Just In
- 1 min ago வெளுத்துக்கட்டுது சேல்.. ரூ.21,000 போதும்.. SONY கேமரா.. AMOLED டிஸ்பிளே.. 67W சார்ஜிங்.. எந்த மாடல்?
- 2 hrs ago மீண்டும் மீண்டுமா.. 50MP கேமரா.. 100W சார்ஜிங்.. புதிய போனை கொண்டுவரும் OnePlus.. எந்த மாடல்?
- 2 hrs ago டப்பு டப்புனு ஆர்டர்.. ரூ.22,000 பட்ஜெட்ல 12.1 இன்ச் டிஸ்பிளே.. 8 ஸ்பீக்கர்கள்.. 8300mAh பேட்டரி.. எந்த மாடல்?
- 2 hrs ago ஆதார் அலெர்ட்.. மீண்டும் வந்த உத்தரவு.. எதையெல்லாம் இலவசமாக மாற்றலாம்.. இறுதி அறிவிப்பு.. உடனே கவனியுங்க..
Don't Miss
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Movies தக் லைஃப் படத்திலிருந்து துல்கர் வெளியேற அரசியலும் காரணமா?.. வெளியான ஷாக் தகவல்
- News என்ன வேகம்! கிளாம்பாக்கம் தோத்துடும் போலயே.. செங்கல்பட்டில் இவ்வளவு பெரிய பேருந்து நிலையமா?
- Sports SRH vs GT : பல்தான்ஸ்.. நமக்கு இவ்வளவு பெரிய சோதனை வந்தது ஏன்? ஓய்வறையில் ஓபனாக பேசிய ஹர்திக்!
- Finance தங்கம் விலை மீண்டும் உயர்வு.. இனி இதுதான் நிரந்தரமா? சாமானிய மக்களால் தங்கத்தை வாங்கவே முடியாதா..?
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
அடுத்த சிக்கல்: எஸ்பிஐ, எச்டிஎஃப்சி, ஐசிஐசிஐ வங்கி வாடிக்கையாளர்களா நீங்கள்?- இனி இந்த பிரச்சனை!
எஸ்பிஐ, எச்டிஎஃப்சி, ஐசிஐசிஐ வங்கி வாடிக்கையாளர்கள் அடுத்து வரும் நாட்களில் ஓடிபி பெறுவதில் சிரமங்களை சந்திக்க நேரிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எஸ்பிஐ, எச்டிஎஃப்சி, ஐசிஐசிஐ வங்கி
எஸ்பிஐ, எச்டிஎஃப்சி, ஐசிஐசிஐ வங்கி வாடிக்கையாளர்கள் அடுத்து வரும் நாட்களில் ஓடிபி பெறுவதில் சிரமங்களை சந்திக்க நேரிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் மறுபுறம் ஏப்ரல் 4 வரை ஐந்து நாட்களுக்கு வங்கிகள் மூடப்பட்டிருக்கும் என்பதும் கவனிக்கத்தக்க ஒன்று. இந்திய தொலைத்தொடர்பு ஆணையம் எஸ்எம்எஸ் விதிகளை பின்பற்றாத வங்கிகளின் பட்டியலை வெளியிட்டது.
தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்
தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்ட எஸ்எம்எஸ் விதிகளை பின்பற்றாத வங்கிகளின் பெயர்களில் எஸ்பிஐ, எச்டிஎஃப்சி, ஐசிஐசிஐ, கோட்டக் உள்ளிட்ட வங்கிகளின் பெயர்களும் இடம்பெற்றிருந்தது. தொடர்ந்து டிராய் கடுமையான அறிவிப்பை வெளியிட்டது. அதில் ஏப்ரல் 1,2021-க்குள் விதிமுறைகளுக்கு உட்பட வேண்டும் இல்லாதபட்சத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வங்கிகளின் வாடிக்கையாளர்கள் பதிவு செய்த மொபைல் எண் அல்லது வங்கியின் மின்னஞ்சல் ஐடியில் ஓடிபி பெறுவதில் சிக்கலை சந்திக்க நேரிடும் என குறிப்பிட்டது.
ஆன்லைன் மோசடி உள்ளிட்ட புகார்கள்
ஆன்லைன் மோசடி உள்ளிட்ட புகார்களை தடுக்க ஆணையம் ஒரு ஒழுங்குமுறை நடவடிக்கையை எடுத்தது. இதை பல வங்கிகள் ஏற்க மறுத்தது, மேலும் சில வங்கிகள் சில செயல்படுத்த காலஅவகாசம் கோரியது, அதேபோல் சில வங்கிகள் கண்டு கொள்ளாமல் இருந்ததையடுத்து. ஒழுங்குமுறை ஆணையத்தின் வழிமுறைகளை பின்பற்றாத 40 நிறுவனங்களின் பட்டியலை வெளியிட்டது. இதில் எஸ்பிஐ, எச்டிஎஃப்சி, ஐசிஐசிஐ, கோட்டக் உள்ளிட்ட வங்கிகளின் பெயர்களும் அடங்கும்.
