Home
News

ஆப்பிள் மீது மீண்டும் போர் தொடுக்கும் சாம்சங்

By Karthikeyan
ஆப்பிள் மீது மீண்டும் போர் தொடுக்கும் சாம்சங்

ஆப்பிளுக்கும் சாம்சங்கிற்கும் இடையே நடந்த பனிப்போர் சமீபத்தில்தான் முடிவுற்றது. இவர்களுக்கிடையில் இருந்த போரை அமெரிக்க நீதிமன்றம் தீர்த்து வைத்தது. அதாவது சாம்சங், ஆப்பிளுக்கு ஒரு பெரிய தொகைய இழப்பீடாக வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்து.

அதற்கு பின் இந்த இரண்டு நிறுவனங்களுக்கும் இடையே இனி பகைமை வராது என்று பலர் எதிர்பார்த்தனர். ஆனால் தற்போது மீண்டும் ஆப்பிள் மீது சாம்சங் ஒரு புதிய புகாரை அளித்திருக்கிறது.

அதாவது ஆப்பிள் தனது புதிய ஐபோன் 5வை சமீபத்தில் தான் அறிவித்திருக்கிறது. மேலும் இந்த போன் விரைவில் விற்பனைக்கு வர இருக்கிறது. இந்த நிலையில் சாம்சங் ஒரு புதிய விளம்பரத்தை வெளியிட்டிருக்கிறது.

இந்த விளம்பரத்தில் புதிய ஐபோன் 5விற்கும், சாம்சங் கேலக்ஸி எஸ் III போனுக்கும் இடையே உள்ள ஒருசில தொழில் நுட்ப வசதிகளை ஒப்பிட்டு வெளியிட்டிருக்கிறது. அதன் மூலம் கேலக்ஸி எஸ் III போனில் உள்ள ஒருசில தொழில் நுட்பங்களை ஆப்பிள் காப்பியடித்திருப்பதாக இந்த விளம்பரத்தில் வருகிறது.

இதனால் இந்த இரண்டு நிறுவனங்களுக்கும் இடையே உள்ள போர் ஒரு தொடர் கதையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X