் சதிஷ் செய்த செயல் தான் இப்போது இணையதளத்தில் அதிக வைரலாகி உள்ளது.

வெளிவந்த தகவலின்படி, கர்நாடக மாநிலம் குடகு என்ற மாவட்டத்தில் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு எடுக்கும் அரசு பள்ளி ஆசிரியராக பணிபுரிபவர் சி.எஸ்.சதீஷ். இவர் தனது வீட்டில் இன்டர்நெட் சரியாக கிடைக்கவில்லை என்று அருகில் இருந்த மாமரத்தையே வகுப்பாக மாற்றியுள்ளார்.

குறிப்பாக மரத்தின் மீது பலகை அமைத்து, பின்பு ஆன்லைன் வகுப்புக்கு தேவையான கேமரா போன்றவற்றை செட் செய்துஆன்லைன் வகுப்பு எடுத்து வருகிறார். இந்த சம்பவம் இணையத்தில் பரவியதையடுத்து அந்த ஆசிரியருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

மேலும் சில இடங்களில் செல்போன் சிக்னல் பிரச்சனை அதிமாகத் தான் இருக்கிறது. டெலிகாம் நிறுவனங்கள் இதற்கு தகுந்த நடவடிக்கைகள் எடுத்தால் நன்றாக இருக்கும்.


Click it and Unblock the Notifications