Just In
- 35 min ago ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- 35 min ago மார்கெட் காலி.. பட்ஜெட்ல SONY கேமரா.. 60X ஜூமிங்.. 24GB ரேம்.. 70W சார்ஜிங்.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?
- 1 hr ago யாரு சாமி நீ.. UPI.. யூடியூப்.. சிங்கிள் சார்ஜில் 6 நாட்கள் பேட்டரி.. புதிய 4ஜி போன் அறிமுகம்.. எந்த மாடல்?
- 9 hrs ago வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
Don't Miss
- Sports தோனிக்கு இது தான் கடைசி சீசனா? ரெய்னா சொன்னதை கேளுங்க!
- Lifestyle சாணக்கிய நீதி படி ஒரு நல்ல குடும்ப தலைவரிடம் இந்த 6 குணங்கள் இருக்கணுமாம்...அப்பதான் குடும்பம் நல்லா இருக்கும்
- News அதிகாலையே "திக்" பதிலடி.. ஈரான் மீது சரமாரியாக ஏவுகணை அட்டாக் செய்த இஸ்ரேல்.. உலகப்போர் வருது?
- Movies அஜித்துடன் விஜய் சேர்ந்து நடிக்க இதை செய்ய வேண்டும்.. எஸ்.ஏ.சந்திரசேகர் போட்ட கண்டிஷன்
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
எஸ்பிஐ அறிவித்த புது டோல்ஃப்ரீ எண்: இனி சந்தேகம், வங்கி தகவல்களுக்கு இந்த எண்ணை அழைக்கவும்!
எஸ்பிஐ வங்கி தங்களது வாடிக்கையாளர்களுக்கு புதிய உதவி மைய சேவை எண்களை அறிவித்துள்ளது. வாடிக்கையாளர்கள் தங்கள் குறை மற்றும் சந்தேகங்களை இந்த எண்ணின் மூலம் கேட்டுக் கொள்ளலாம். எஸ்பிஐ உதவி மையம் ஆனது எளிமையான உதவி மைய எண்ணாக மாற்றி அமைக்கப்படுகிறது. எஸ்பிஐ வங்கியின் சேவைகள் மற்றும் சந்தேகங்களை இனி இந்த எண்ணின் மூலம் பயன்படுத்திக் கொள்ளலாம்.
|
இலவச டோல்ஃப்ரீ எண்
எஸ்பிஐ வங்கி தற்போது இலவச டோல்ஃப்ரீ எண்ணை வாடிக்கையாளர்களின் சந்தேகம் மற்றும் சேவைகளை அறிந்து கொள்ள பயன்படுத்துகிறது. எஸ்பிஐ அறிவித்த புதிய இலவச டோல் ஃப்ரீ எண் குறித்து பார்க்கையில் அது 1800 1234 ஆகும். இந்த எண்கள் ஆனது வாடிக்கையாளர்கள் எளிதாக நியாபகம் வைத்துக் கொள்ளும் வகையில் இருக்கிறது.
வசதியாகவும் மற்றும் பாதுகாப்பாகவும்
வங்கி சேவையை மிகவும் எளிமையானதாகவும், வசதியாகவும் மற்றும் பாதுகாப்பாகவும் மாற்ற ஏடிஎம்மில் பணம் எடுக்கும் நடைமுறையில் பாரத ஸ்டேட் வங்கி (SBI) பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. இந்த மாற்றத்தைப் பற்றி ATM பயனர்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டும் என்று SBI தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு ட்வீட்டையும் பதிவிட்டுள்ளது. மாற்றத்தின் ஒரு பகுதியாக, இந்தியாவின் மிகப் பெரிய பொதுத்துறை கடன் வழங்குனர் OTP அடிப்படையிலான ATM பணம் எடுக்கும் முறையைக் கொண்டு வந்துள்ளது.
பரிவர்த்தனையைப் பாதுகாப்புடன் மேற்கொள்ள வசதி
இது பயனர்களின் பரிவர்த்தனையைப் பாதுகாப்புடன் மேற்கொள்ளவும், பயனர்களின் பரிவர்த்தனை அங்கீகாரத்தின் கூடுதல் காரணியை இந்த அம்சம் கொண்டு வருகிறது. புதிய பாதுகாப்பு அம்சம், கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்துள்ள அங்கீகரிக்கப்படாத ஏடிஎம் பணம் எடுக்கும் முறையில் இருந்து எஸ்பிஐ ATM அட்டைதாரர்களைப் பாதுகாக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. எஸ்பிஐ தனது டிவிட்டர் பக்கத்தில் புதிய ஏடிஎம் பணம் எடுக்கும் செயல்முறையை அறிவித்துள்ளது.