வங்கிகள் ஆணையத்தின் வழிமுறைகள்
வங்கிகள் ஆணையத்தின் வழிமுறைகளை பின்பற்றாத பட்சத்தில் ஏப்ரல் 1 ஆம் தேதிமுதல் தங்களின் வாடிக்கையாளர்கள் ஓடிபி பெறுவதில் சிக்கலை சந்திக்க நேரிடும் என தெரிவித்திருந்தது. எனவே ஆணையம் குறிப்பிட்டுள்ள வங்கியின் வாடிக்கையாளர்கள் சிக்கலை சந்திக்க நேரிடும் என கூறப்படுகிறது.
புதிய தொலைத் தொடர்பு வர்த்தக முன்னிரிமை
இந்தாண்டு பிப்ரவரி மாதத்தில் தில்லி உயர்நீதிமன்றம் டிராயிடம் புதிய தொலைத் தொடர்பு வர்த்தக வாடிக்கையாளர்கள் முன்னுரிமை ஒழுங்குமுறையை அமல்படுத்துமாறு கேட்டுக் கொண்டது. வாடிக்கையாளர்களுக்கு அனுப்புவதற்கு முன்பு அனைத்து மெசேஜ்களும் சரிபார்க்க வேண்டும் என்றும் அனைத்தும் டிராய் விநியோகிக்கப்பட்ட லெட்ஜர் தொழில்நுட்பம் டிஎல்டி தளத்திற்கு பதிவு செய்யப்பட்டுன என்றும் டிராய் கூறியது. இவை சரிபார்ப்பு குறியீடு மற்றும் அனைத்து வகையான ஓடிபி எண்ணுக்கு உள்ளடக்கத்தியது எனவும் தெரிவித்தது.
சரிபார்ப்பு குறியீடு மற்றும் ஓடிபி தகவல்
வாடிக்கையாளர்களுக்கு அனுப்புவதற்கு முன்பு அனைத்து செய்திகளையும் சரிபார்க்க வேண்டும் என்றும், குறுஞ்செய்திகள் அனுப்பும் நிறுவனங்கள் என்ன வகையான குறுஞ்செய்திகளை அனுப்பும் என்பது குறித்த தகவலை பதிவு செய்ய வேண்டும் என்பதை பதிவு செய்ய வேண்டும் எனவும் இது அறிவிப்புகள், சரிபார்ப்புக் குறியீடு மற்றும் அனைத்து வகையான OTP-ஐ உள்ளடக்கியது எனவும் தெரிவிக்கப்பட்டது.
டிராய்-ன் விநியோகிக்கப்பட்ட லெட்ஜர் தொழில்நுட்பம் டிஎல்டி தளம் என்றால் என்ன?
டிஸ்டிரிப்ட் லெட்ஜர் டெக்னாலஜி (டி.எல்.டி) என்பது ஒரு பிளாக்செயின் அமைப்பாகும், அங்கு டெலிமார்க்கெட்டர்கள் வாடிக்கையாளர்களுக்கு செய்திகளை அனுப்புவதற்கு முன்பு தங்களை பதிவு செய்ய வேண்டும் என்பதை உறுதிப்படுத்துகிறது. மார்க்கெட்டிங் நிறுவனங்களின் ஸ்பேம் மெசேஜ்களையும் அழைப்புகளையும் கட்டுப்படுத்த இது சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
பங்கேற்பாளர்கள் அனைவராலும் செய்யப்பட்ட அனைத்து பரிவர்த்தனைகளையும் டி.எல்.டி இயங்குதளம் பதிவு செய்கிறது. வாடிக்கையாளர்களுக்கு எந்தவொரு செய்தியையும் அனுப்புவதற்கு முன்பு அனைத்து டெலிமார்க்கெட்டர்களும் ஒரே தளத்தில் பதிவு செய்வது முக்கியம் என கட்டுப்பாட்டாளர் கூறினார். டிராய்., வணிக ரீதியான குறுஞ்செய்திகளை அனுப்பும் நிறுவனங்கள் குறித்த தகவலை உடனடியாக பதிவு செய்யும்படி சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அறிவிப்பு அனுப்பியது. அப்படி பதிவு செய்யாத நிறுவனங்கள் அனுப்பும் குறுஞ்செய்திகளை தடை செய்யப்பட்டன. சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் குறுஞ்செய்தி அனுப்பும் எண் மற்றும் எவ்வகையான குறுஞ்செய்திகள் அனுப்பப்படும் போன்ற தகவல்களை பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470