ஜனவரி 6 ஆம் தேதி இயங்கியது : போட்டுக்கொடுத்த செயற்கைகோள் புகைப்படம்..!
வடகொரியாவின் அணு ஆயுத செயல்பாடுகள் மீது பிற உலக நாடுகள் சந்தேகப்படுவதை உறுதி செய்யும் படியாக செயற்கைகோள் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
சில நிபுணர்களின் கருத்துப்படி சில ஆண்டுகளிலேயே வடகொரியாவின் அணு ஆயுத சோதனை வசதிகளில் கணிசமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது என்பது தெரிய வரும் நிலையில் அதை உறுதி செய்யும் வகையில் வெளியாகியுள்ளது ஒரு செயற்கைகோள் புகைப்படம்..!

ஜனவரி 6 :
வெளியாகியுள்ள செயற்கைகோள் புகைப்படத்தின் மூலம் வடகொரிய அணு ஆலையானது கடந்த ஜனவரி 6-ஆம் தேதி அன்று இயக்கத்தில் இருப்பதை காண முடிகிறது.

ஹைட்ரஜன் குண்டு சோதனை :
வடகொரிய தலைவர்களின் கூற்றுப்படி கடந்த ஜனவரி 6-ஆம் தேதி தான் ஹைட்ரஜன் குண்டு சோதனை நடத்தப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

டிஜிட்டல்க்ளோப் சாட்டிலைட்ஸ் :
இந்த புகைப்படமானது டிஜிட்டல்க்ளோப் சாட்டிலைட்ஸ் (DigitalGlobe satellites) மூலம் எடுக்கப்பட்டுள்ளது.

சந்தேகம் :
நில அதிர்வு ஆய்வு முடிவுகளின் அடிப்படையில், பல விஞ்ஞானிகள் ஹைட்ரஜன் குண்டு சோதனை நடத்தப்பட்டது என்ற கோரிக்கைகள் மீது சந்தேகம் கொள்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஸ்பேஸ்நோ :
பூங்குகியே-ரி அணு சோதனை மையத்தின் (Punggye-ri Nuclear Test Site) பல வகையான செயற்கைகோள் புகைபடங்களை ஆய்வு செய்யும் ஸ்பேஸ்நோ (Spaceknow) தான் இந்த புகைப்படத்தையும் ஆய்வு செய்துள்ளது.

சுரங்கப்பாதை :
ஆய்வின் மூலம் பூங்குகியே-ரி அணு சோதனை மையத்தின் சோதனை சுரங்கப்பாதை நுழைவாயிலில் கட்டுமான செயல்பாட்டைக் காண முடிவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறைக்கப்பார்த்த விடயங்கள் :

மேலும் படிக்க :

தமிழ் கிஸ்பாட் :
மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!


Click it and Unblock the Notifications