Home
News

கொரனாவிற்கு பெரும் சவக்குழிகள்! ஈரானின் செயற்கைக்கோள் புகைப்படம்..

மாக்சரின் புதிய செயற்கைக்கோள் படங்கள் மூலம் ஈரானிய அதிகாரிகள் கோம் பகுதியில் ஏராளமான கல்லறைகளை தோண்டி வைத்திருப்பது வெளி உலகிற்கு தெரியவந்துள்ளது. நாட்டில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் இந்த ஏற்பாடு என ஊடக அறிக்கைகள் கூறுகின்றன.

கல்லறைகள் மிகவும் பரந்து

இந்த கல்லறைகள் மிகவும் பரந்து விரிந்துள்ளன என்று குறிப்பிட்டுள்ள வாஷிங்டன் போஸ்ட், அவற்றை விண்வெளியில் இருந்து நீங்கள் காணலாம் எனவும், கொரோனா வைரஸ் ஈரானின் தலைவர்கள் மட்டத்தில் பல உயர்மட்ட மரணங்களை ஏற்படுத்தியது என கூறியுள்ளது.

உட்பட குறைந்தபட்சம் இரண்டு

"இறந்தவர்களில் பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் இராஜதந்திரி மற்றும் உச்ச தலைவரின் மூத்த ஆலோசகர் கூட உள்ளனர். துணை அதிபர் உட்பட குறைந்தபட்சம் இரண்டு டஜன் அதிகாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்." என்று அந்த அறிக்கை கூறியுள்ளது.

கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ் உலகளாவிய தொற்றுநோயாக வகைப்படுத்தப்பட்டுள்ளது, ஆனால் பெரும்பான்மையாக பாதிக்கப்பட்டவர்கள் சீனாவில் உள்ளன. சில விதிவிலக்குகள் இருந்தாலும், பாதிக்கப்பட்ட நாடுகளில் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் நோய்த்தொற்றின் தாக்கம் உள்ளன என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. எடுத்துக்காட்டாக, இத்தாலியில் நாடு தழுவிய தாக்கம் காரணமாக முடங்கியுள்ளது என்று பிபிசி தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் கடந்த சில நாட்களில் எண்ணற்ற நிகழ்வுகள்

உலக நாடுகள் உலகளாவிய கட்டுப்படுத்தும் நடைமுறைகளுடன் விரைவாக முன்னேற உலக சுகாதார அமைப்பு அழைப்பு விடுக்கின்றது. அமெரிக்காவில் கடந்த சில நாட்களில் எண்ணற்ற நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், டிஸ்னிலேண்ட் முதல் தேசிய கூடைப்பந்து சங்கம் வரையிலான நிறுவனங்கள் நிகழ்வுகளை நிறுத்தி வைத்துள்ளன. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பும் ஐரோப்பாவிலிருந்து வரும் பெரும்பாலான விமான பயணங்களை அடுத்த 30 நாட்களுக்கு நிறுத்தி வைத்துள்ளார்.

 தி வாஷிங்டன் போஸ்ட்டிடம்

கொலராடோவில் உள்ள மாக்சர் டெக்னாலஜிஸின் ஒரு பட ஆய்வாளர் தி வாஷிங்டன் போஸ்ட்டிடம் காண்பித்த படத்தில், ஒரு பெரிய சுண்ணாம்பு குவியலை கொண்டுள்ளது தெரியவந்துள்ளது. சுண்ணாம்பு என்பது உடலில் துர்நாற்றம் மற்றும் சிதைவை கட்டுபடுத்த பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு சுண்ணாம்பு பயன்படுத்துவதாக ஈரானிய சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதிகாரிகள் விரைவாக செயல்பட்டு,

ஈரானிய அதிகாரிகள் விரைவாக செயல்பட்டு, தலா 100 கெஜம் (90 மீட்டர்) நீளம் கொண்ட இரண்டு கல்லறை வரிசைகளை உருவாக்கி வருகின்றனர்; இது ஒரு அமெரிக்க கால்பந்து மைதானத்தின் அகலத்தை விட சற்றே குறைவு. போஸ்ட் இந்த கல்லறைகளை "அகழிகள்" என்று வகைப்படுத்தியது. இருப்பினும் அந்த சொல் சமூக ஊடகங்களில் சர்ச்சைக்குள்ளானது.

ஈரானுக்கும் இடையிலான

சமீபத்திய வாரங்களில் ஈரானிய ஊடகங்களால் இந்த கல்லறைகள் மிக நெருக்கமாக கவனிக்கப்படுகின்றன என, ஐரோப்பாவிற்கும் ஈரானுக்கும் இடையிலான வணிக இராஜதந்திரத்தை ஆதரிக்கும் ஒரு ஊடக நிறுவனமான போர்ஸ் & பஜார் நிறுவனர் மற்றும் வெளியீட்டாளரான எஸ்பான்டியர் கூறியுள்ளார்.

அதிகாரிகள் பெஹெஷ்ட்

உள்ளூர் அதிகாரிகள் இரண்டு வாரங்களுக்கு முன்னர் (பிப்ரவரி 25 அன்று) கொரோனா வைரஸுக்கு பதிலளிக்கும் விதமாக அதிகமான கல்லறைகளை கட்டுவார்கள் என்று பேட்மாங்கேலிட்ஜ் கூறியுள்ள நிலையில், இந்த படங்கள் ஆச்சரியமாக இல்லை.


"இந்த புத்திசாலித்தனமான படங்கள் என்ன பிரதிபலிக்கின்றன எனில், உள்ளூர் அதிகாரிகள் பெஹெஷ்ட்-இ மசூமே கல்லறையில் கல்லறைகளை தோண்டி எடுக்கும் அசாதாரண நடவடிக்கையை எடுக்க வேண்டியிருக்கும் மிகவும் சோகமான சூழ்நிலையை குறிப்பிடுகின்றன.‌ கொரோனா மூலம் இறப்பவர்களை சரியான நேரத்தில் அடக்கம் செய்யவே இந்த ஏற்பாடு, "என்று அவர் கூறியுள்ளார்.

Best Mobiles in India

English summary
Satellite Photo Of Iran Shows Huge Number Of Graves For Corona Victims : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X