Home
News

ஒரு நிமிடம்., ஏடிஎம்மில் பணம் எடுக்கப்போறீங்களா: இன்றுமுதல் இது கட்டாயம்., இல்லனா திரும்ப வீட்டுக்கு வரணும்!

ஓடிபி அடிப்படையிலான பணம் எடுக்கும் சேவையை அறிமுகப்படுத்தியதை தொடர்ந்து பாரத் ஸ்டேட் பேங்க் தனது ஏடிஎம் சேவை மூலம் பணம் எடுப்பதற்கு மற்றொரு பாதுகாப்பு சேவையை அறிமுகம் செய்துள்ளது.

ஏடிஎம்-ல் பணம் எடுக்க விதிமுறைகள்

ஏடிஎம்-ல் பணம் எடுக்க விதிமுறைகள்

எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் ஏடிஎம்-ல் பணம் எடுக்கும் போது அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் வங்கி பல்வேறு பாதுகாப்பு அம்சத்தை அறிமுகம் செய்து வருகிறது. வங்கி ஏடிஎம்களில் பணம் எடுப்பவர்களை குறிவைத்து பல்வேறு மோசடி செயல்கள் நடந்து வருகிறது. குறிப்பாக ஏடிஎம்-களில் பணம் எடுக்கத் தெரியாதவர்கள், முதியவர்களை குறிவைத்து இந்த மோசடி செயல்கள் நடந்து வருகிறது. இதை சரிசெய்வதற்கு வங்கிகள் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

மொபைல் எண்ணிற்கு ஓடிபி அனுப்பப்படும்

மொபைல் எண்ணிற்கு ஓடிபி அனுப்பப்படும்

முன்னதாக வங்கியில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் ஓடிபி அனுப்பப்படும் அது கட்டாயமாக இருந்தது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இந்த கூடுதல் பாதுகப்பானது ஸ்டேட் பேங்க் கார்ட் வைத்திரப்பவர்கள் அங்கீகரிக்கப்படாது ஏடிஎம்களில் பணம் எடுப்பதில் இருந்து பாதுகாக்கும் வகையில் இருக்கிறது. அதேபோல் ஸ்டேட் பேங்க் கார்டு வைத்திருப்பவர் மற்றொரு வங்கியின் ஏடிஎம்களில் பணம் எடுக்கும் போதும் பணப் பரிமாற்றம் செய்யும் போது இந்த வசதி பொருந்தாது.

ரூ.10,000-க்கு மேல் பணம் எடுக்க விதிகள்

ரூ.10,000-க்கு மேல் பணம் எடுக்க விதிகள்

எஸ்பிஐ ஏடிஎம்களில் ரூ.10,000-க்கு மேல் பணம் எடுக்கும் போது வங்கி கணக்கில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு ஓடிபி எண் அனுப்பப்படும். அதேபோல் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் தனித்தனியே ஓடிபி எண் அனுப்பப்படும் அதை பதிவு செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இன்றுமுதல் எஸ்பிஎஸ் கிரெட் கார்டு மூலம் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு பரிவர்த்தனைகளுக்கும் ரூ.99 தனி வரி செலுத்த வேண்டியிருக்கும் எனவும் தகவல்கள் தெரிவிக்கிறது.

புதிய பாதுகாப்பு அம்சம்

புதிய பாதுகாப்பு அம்சம், கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்துள்ள அங்கீகரிக்கப்படாத ஏடிஎம் பணம் எடுக்கும் முறையில் இருந்து எஸ்பிஐ ATM அட்டைதாரர்களைப் பாதுகாக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. எஸ்பிஐ தனது டிவிட்டர் பக்கத்தில் புதிய ஏடிஎம் பணம் எடுக்கும் செயல்முறையை அறிவித்துள்ளது. "எஸ்பிஐ ஏடிஎம்களில் பணப்பரிவர்த்தனை செய்வதற்கான OTP அடிப்படையிலான பணம் எடுக்கும் முறையானது மோசடி செய்பவர்களுக்கு எதிராக இந்த நடவடிக்கை இருக்கும் என கூறப்படுகிறது. வங்கி தங்களது வாடிக்கையாளர்களை மோசடியில் இருந்து பாதுகாக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சரிபார்க்கப்பட்ட ஏடிஎம் பரிவர்த்தனை

சரிபார்க்கப்பட்ட ஏடிஎம் பரிவர்த்தனை

எஸ்பிஐ முதன்முதலில் OTP சரிபார்க்கப்பட்ட ஏடிஎம் பரிவர்த்தனையைக் கடந்த 2020 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தியது. வங்கி ஏடிஎம்களில் இருந்து பணம் எடுப்பவர்கள் தொடர்ந்து மோசடி குறித்து புகார் அளித்ததை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. வாடிக்கையாளர்கள் வங்கியில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை உடன் எடுத்து செல்வது கட்டாயம். காரணம் பணம் எடுக்கும் போது அந்த எண்ணிற்கு ஓடிபி அனுப்பப்படும் அதை பதிவு செய்வது என்பது கட்டாயமாகும். இதன்மூலம் வேறுயாரும் ஏடிஎம்களில் இருந்து பணம் எடுப்பதை தடுக்க முடியும்.

