நோக்கியாவை பின்னுக்குதள்ளி சாம்சங் சாதனை!

By Super
|
நோக்கியாவை பின்னுக்குதள்ளி சாம்சங் சாதனை!

14 வருடமாக ஆசியாவில் மொபைல்போன் விற்பனையில் முதல் இடம் வகித்து வந்த நோக்கியா நிறுவனத்தை முந்திவிட்டது சாம்சங் நிறுவனம். இந்த செய்தி நிச்சயம் வாடிக்கையாளர்களுக்கு பெரிய பிரம்மிப்பை ஏற்படுத்தும் ஒன்றாக தான் இருக்கும்.

ஏனெனில் மொபைல் தயாரிப்புகள் ஆசியாவில் குறைவாக இருந்த காலத்திலேயே வாடிக்கையாளர்களை மொபைல் வாங்க தூண்டும் அளவிற்கு பல புதிய தொழில் நுட்ப சாதனங்களை கொடுத்தது நோக்கியா நிறுவனம்.

ஆனால் இந்த ஆண்டு துவக்கத்திலேயே 9.2 கோடி மொபைல்போன்களை விற்பனை செய்து சாம்சங், நோக்கியா நிறுவனத்தின் விற்பனையையும் முந்திவிட்டது.

நோக்கியா நிறுவனம் 8.3 கோடி விற்பனையை கொடுத்துள்ளது. இதில் 1.2 கோடி ஸ்மார்ட்போன்களையும், 7.1 குறைந்த விலை மொபைல் மாடல்களையும் விற்பனை செய்துள்ளது. இது நிச்சயம் சாம்சங் நிறுவனம் செய்த பெரிய சாதனை என்று தான் சொல்ல வேண்டும்.

சாம்சங் நிறுவனத்தின் பெரிய வெற்றிக்கு கேலக்ஸி மொபைல் மாடல் ஒரு முக்கிய காரணம். சாம்சங் கேலக்ஸி சிரீஸ் ஸ்மார்ட்போன்களில் இந்நிறுவனம் கொடுத்திருக்கும் அகன்ற திரை வசதி மற்றும் பயன்படுத்துவதற்கு அரிய தொழில் நுட்பங்கள், அதிக வாடிக்கையாளர்களை கவர்ந்து இருக்கிறது.

இந்த முறை துவக்க ஆண்டிலேயே சாம்சங் நிறுவனம் பெரிய சாதனையில் அசத்தி இருக்கிறது. எப்போதும் முதல் இடத்தை தக்க வைத்து கொள்ளும் சாம்சங் நிறுவனம், சாம்சங் நிறுவனத்தின் பலத்த விற்பனை சாதனைக்கு அடுத்ததாக என்ன யுக்தியை கையாளும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது பற்றிய மாற்றங்களை பொருத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X