தீப்பிடித்து எரிந்த சாம்சங் 5ஜி ஸ்மார்ட்போன்: இழப்பீடு தர மறுப்பு.!
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ் 10 ஸ்மார்ட்போன் தீப்பிடித்து எரிந்து நாசமானது. மேலும் இதன் வாடிக்கையாளருக்கு இழப்பீடு தரவும் மறுத்துள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ் 10 ஸ்மார்ட்போன் தீப்பிடித்து எரிந்து நாசமானது. மேலும் இதன் வாடிக்கையாளருக்கு இழப்பீடு தரவும் மறுத்துள்ளது.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சாம்சங் கேலக்ஸி எஸ் 10:
தென்கொரியாவை சேர்ந்த சாம்சங் நிறுவனம் தனது உலகின் விலை உயர்ந்த ஸ்மார்ட்போனை கேலக்ஸி எஸ் 10 என்ற 5ஜி மொபைலை வெளியிட்டது.

தீப்பற்றி எரிந்தது:
இந்த மொபைலை வாங்கிய லீ என்ற வாடிக்கையாளர் மொபைல் திடீரென தீப்பற்றி எரிந்ததாக புகார் கூறியுள்ளார். மேஜை மீது எந்த இடையூறும் இல்லாத நிலையில் வைக்கப்பட்டிருந்த மொபைல் தீப்பற்றி எரிந்தது எனவும் எந்த காரணமும் இல்லாமல் தானாவே தீப்பிடித்துவிட்டது எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

விலை ரூ.83,000:
இதனை விசாரித்த சாம்சங் நிறுவனம் கேலக்ஸி S10 மொபைலின் உள்ளே எந்த கோளாறு ஏற்பட்டு தீப்பிடிக்கவில்லை எனவும் வெளியிலிருந்து ஏதோ தாக்கத்தால் நிகழ்ந்திருக்க வேண்டும் எனவும் பதில் சொல்லியிருக்கிறது. அதுமட்டுமின்றி, 1,200 டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 83,500 ரூபாய்) பணத்தை வாடிக்கையாளருக்குத் திருப்பிக்கொடுக்கவும் மறுத்துவிட்டது.

கேலக்ஸி நோட் 7:
ஏற்கெனவே, மூன்று ஆண்டுகளுக்கு முன் சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 7 (Galaxy Note 7) மொபைல் உலகின் பல இடங்களில் தீப்பற்றியதால், அவை அனைத்தையும் திரும்பப் பெற்றுக்கொண்டது நினைவுகூரத்தக்கது.


Click it and Unblock the Notifications