மின்சாரம் எடுக்க எளிய முறை கண்டுபிடிப்பு : வேலூர் மாணவி அபாரம்.!
தமிழகத்தில் மாநில தேர்வுக்கு தயாராகி வரும் பள்ளி மாணவர்களுக்கு மத்தியில் தனது திறமையை நிரூபித்திருக்கின்றார் வேலூரை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவியான ஸ்ருதி சரஸ்வதி. இவரது திறமையை பரைசாற்றும் விதமாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இவரது கண்டுபிடிப்பு மாநில அளவில் முதல் பரிசை வென்றதும் குறிப்பிடத்தக்கது.

சத்தமில்லாமல் சாதனை புரிந்திருக்கும் ஸ்ருதி சரஸ்வதி, சாலையில் செல்லும் வாகனங்களில் இருந்து மின்சாரத்தை உருவாக்கும் வழிமுறையை கண்டுபிடித்திருக்கின்றார். இது எப்படி சாத்தியம் என்பதை வீடியோவில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
போக்குவரத்து விதிமுறை, ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு வழி கொடுக்கும் சென்சார், மற்றும் சாலையில் இருக்கும் மின்விளக்குகளில் இருந்து மின்சாரத்தை சேமிக்கும் சென்சார்களையும் கண்டுபிடித்திருக்கின்றார். இது பற்றி வரும் நாட்களில் பார்ப்போம். தொடர்ந்து இணைந்திருங்கள்.
மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.


Click it and Unblock the Notifications