இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி ஏ3,ஏ5 மற்றும் ஏ7 விரைவில்.!
சாம்சங் நிறுவனத்தின் சாம்சங் கேலக்ஸி ஏ3,ஏ5 மற்றும் ஏ7 ஆகியன விரைவில் இந்தியாவில் வெளியிடப்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்மார்ட்போன் தயாரிப்பு முன்னணி நிறுவனமான சாம்சங் இம்மாத இறுதியில் நடைபெறவுள்ள மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் நிகழ்வில் தனது கேலக்ஸி எஸ்8 மாறும் எஸ்8 பிளஸ் உள்ளிட்ட மாடல்களை அறிமுகப்படுத்தி வெளியிடவுள்ளது.
இத்தகைய நேரத்தில் சாம்சங் தனது கேலக்ஸி ஏ3 ஏ5 மற்றும் ஏ7 ஆகியவற்றை வெளியிடக்கூடுமென தகவல்கள் வெளியாகின்றன.அதுகுறித்த தகவல்கள் கீழே..

சாம்சங் கேலக்ஸி ஏ3,ஏ5 மற்றும் ஏ7:
சாம்சங் நிறுவனத்தின் சாம்சங் கேலக்ஸி ஏ3,ஏ5 மற்றும் ஏ7ஆகிய மாடல் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் விரைவில் வெளியாகக்கூடுமென கூறப்படுகிறது.அவை பல புதிய அம்சங்களை கொண்டிருக்கக்கூடுமெனவும் ஸ்மார்ட்போன் சந்தையில் பேச்சு நிலவுகிறது.

அம்சங்கள்:
சாம்சங் நிறுவனத்தின் புதிய மாடலான இவை ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மல்லோ,ப்ளூடூத்,4ஜி வோல்ட்,வை பை,நீர் புகாத தன்மை,யுஎஸ்பிடைப்சி கனெக்ட்டிவிட்டி,மெட்டல் பிரேம்,3டி கவர் கிளாஸ் ஆகிய அம்சங்களை கொண்டிருக்கக்கூடுமென எதிர்பார்க்கப்படுகிறது.

கலர்:
சாம்சங் காலக்ஸி ஏ 3 ஏ 5 மற்றும் ஏ 7 ஆகியன ப்ளாக் ஸ்கை, ப்ளூ மிஸ்ட், கோல்ட் சாண்ட்,ஆகிய நிறங்களில் வெளிவரக்கூடும் எனவும் எதிர்பார்க்கப்டுகிறது.மேலும் இவற்றின் விலை குறித்து எத்தகைய தகவல்களும் வெளியாகவில்லை.மேற்கண்ட தகவல்களை அந்நிறுவனம் உறுதிப்படுத்தவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க


Click it and Unblock the Notifications