ஆன்லைன் ஷாப்பிங் வழிமுறை

ஆன்லைன் ஷாப்பிங் வழிமுறை

பரிவர்த்தனையை அங்கீகரிக்கத் தேவையான சரியான OTP-யை வாடிக்கையாளர் உள்ளிட்டால் மட்டுமே ATMல் இருந்து பணம் எடுக்க முடியும். இந்த செயல்முறை ஆன்லைன் ஷாப்பிங்கைப் போன்றது, இதில் வாடிக்கையாளர்கள் பரிவர்த்தனையைச் செயல்படுத்த வங்கி OTPகளை உள்ளிட வேண்டும். OTP, அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனைகளைத் தடுக்கத் தேவையான கூடுதல் பாதுகாப்பு அடுக்குகளைக் கொண்டுவருகிறது.

உள்நாட்டு வங்கிகளுக்கு இடையேயான பரிவர்த்தனை

உள்நாட்டு வங்கிகளுக்கு இடையேயான பரிவர்த்தனை

இருப்பினும், தற்போதைய நிலவரப்படி, SBI வாடிக்கையாளர்கள் வேறொரு வங்கியின் ஏடிஎம்மில் இந்த வசதியைப் பயன்படுத்த முடியாது, ஏனெனில் இந்த செயல்பாடு தேசிய நிதி மாற்றத்துடன் (NFS) ஒரு நிறுவனத்தில் உருவாக்கப்படவில்லை. இது நாட்டின் மிகப்பெரிய இயங்கக்கூடிய ஏடிஎம் நெட்வொர்க் ஆகும். தற்போது, ​​NFS நிறுவனம் 95 சதவீதத்திற்கும் அதிகமான உள்நாட்டு வங்கிகளுக்கு இடையேயான ஏடிஎம் பரிவர்த்தனைகளை நிர்வகிக்கிறது. இருப்பினும், அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், பிற வங்கிகளும் OTP அடிப்படையிலான சரிபார்ப்புச் செயல்முறையைச் சேர்க்கலாம், இதனால் ATM இல் பணம் எடுக்கும் செயல்முறை முன்னெப்போதையும் விட பாதுகாப்பானதாக மாறியுள்ளது. உண்மையில் வங்கியின் இந்த பெரும் முயற்சி பாராட்டப்பட வேண்டிய ஒன்று, காரணம் SBI வங்கியின் கீழ் மட்டும் இந்தியா முழுவதும் சுமார் 45 கோடி பயனர்கள் தங்களின் பணப் பரிவர்த்தனைகளை 22,000 கிளைகள் மூலம் செயல்படுத்தி வருகிறது.

ஏடிஎம்மில் பணம் எடுக்கும் நடைமுறை

ஏடிஎம்மில் பணம் எடுக்கும் நடைமுறை

வங்கி சேவையை மிகவும் எளிமையானதாகவும், வசதியாகவும் மற்றும் பாதுகாப்பாகவும் மாற்ற ஏடிஎம்மில் பணம் எடுக்கும் நடைமுறையில் பாரத ஸ்டேட் வங்கி (SBI) பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. எஸ்பிஐ வங்கி தங்களது வாடிக்கையாளர்களுக்கு புதிய உதவி மைய சேவை எண்களை அறிவித்துள்ளது. வாடிக்கையாளர்கள் தங்கள் குறை மற்றும் சந்தேகங்களை இந்த எண்ணின் மூலம் கேட்டுக் கொள்ளலாம். எஸ்பிஐ உதவி மையம் ஆனது எளிமையான உதவி மைய எண்ணாக மாற்றி அமைக்கப்படுகிறது.

எஸ்பிஐ வங்கியின் சேவைகள்

எஸ்பிஐ வங்கியின் சேவைகள்

எஸ்பிஐ வங்கியின் சேவைகள் மற்றும் சந்தேகங்களை இனி இந்த எண்ணின் மூலம் பயன்படுத்திக் கொள்ளலாம். எஸ்பிஐ வங்கி தற்போது இலவச டோல்ஃப்ரீ எண்ணை வாடிக்கையாளர்களின் சந்தேகம் மற்றும் சேவைகளை அறிந்து கொள்ள பயன்படுத்துகிறது. எஸ்பிஐ அறிவித்த புதிய இலவச டோல் ஃப்ரீ எண் குறித்து பார்க்கையில் அது 1800 1234 ஆகும். இந்த எண்கள் ஆனது வாடிக்கையாளர்கள் எளிதாக நியாபகம் வைத்துக் கொள்ளும் வகையில் இருக்கிறது.

Best Mobiles in India

English summary
SBI ATM Cash Limit- OTP based cash withdrawal system for transactions
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X