அட்டகாசமான சாம்சங் டைசன் இந்தியாவில் அறிமுகம்..!!
ஜூலை மாதம் முதல் கிசுகிசுக்கப்பட்டு வந்த சாம்சங் நிறுவனத்தின் இசட் 3 கருவி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன் படி இந்த கருவியானது இந்தியாவில் அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பம்சங்களை பொருத்த வரை 5 இன்ச் சூப்பர் ஏஎம்ஓஎல்ஈடி டிஸ்ப்ளே, 1.3 ஜிகாஹெர்ட்ஸ் ஸ்ப்ரெட்ரம் எஸ்சி7730எஸ் எஸ்ஓசி பிராசஸர், சாம்சங் நிறுவனத்தின் அல்ட்ரா பவர் சேவிங் மோடு வழங்கப்பட்டுள்ளது. டைசன் இயங்குதளம் கொண்டிருக்கும் இந்த கருவி இந்தியாவில் ரூ.8,490க்கு கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெமரியை பொருத்த வரை 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும், சிறந்த புகைப்படங்களை எடுக்க 8 எம்பி ப்ரைமரி கேமரா மற்றும் 5 எம்பி முன்க்க கேமராவும் வழங்கப்பட்டுள்ளது. ஆன்லைனில் ஸ்னாப்டீல் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனைக்கு வர இருப்பதோடு வோடாஃபோன் பயனாளிகளுக்கு 1 ஜிபி வரை இலவச டேட்டா வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications