இனி ATM மூலம் பணம் எடுக்கும் முறையில் மிகப்பெரிய மாற்றம்.. SBI அறிவிப்பு.. கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..
வங்கி சேவையை மிகவும் எளிமையானதாகவும், வசதியாகவும் மற்றும் பாதுகாப்பாகவும் மாற்ற ஏடிஎம்மில் பணம் எடுக்கும் நடைமுறையில் பாரத ஸ்டேட் வங்கி (SBI) பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. இந்த மாற்றத்தைப் பற்றி ATM பயனர்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டும் என்று SBI தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு ட்வீட்டையும் பதிவிட்டுள்ளது. மாற்றத்தின் ஒரு பகுதியாக, இந்தியாவின் மிகப் பெரிய பொதுத்துறை கடன் வழங்குனர் OTP அடிப்படையிலான ATM பணம் எடுக்கும் முறையைக் கொண்டு வந்துள்ளது.

ஏடிஎம் பணம் எடுக்கும் முறையில் மிகப்பெரிய மாற்றம் - SBI
இது பயனர்களின் பரிவர்த்தனையைப் பாதுகாப்புடன் மேற்கொள்ளவும், பயனர்களின் பரிவர்த்தனை அங்கீகாரத்தின் கூடுதல் காரணியை இந்த அம்சம் கொண்டு வருகிறது. புதிய பாதுகாப்பு அம்சம், கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்துள்ள அங்கீகரிக்கப்படாத ஏடிஎம் பணம் எடுக்கும் முறையில் இருந்து எஸ்பிஐ ATM அட்டைதாரர்களைப் பாதுகாக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. எஸ்பிஐ தனது டிவிட்டர் பக்கத்தில் புதிய ஏடிஎம் பணம் எடுக்கும் செயல்முறையை அறிவித்துள்ளது.

OTP அடிப்படையிலான பணம் எடுக்கும் முறை
"எஸ்பிஐ ஏடிஎம்களில் பணப்பரிவர்த்தனை செய்வதற்கான OTP அடிப்படையிலான பணம் எடுக்கும் முறையானது மோசடி செய்பவர்களுக்கு எதிரான தடுப்பூசியாகச் செயல்படுகிறது. மோசடிகளில் இருந்து உங்களைப் பாதுகாப்பதே எங்களின் முதன்மையான முன்னுரிமையாக இருக்கும்" என்று எஸ்பிஐ தனது ட்வீட்டில் தெரிவித்துள்ளது. SBI வங்கி பயன்படுத்தும் OTP முறையிலான பாதுகாப்பு ATM பரிவர்த்தனை அம்சம் உங்களின் பாதுகாப்பை அதிகரிக்கிறது.

அதிகப்படியான புகார்கள் காரணமாக எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கை
எஸ்பிஐ முதன்முதலில் OTP சரிபார்க்கப்பட்ட ஏடிஎம் பரிவர்த்தனையைக் கடந்த 2020 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தியது. இது மோசடி பரிவர்த்தனைகளைக் குறைக்கும் நோக்கத்துடன் அறிமுகம் செய்யப்பட்டது. குறிப்பாக அரசு ஆதரவு கடன் வழங்குபவரிடம் அதிகப்படியான புகார்கள் பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து எழுந்த கவலையின் காரணமாக இது அறிமுகம் செய்யப்பட்டது. புதிய செயல்பாட்டில், வாடிக்கையாளர்கள் வங்கியில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் OTP பெறுவார்கள்.
OTP இல்லையா? அப்போ பணம் இல்லை..
பரிவர்த்தனையை அங்கீகரிக்கத் தேவையான சரியான OTP-யை வாடிக்கையாளர் உள்ளிட்டால் மட்டுமே ATMல் இருந்து பணம் எடுக்க முடியும். இந்த செயல்முறை ஆன்லைன் ஷாப்பிங்கைப் போன்றது, இதில் வாடிக்கையாளர்கள் பரிவர்த்தனையைச் செயல்படுத்த வங்கி OTPகளை உள்ளிட வேண்டும். OTP, அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனைகளைத் தடுக்கத் தேவையான கூடுதல் பாதுகாப்பு அடுக்குகளைக் கொண்டுவருகிறது.

NFS காரணமாக மற்ற வங்கிகளில் இந்த சேவை கிடையாதா?
இருப்பினும், தற்போதைய நிலவரப்படி, SBI வாடிக்கையாளர்கள் வேறொரு வங்கியின் ஏடிஎம்மில் இந்த வசதியைப் பயன்படுத்த முடியாது, ஏனெனில் இந்த செயல்பாடு தேசிய நிதி மாற்றத்துடன் (NFS) ஒரு நிறுவனத்தில் உருவாக்கப்படவில்லை. இது நாட்டின் மிகப்பெரிய இயங்கக்கூடிய ஏடிஎம் நெட்வொர்க் ஆகும். தற்போது, NFS நிறுவனம் 95 சதவீதத்திற்கும் அதிகமான உள்நாட்டு வங்கிகளுக்கு இடையேயான ஏடிஎம் பரிவர்த்தனைகளை நிர்வகிக்கிறது.

45 கோடி பயனர்களின் பாதுகாப்பை பலப்படுத்தும் முயற்சிக்கு பாராட்டு
இருப்பினும், அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், பிற வங்கிகளும் OTP அடிப்படையிலான சரிபார்ப்புச் செயல்முறையைச் சேர்க்கலாம், இதனால் ATM இல் பணம் எடுக்கும் செயல்முறை முன்னெப்போதையும் விட பாதுகாப்பானதாக மாறியுள்ளது. உண்மையில் வங்கியின் இந்த பெரும் முயற்சி பாராட்டப்பட வேண்டிய ஒன்று, காரணம் SBI வங்கியின் கீழ் மட்டும் இந்தியா முழுவதும் சுமார் 45 கோடி பயனர்கள் தங்களின் பணப் பரிவர்த்தனைகளை 22,000 கிளைகள் மூலம் செயல்படுத்தி வருகிறது.


Click it and Unblock the Notifications