OTP அடிப்படையிலான பணம் எடுக்கும் முறை
"எஸ்பிஐ ஏடிஎம்களில் பணப்பரிவர்த்தனை செய்வதற்கான OTP அடிப்படையிலான பணம் எடுக்கும் முறையானது மோசடி செய்பவர்களுக்கு எதிரான தடுப்பூசியாகச் செயல்படுகிறது. மோசடிகளில் இருந்து உங்களைப் பாதுகாப்பதே எங்களின் முதன்மையான முன்னுரிமையாக இருக்கும்" என்று எஸ்பிஐ தனது ட்வீட்டில் தெரிவித்துள்ளது. SBI வங்கி பயன்படுத்தும் OTP முறையிலான பாதுகாப்பு ATM பரிவர்த்தனை அம்சம் உங்களின் பாதுகாப்பை அதிகரிக்கிறது.
அதிகப்படியான புகார்கள் பதிவு
எஸ்பிஐ முதன்முதலில் OTP சரிபார்க்கப்பட்ட ஏடிஎம் பரிவர்த்தனையைக் கடந்த 2020 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தியது. இது மோசடி பரிவர்த்தனைகளைக் குறைக்கும் நோக்கத்துடன் அறிமுகம் செய்யப்பட்டது. குறிப்பாக அரசு ஆதரவு கடன் வழங்குபவரிடம் அதிகப்படியான புகார்கள் பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து எழுந்த கவலையின் காரணமாக இது அறிமுகம் செய்யப்பட்டது. புதிய செயல்பாட்டில், வாடிக்கையாளர்கள் வங்கியில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் OTP பெறுவார்கள்.
ATMல் இருந்து பணம் எடுக்க முடியும்
பரிவர்த்தனையை அங்கீகரிக்கத் தேவையான சரியான OTP-யை வாடிக்கையாளர் உள்ளிட்டால் மட்டுமே ATMல் இருந்து பணம் எடுக்க முடியும். இந்த செயல்முறை ஆன்லைன் ஷாப்பிங்கைப் போன்றது, இதில் வாடிக்கையாளர்கள் பரிவர்த்தனையைச் செயல்படுத்த வங்கி OTPகளை உள்ளிட வேண்டும். OTP, அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனைகளைத் தடுக்கத் தேவையான கூடுதல் பாதுகாப்பு அடுக்குகளைக் கொண்டுவருகிறது.
ஏடிஎம் பரிவர்த்தனைகள்
தற்போதைய நிலவரப்படி, SBI வாடிக்கையாளர்கள் வேறொரு வங்கியின் ஏடிஎம்மில் இந்த வசதியைப் பயன்படுத்த முடியாது, ஏனெனில் இந்த செயல்பாடு தேசிய நிதி மாற்றத்துடன் (NFS) ஒரு நிறுவனத்தில் உருவாக்கப்படவில்லை. இது நாட்டின் மிகப்பெரிய இயங்கக்கூடிய ஏடிஎம் நெட்வொர்க் ஆகும். தற்போது, NFS நிறுவனம் 95 சதவீதத்திற்கும் அதிகமான உள்நாட்டு வங்கிகளுக்கு இடையேயான ஏடிஎம் பரிவர்த்தனைகளை நிர்வகிக்கிறது.
அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனைகள்
இருப்பினும், அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், பிற வங்கிகளும் OTP அடிப்படையிலான சரிபார்ப்புச் செயல்முறையைச் சேர்க்கலாம், இதனால் ATM இல் பணம் எடுக்கும் செயல்முறை முன்னெப்போதையும் விட பாதுகாப்பானதாக மாறியுள்ளது. உண்மையில் வங்கியின் இந்த பெரும் முயற்சி பாராட்டப்பட வேண்டிய ஒன்று, காரணம் SBI வங்கியின் கீழ் மட்டும் இந்தியா முழுவதும் சுமார் 45 கோடி பயனர்கள் தங்களின் பணப் பரிவர்த்தனைகளை 22,000 கிளைகள் மூலம் செயல்படுத்தி வருகிறது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470